சமீபத்திய கட்டுரைகள்

Theme: Palani Municipal Higher Secondary School Centenary Celebration, Dr V Ramaraj (Tamil Nadu Lokayuta) Speech, Image by “The News Park”

மாணவர் மற்றும் குழந்தைகளின் நலனை வலுப்படுத்த முன்னாள் மாணவர் சங்கங்களுக்கும் குழந்தை பாதுகாப்பு குழுக்களுக்கும் சட்ட  அந்தஸ்து வழங்கலாம்....

அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள் சங்கங்கள், பள்ளி மேலாண்மை குழுக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் ஆறு  வகையான குழந்தை பாதுகாப்பு குழுக்கள் ஆகியவற்றுக்கு சட்ட அந்தஸ்து வழங்கும் வகையில் தமிழ்நாடு மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றினால் மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக அமையும்  என்ற கருத்தை டாக்டர் வீ. ராமராஜ் முன்வைத்தார்.
Theme: Voterology, Voterologism, Dr V Ramaraj (Tamil Nadu Lokayuta) Speech, Tiruchirapalli Bar Association, Image by “The News Park”

தேசிய வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் தேர்தல் தீர்ப்பாயங்களும் தேவை.  “எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்கள்” என்பது. வாக்காளரிலிசத்தின் (Voterologism)...

ஒவ்வொரு நாட்டிலும் தேர்தல்கள் நடத்த தனி அமைப்பு இருப்பதைப் போல வாக்காளரியல் கல்வியை வழங்கவும் வாக்காளர்களது உரிமைகளை பாதுகாக்கவும் தேசிய வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் (National Commission for Protection of Voters’ Rights and Education) ஆறு மாதங்களுக்குள் தேர்தல் வழக்குகளை விசாரித்து முடிக்க சிறப்பு தேர்தல் தீர்ப்பாயங்களும் அமைக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம், வாக்காளர் ஆணையம், தேர்தல் தீர்ப்பாயம் ஆகியவற்றை தேர்தல் நிறுவனங்கள் (Election Authorities) என வகைப்படுத்தி அவற்றிற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். ஜனநாயகத்தின் தூண்களான சட்டம் இயற்றும் அமைப்புகளும் அரசும் நீதித்துறையும் உள்ளதை போல தேர்தல் நிறுவனங்களும் ஜனநாயகத்தின் முக்கியமான தூணாகும் என ராமராஜ் தெரிவித்தார்.

ஊழலை ஒழிப்பதற்கான முதல் படி வாக்கு, வாக்காளர்கள் மற்றும் தேர்தல்களில் இருந்து ஊழலை ஒழிப்பதாகும். – தமிழ்நாடு லோக்...

ஊழல் இல்லாத நிர்வாகம் மற்றும் உலக அமைதிக்கான அடித்தளம் வாக்காளர் விழிப்புணர்வு ஆகும். வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்கள் குறித்து அனைவரும் படித்து அறிந்து கொள்ளும் வகையில் வாக்காளரியல் (Voterology) கல்வியை பள்ளி கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. "எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்கள்" என்பது. வாக்காளரிலிசத்தின் மையக் கருத்தாகும். வாக்காளரியல் கோட்பாடுகளை பரப்புவதே வாக்காளரிலிசத்தின் வேலையாகும் என ராமராஜ் தெரிவித்தார்.
Theme: Central Law College, Salem – Induction Programme, Image by “The News Park”

சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் (Central Law College, Salem) முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா. அறிவு பரவலே...

தமிழகத்தில் முதன்முதலாக நிறுவப்பட்ட தனியார் சட்டக் கல்லூரியான சேலத்தில் உள்ள மத்திய சட்டக் கல்லூரி (Central Law College) கடந்த 1984 ஆம் ஆண்டு பேராசிரியர் திரு R.V. தனபாலன் அவர்களால் நிறுவப்பட்டது. தற்போது பேராசிரியர் திரு R.V. தனபாலன் அவர்களின் மகனும் வழக்கறிஞரும் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் குழுமத்தின் இணை தலைவருமான (Co-Chairman, Bar Council of Tamil Nadu and Pondicherry) திரு பி. சரவணன் கல்லூரி தலைவராக உள்ளார். கடந்த 24 செப்டம்பர் 2025 அன்று சேலம் மத்திய சட்டக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழா குறித்து பத்திரிக்கையில் வெளியான சில செய்தி தொகுப்புகளும் புகைப்படங்களும் இங்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் திரு டி. சரவணன் அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அவரது கல்வி சேவைக்காக வழங்கப்பட வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
Theme: Dr.V.Ramaraj, Tamil Nadu Lokaukta Member/Father of Voterology -speech on Voterology at Government Law College, Namakkal, Image by “The News Park”

அறியாமை, ஊழல் மற்றும் சர்வாதிகாரம் ஆகியன மக்களாட்சிக்கு எதிரான சக்திகளாகும் – தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர்...

"வாக்காளரியல் (Voterology)" என்ற சொல் டாக்டர் வீ. ராமராஜ் (Dr. V. Ramaraj) அவர்களால் உருவாக்கப்பட்டது, மேலும் அவர் வாக்காளரியலை வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்கள் பற்றிய கல்வி என்று என்று வரையறுத்துள்ளார். "வாக்காளரியல்" என்ற சொல் ஆகஸ்ட் 20, 1999 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தால் வெளியிடப்பட்ட தினமணி தமிழ் செய்தித்தாளில் வெளியிடப்பட்டது. 2000 ஆம் ஆண்டில், தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கேற்கும் தன்னார்வ அமைப்புகளின் மாநாடு, அவருக்கு ""வாக்காளரியலின் தந்தை (Father of Voterology)" என்ற பட்டத்தை வழங்கியது. "வாக்காளரியல் (Voterology)" என்பது உண்மையான ஜனநாயகம் மற்றும் உலக அமைதிக்கான பாதை என்று அவர் வலியுறுத்துகிறார். 1999 முதல், "வாக்காளரியல்" ஒரு கல்வித் துறையாக (academic field) அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று அவர் வாதிடுகிறார், மேலும் "வாக்காளரியல்" கல்வி  உண்மையான ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் அமைதிக்கான பாதை என்று வலியுறுத்துகிறார்.

கல்லூரியில் அறிவைத் தேடுங்கள். படிப்பிற்குப் பின்பு அறிவை பரப்புங்கள். ஊழலை ஒழிக்க விழிப்புணர்வுதான் கருவி. லோக் ஆயுக்தா உறுப்பினர்...

மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் போதே இலக்கை தேர்வு செய்து அதற்காக திட்டமிட்டு தொடர்ந்து பணியாற்ற வேண்டும். சரியாக நேரத்தை திட்டமிட்டு தொடர்ச்சியாக பணியாற்றுவதன் மூலமே எண்ணிய இலக்கை அடைய முடியும். சமுதாயத்தில் வெற்றியாளர்களுக்கு விடுமுறை கிடையாது என்பதையும் முயற்சி கைவிட்டாலும் முயற்சியை நாம் கைவிடக்கூடாது என்பதையும் மனதில் கொண்டு மாணவர்கள் செயல்பட வேண்டும் என்று ராமராஜ் மாணவர்களை கேட்டுக் கொண்டார்.
Theme: Importance of old students’ associations, Image by “The News Park”

வாழ்க்கையில் வெற்றி பெற வயது தடையல்ல. 46 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் கூட்டத்தில் லோக் ஆயுக்தா...

வாழ்க்கையில் வெற்றி பெற வயது தடையல்ல. 46 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்த முன்னாள் மாணவர்கள் கூட்டத்தில் லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் கருத்து. லோக் ஆயுக்தா என்றால் ஊழல் ஒழிப்பு, லோக்...

முதல் படைப்பு: யாரிடம் பேசும்போதும் நாம் கவனமுடன் இருக்க வேண்டும்.  இரண்டாவது படைப்பு: குதிரையிடம் பேசிய வார்த்தைகளை கவனியுங்கள்! 

பிரச்சினைகளை, பிரிவினைகளை தோற்றுவிக்கக் கூடியவர்களின் சொற்களை கவனத்தில் கொள்ளாதீர். இரண்டு நபர்கள் சந்தித்து கொள்கிறார்கள் ஒருவர்: நீ எங்கே வேலை செய்கிறாய்? மற்றவன்: இன்னாரின் நிறுவனத்தில். அவன் : எவ்வளவு சம்பளம் தருகிறார்கள்? இவன்:...
Theme: don’t say as no time, Image by “The News Park”

“எனக்கு நேரமில்லை. வாழ்க்கை முடியும் தருணத்தில் நேரத்தை தேடாதீர்” – ஒவ்வொருவரும் ஒரு நிமிடம் செலவு செய்து படிக்க...

வங்கி வரிசையில் மணிக்கணக்கில் நின்ற மனிதன், இப்போது மொபைலில் வினாடிகளில் பணப் பரிமாற்றம் செய்கிறான், ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை. முன்பு வாரங்கள் எடுத்த மருத்துவ பரிசோதனைகள், இப்போது சில மணி நேரங்களில் நடக்கிறது, ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.
Theme: Story shows employers nature, Image by “The News Park”

முதலாளியின் இதயத்தை காட்டும் கதையை படியுங்கள்! சிந்தியுங்கள்!

“எஜமான்! நான் இப்போது இருக்கும் நிலைமையில் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னை ஏன் அவர்கள் விலைக்கு கேட்கிறார்கள்?” என்றது. வியாபாரி அதற்கு “அவர்கள் உன்னை வேலை செய்யச் சொல்ல வாங்கவில்லை. உன்னைக் கொன்று உன் தோலை எடுக்கவே உன்னை விலைக்குக் கேட்கிறார்கள்” என்றான். வியாபாரி சொன்ன பதிலைக் கேட்டதும் மாட்டிற்கு கண்களில் நீர் வர தொடங்கியது. “எஜமான்! நீங்கள்