சமீபத்திய கட்டுரைகள்

Theme: Understanding Life -Dr V Ramaraj, Tamil Nadu Lokayukta, Image by “The News Park”

மாணவர்களும் இளைஞர்களும் வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ்

வாக்காளரியல் என்றால் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்ல, சர்வதேச அளவில் தேர்தல் சட்டங்களை ஏற்படுத்துவதும் அரசாங்கத்தின் பிரிவுகளான நாடாளுமன்றம் செயல் துறை அரசாங்கம் மற்றும் நீதித்துறை போல தேர்தல் நடத்தும் அமைப்புகளுக்கு நான்காவது அரசின் நான்காவது   பிரிவாக அரசியல் அந்தஸ்து வழங்குவதும் அவசியமானதாகும் என்று டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார்.
Theme: Demand of fourth and fifth branches in Constitutional Law -Dr V Ramaraj, Tamil Nadu Lokayukta, Image by “The News Park”

தேர்தலுக்குப் பின்னரும் ஜனநாயகத்தை  பாதுகாக்கும் பொறுப்பு வாக்காளர்களுக்கு உள்ளது- லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் கருத்து

மனித உரிமைகளை பாதுகாக்க நல்லாட்சி அவசியமானது. நல்லாட்சிக்கு அடிப்படையானது ஜனநாயகம். தேர்தலுக்குப் பின்னரும் உண்மையான ஜனநாயகத்தை  பாதுகாக்கும் பொறுப்பு வாக்காளர்களுக்கு உள்ளது. தேர்தல்களில் வாக்களிப்பதுடன் வாக்காளர்களின் கடமை முடிந்து விடுவதில்லை. தேர்தலுக்குப் பின்னரும் அரசாங்கத்தின் செயல்பாடுகளையும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேலைகளையும் கண்காணிக்க வேண்டியது வாக்காளர்களின் பணியாகும்.
Theme: Demand of fourth and fifth branches in Constitutional Law -Dr V Ramaraj, Tamil Nadu Lokayukta, Image by “The News Park”

வாக்குரிமையைம் மனித உரிமைகளையும் பாதுகாக்க உலக அரசியல் அமைப்புச் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்- லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர்...

மனித உரிமைகள், மனித உரிமைகள் சட்டம், மனித உரிமைகள் சர்வதேச சட்டம் போன்ற தலைப்புகளில் இந்தியாவில் பலர் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்கள். ஆனால், இந்தியாவிலேயே முதலாவதாக மனித உரிமை  நீதிமன்றங்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டத்தை பெற்றவர் தற்போதைய தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ  ராமராஜ் ஆவார். மனித உரிமை நீதிமன்றங்கள் பெயரளவில் மட்டுமே இயங்கி வருவதை அவரது ஆய்வேடு வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததது என தலைமை உரையில் கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.
Theme: Honorary Doctorate (D.Sc.,) -Dr V Ramaraj, Tamil Nadu Lokayukta, Image by “The News Park”

தேர்தல் சீர்திருத்த தத்துவவியலாளர் (Philosopher) சமகாலத்திய தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்! சென்னை சவீதா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர்...

தேர்தல் தொடர்பான அதிகாரங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இல்லாமல் தேர்தல்களை நடத்துவதற்கு ஒரு அமைப்பும் வாக்காளர்களின் உரிமைகளுக்கு ஒரு அமைப்பும் அரசியல் கட்சிகளை நெறிப்படுத்த ஒரு அமைப்பும் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் முடிவு குறித்த வழக்குகளை தீர்க்கும் வகையிலான ஒரு அமைப்பும் இருக்க வேண்டும்.  என்பது உள்ளிட்ட பத்து கொள்கைகளை டாக்டர் வீ. ராமராஜ் உருவாக்கியுள்ளார். வாக்காளரியல் ஏன் தனிக் கல்வித் துறையாக இருக்க வேண்டும் என்பதற்கு பத்து காரணங்களையும் இந்த படிப்பில் படிக்க வேண்டிய பத்து பாடங்களையும் அவர் விளக்கியுள்ளா
Theme: Honorary Doctorate (D.Sc.,) -Dr V Ramaraj, Tamil Nadu Lokayukta, Image by “The News Park”

‘வாக்காளரியலின் தந்தை’ (Father of Voterology) டாக்டர் வீ. ராமராஜுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் (D.Sc.,)

சென்னை, சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் (SIMATS நிகர்நிலை பல்கலைக்கழகம்), 2026 மார்ச் 18 அன்று, 'வாக்காளரியலின் தந்தை' (Father of Voterology) டாக்டர் வீ. ராமராஜுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் (D.Sc.) வழங்கிச் சிறப்பித்தது.
Theme: Voterology, Government Arts College, Krishnagiri -Dr V Ramaraj, Tamil Nadu Lokayukta Speech, Image by “The News Park”

வாக்காளரியலில் முதுகலை (எம்.ஏ.,), இளங்கலை (பி.ஏ.,) பட்டப்படிப்பில் ஒரு தேர்வுத்தாளாகவும் பள்ளிகளில் ஒரு பாடமாகவும் வாக்காளரியல் அறிமுகப்படுத்த வேண்டும்.

வாக்குகள், வாக்காளர்கள் மற்றும் தேர்தல்கள் பற்றிய முறையான, அறிவியல்பூர்வமான கல்வியே வாக்காளரியலாகும் (Voterology). உண்மையான ஜனநாயகத்தைப் பாதுகாப்பதையும், நல்லாட்சி, உலக அமைதிக்கான வழியையும் நோக்கமாகக் கொண்ட வாக்காளரியலின் கோட்பாடுகளை பொதுமக்களுக்கு பரப்புவதே வாக்காளரிலிசம் (Voterologism) என்று கருத்தரங்கில் பேசிய தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ்   தெரிவித்தார்.
Voterology, Government Law College, Namakkal -Dr V Ramaraj (Tamil Nadu Lokayukta Speech, Image by “The News Park”

தேர்தல் நிர்வாக அமைப்புகள் சட்டமன்றம், செயல் துறை அரசாங்கம் மற்றும் நீதித்துறைக்கு சமமான அரசியலமைப்பு அந்தஸ்துடன் சுதந்திரமானதாக...

கூகுளில் ஓட்டராலஜி ராமராஜ் (Voterology Ramaraj) எனத் தேடினால் அவர் வாக்காளரியலின் தந்தை என கூகுள் மட்டுமல்லாது இணையதளங்களும் செயற்கை நுண்ணறிவு தளங்களும் தெரிவிக்கின்றன. பல கல்வி பிரிவுகளின் தந்தைகளாக வெளிநாட்டவர்களின் பெயர்களையே நாம் படிக்கிறோம். ஆனால், வாக்காளரியல் பாடத்தையும் வாக்காளரிலிச தத்துவத்தையும் அறிமுகம் செய்த லோக் ஆயுக்தா ராமராஜ் வாக்காளரியலின் தந்தையாக விளங்குவது தமிழகத்துக்கு பெருமையாகும் என கருத்தரங்கில் பேசிய நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் தலைவர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
Theme: Voterology, Vovernment Arts College, Coimbatore -Dr V Ramaraj (Tamil Nadu Lokayuta Speech, Image by “The News Park”

சர்வதேச வாக்காளரியல் ஆய்வு இதழ் தொடக்கம் – அரசியலமைப்பு மற்றும் வாக்காளரியல் கல்வியை வழங்குவது அரசின் கடமையாக அரசியலமைப்பில்...

கடந்த 30 ஆண்டுகளாக  வாக்காளரியலை தனிகல்வி துறையாக மாற்ற பணியாற்றி  வரும் வீ. ராமராஜ் வாக்காளரியலின் தந்தையாக அங்கீகரிக்கப்பட்டு இருப்பது தமிழகத்திற்கு பெருமையாகும். புதிதாக ஒரு குறிப்பிட்ட கல்வி பிரிவை ஏற்படுத்துவது அதனை கற்பது ஆராய்ச்சி செய்வது மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவது சமூக முன்னேற்றத்திற்கு உதவக்கூடியது. இந்த வகையில் வாக்காளரியல் கல்வியானது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் எதிர்காலத்தில் பாடமாக இருக்கும் தலைமை உரையில் பேராசிரியர் பி கனகராஜ் தெரிவித்தார்.
Theme: Voterology, Vpterology, Father of Voterology -Dr V Ramaraj (Tamil Nadu Lokayuta Speech, Image by “The News Park”

எதற்காக வாக்காளரியல் கல்வி தனி துறையாக கற்பிக்கப்பட வேண்டும்?

1996 ஆம் ஆண்டில் வாக்காளரியல் (Voterology), வாக்காளரிலிசம் (Voterolism) என்ற வார்த்தைகளை வடிவமைத்து அவற்றை வரையறை செய்து அதற்கான கொள்கைகளை உருவாக்கியவர் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தற்போதைய உறுப்பினரான டாக்டர் வீ. ராமராஜ்.   அரசியல் அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட பல கல்வி பிரிவுகளின் தந்தைகளாக வெளிநாட்டவர்களை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், வாக்காளரியல் பாடத்தையும் வாக்காளரிலிச தத்துவத்தையும் அறிமுகம் செய்த டாக்டர் வீ. ராமராஜ் வாக்காளரியலின் தந்தையாக விளங்குவது தமிழகத்திற்கு பெருமையாகும்
Theme: Victims of Crimes -Dr V Ramaraj (Tamil Nadu Lokayuta Speech, Image by “The News Park”

குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கான நீதிச் சட்டம் தற்போதைய தேவையாகும் – தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ்...

இதன் மூலம் விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களும் அனைத்து வழக்கறிஞர்களும் பலனடைவார்கள் என்று ராமராஜ் தெரிவித்தார்.  இதற்கான ஆய்வு அறிக்கை இந்திரா காந்தி பல்கலைக்கழகத்தில் தாம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.