செய்திச்சோலை
நாட்டு நடப்பு
தொழில்/ அறிவியல்
பக்கம்
பூங்கா
களம்
தொலைநோக்கு
சமீபத்திய கட்டுரைகள்
சர்வதேச வாக்காளரியல் ஆய்வு இதழ் தொடக்கம் – அரசியலமைப்பு மற்றும் வாக்காளரியல் கல்வியை வழங்குவது அரசின் கடமையாக அரசியலமைப்பில்...
கடந்த 30 ஆண்டுகளாக வாக்காளரியலை தனிகல்வி துறையாக மாற்ற பணியாற்றி வரும் வீ. ராமராஜ் வாக்காளரியலின் தந்தையாக அங்கீகரிக்கப்பட்டு இருப்பது தமிழகத்திற்கு பெருமையாகும். புதிதாக ஒரு குறிப்பிட்ட கல்வி பிரிவை ஏற்படுத்துவது அதனை கற்பது ஆராய்ச்சி செய்வது மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவது சமூக முன்னேற்றத்திற்கு உதவக்கூடியது. இந்த வகையில் வாக்காளரியல் கல்வியானது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் எதிர்காலத்தில் பாடமாக இருக்கும் தலைமை உரையில் பேராசிரியர் பி கனகராஜ் தெரிவித்தார்.
எதற்காக வாக்காளரியல் கல்வி தனி துறையாக கற்பிக்கப்பட வேண்டும்?
1996 ஆம் ஆண்டில் வாக்காளரியல் (Voterology), வாக்காளரிலிசம் (Voterolism) என்ற வார்த்தைகளை வடிவமைத்து அவற்றை வரையறை செய்து அதற்கான கொள்கைகளை உருவாக்கியவர் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தற்போதைய உறுப்பினரான டாக்டர் வீ. ராமராஜ். அரசியல் அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட பல கல்வி பிரிவுகளின் தந்தைகளாக வெளிநாட்டவர்களை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், வாக்காளரியல் பாடத்தையும் வாக்காளரிலிச தத்துவத்தையும் அறிமுகம் செய்த டாக்டர் வீ. ராமராஜ் வாக்காளரியலின் தந்தையாக விளங்குவது தமிழகத்திற்கு பெருமையாகும்
குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கான நீதிச் சட்டம் தற்போதைய தேவையாகும் – தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ்...
இதன் மூலம் விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களும் அனைத்து வழக்கறிஞர்களும் பலனடைவார்கள் என்று ராமராஜ் தெரிவித்தார். இதற்கான ஆய்வு அறிக்கை இந்திரா காந்தி பல்கலைக்கழகத்தில் தாம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
வாக்காளரியல் என்றால் என்ன? அதன் கொள்கைகள் எவை? – வீ. ராமராஜ், தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர், இளம்பரிதி,...
வாக்காளரியலையும் அதன் கொள்கைகளையும் வரையறுத்து வாக்காளரியலை தனி கல்வியாக உருவாக்க வேண்டும் என்று கடந்த 1996 முதல் ராமராஜ் அவர்கள் வலியுறுத்தி வருகிறார். புகழ் பெற்ற மேற்கத்திய அரசியல் தத்துவங்களையும் இந்திய அரசியல் சிந்தனைகளையும் போல பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி கிராமத்தில் பிறந்த முனைவர் ராமராஜ் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள வாக்காளரியல் கோட்பாடுகள் தற்போது உலகில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. அவரது வாக்காளரியல் தத்துவம் விரைவில் உலகம் முழுவதும் பல்கலைக்கழகங்களில் பாடமாக்கப்படும் காலம் அருகாமையில் உள்ளது என்று கருத்தரங்கில் பேசிய மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி நம்பிக்கை தெரிவித்தார்.
வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்களில் ஏற்படும் ஊழல் சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் – தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர்...
சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் அறிவியல் பாடப்பிரிவு தோன்றிய போது பல நாடுகளில் மன்னர் ஆட்சியும் பல நாடுகளில் மக்களாட்சியும் இருந்தது. தற்போது பெரும்பாலான நாடுகளில் மக்களாட்சி நடைபெறுவதால் அரசியல் அறிவியலில் இருந்து தனியாக வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்கள் குறித்து படிப்பதும் ஆய்வு செய்வதும் வாக்காளரியல் (Voterology) ஆகும். "எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்கள்" (‘voters above all else') என்ற முழக்கத்துடன் வாக்காளரியல் கோட்பாடுகளை பரப்புவதே வாக்காளரிலிசம் (Voteroloigism) என்று டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார்.
மாணவர் மற்றும் குழந்தைகளின் நலனை வலுப்படுத்த முன்னாள் மாணவர் சங்கங்களுக்கும் குழந்தை பாதுகாப்பு குழுக்களுக்கும் சட்ட அந்தஸ்து வழங்கலாம்....
அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள் சங்கங்கள், பள்ளி மேலாண்மை குழுக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் ஆறு வகையான குழந்தை பாதுகாப்பு குழுக்கள் ஆகியவற்றுக்கு சட்ட அந்தஸ்து வழங்கும் வகையில் தமிழ்நாடு மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றினால் மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக அமையும் என்ற கருத்தை டாக்டர் வீ. ராமராஜ் முன்வைத்தார்.
தேசிய வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் தேர்தல் தீர்ப்பாயங்களும் தேவை. “எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்கள்” என்பது. வாக்காளரிலிசத்தின் (Voterologism)...
ஒவ்வொரு நாட்டிலும் தேர்தல்கள் நடத்த தனி அமைப்பு இருப்பதைப் போல வாக்காளரியல் கல்வியை வழங்கவும் வாக்காளர்களது உரிமைகளை பாதுகாக்கவும் தேசிய வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் (National Commission for Protection of Voters’ Rights and Education) ஆறு மாதங்களுக்குள் தேர்தல் வழக்குகளை விசாரித்து முடிக்க சிறப்பு தேர்தல் தீர்ப்பாயங்களும் அமைக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம், வாக்காளர் ஆணையம், தேர்தல் தீர்ப்பாயம் ஆகியவற்றை தேர்தல் நிறுவனங்கள் (Election Authorities) என வகைப்படுத்தி அவற்றிற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். ஜனநாயகத்தின் தூண்களான சட்டம் இயற்றும் அமைப்புகளும் அரசும் நீதித்துறையும் உள்ளதை போல தேர்தல் நிறுவனங்களும் ஜனநாயகத்தின் முக்கியமான தூணாகும் என ராமராஜ் தெரிவித்தார்.
ஊழலை ஒழிப்பதற்கான முதல் படி வாக்கு, வாக்காளர்கள் மற்றும் தேர்தல்களில் இருந்து ஊழலை ஒழிப்பதாகும். – தமிழ்நாடு லோக்...
ஊழல் இல்லாத நிர்வாகம் மற்றும் உலக அமைதிக்கான அடித்தளம் வாக்காளர் விழிப்புணர்வு ஆகும். வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்கள் குறித்து அனைவரும் படித்து அறிந்து கொள்ளும் வகையில் வாக்காளரியல் (Voterology) கல்வியை பள்ளி கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. "எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்கள்" என்பது. வாக்காளரிலிசத்தின் மையக் கருத்தாகும். வாக்காளரியல் கோட்பாடுகளை பரப்புவதே வாக்காளரிலிசத்தின் வேலையாகும் என ராமராஜ் தெரிவித்தார்.
சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் (Central Law College, Salem) முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா. அறிவு பரவலே...
தமிழகத்தில் முதன்முதலாக நிறுவப்பட்ட தனியார் சட்டக் கல்லூரியான சேலத்தில் உள்ள மத்திய சட்டக் கல்லூரி (Central Law College) கடந்த 1984 ஆம் ஆண்டு பேராசிரியர் திரு R.V. தனபாலன் அவர்களால் நிறுவப்பட்டது. தற்போது பேராசிரியர் திரு R.V. தனபாலன் அவர்களின் மகனும் வழக்கறிஞரும் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் குழுமத்தின் இணை தலைவருமான (Co-Chairman, Bar Council of Tamil Nadu and Pondicherry) திரு பி. சரவணன் கல்லூரி தலைவராக உள்ளார். கடந்த 24 செப்டம்பர் 2025 அன்று சேலம் மத்திய சட்டக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழா குறித்து பத்திரிக்கையில் வெளியான சில செய்தி தொகுப்புகளும் புகைப்படங்களும் இங்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் திரு டி. சரவணன் அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அவரது கல்வி சேவைக்காக வழங்கப்பட வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
அறியாமை, ஊழல் மற்றும் சர்வாதிகாரம் ஆகியன மக்களாட்சிக்கு எதிரான சக்திகளாகும் – தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர்...
"வாக்காளரியல் (Voterology)" என்ற சொல் டாக்டர் வீ. ராமராஜ் (Dr. V. Ramaraj) அவர்களால் உருவாக்கப்பட்டது, மேலும் அவர் வாக்காளரியலை வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்கள் பற்றிய கல்வி என்று என்று வரையறுத்துள்ளார். "வாக்காளரியல்" என்ற சொல் ஆகஸ்ட் 20, 1999 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தால் வெளியிடப்பட்ட தினமணி தமிழ் செய்தித்தாளில் வெளியிடப்பட்டது. 2000 ஆம் ஆண்டில், தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கேற்கும் தன்னார்வ அமைப்புகளின் மாநாடு, அவருக்கு ""வாக்காளரியலின் தந்தை (Father of Voterology)" என்ற பட்டத்தை வழங்கியது. "வாக்காளரியல் (Voterology)" என்பது உண்மையான ஜனநாயகம் மற்றும் உலக அமைதிக்கான பாதை என்று அவர் வலியுறுத்துகிறார். 1999 முதல், "வாக்காளரியல்" ஒரு கல்வித் துறையாக (academic field) அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று அவர் வாதிடுகிறார், மேலும் "வாக்காளரியல்" கல்வி உண்மையான ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் அமைதிக்கான பாதை என்று வலியுறுத்துகிறார்.
















































