செய்திச்சோலை
நாட்டு நடப்பு
தொழில்/ அறிவியல்
பக்கம்
பூங்கா
களம்
தொலைநோக்கு
சமீபத்திய கட்டுரைகள்
கொஞ்சம் படிங்க! கொஞ்சம் சிரிங்க! நாம் அந்த வாழ்க்கையை சிக்கலாக்க வேண்டும்?
“இவை எல்லாம் நடப்பதற்கு, எவ்வளவு காலம் பிடிக்கும்?“ மீனவன் கேட்டான். “20 அல்லது 25 ஆண்டுகள் ஆகலாம். உன்னுடைய வியாபாரம் பெரிதாகும்போது, உன்னுடைய பங்குகளை விற்று மில்லியன் கணக்கில் சம்பாத்தியம் செய்திட முடியும். பிறகு நீ ஓய்வு எடுத்துக் கொண்டு, கடற்கரை அருகில் சிறிய கிராமத்தில் வாழ்ந்து கொண்டு, கொஞ்சம் மீன்களைப் பிடித்துக் கொண்டு, நிறைய நேரம் தூங்கிக் கொண்டு, குழந்தைகளோடு விளையாடிக் கொண்டு, நண்பர்களோடும், குடும்பத்தினரோடும் நேரத்தை செலவழிக்கலாம்.”
அனைத்து பொருட்களின் விலைகளும் உயரும் அபாயம்?, கூட்டணிகளை கலைக்க தீவிர வேட்டை, ஓபிஎஸ்-க்கு நெருக்கடி? பாமகவில் என்ன நடக்கிறது?...
சட்டசபையில் அதிமுக எம்எல்ஏவாக ஓபிஎஸ் தொடரும் நிலையில் இரட்டை இலை சின்னத்தில் நாடாளுமன்றத்தில் தேர்தலில் அதிமுக வேட்பாளர் போட்டியிட்டபோது இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து சுயேசையாக ஓபிஎஸ் போட்டியிட்டதால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எழுப்பப்பட்டுள்ள கோரிக்கை ஏற்கப்பட்டால் ஓபிஎஸ் இருக்கு தற்போது இருக்கும் பின்னடைவை விட மிக அதிக பின்னடைவு ஏற்படும் என கருதப்படுகிறது
கடந்த பத்து நாட்களில் தொடர் விபத்துக்கள். நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழப்புக்கு யார் காரணம்?
மும்பையில் திவா மற்றும் மும்பிரா ரயில் நிலையங்களுக்கிடையே இரண்டு ரயில்கள் எதிர் எதிர் திசையில் சென்று கொண்டிருந்தன. அதிக கூட்டம் காரணமாக இரண்டு ரயில்களிலும் பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டிருந்தனர். இரண்டு ரயில்களுக்கு இடையே தொங்கிக் கொண்டிருந்த பயணிகளின் பைகள் உரசியதால் ரயிலிலிருந்து 13 பயணிகள் கீழே விழுந்தத விபத்தில் 4 பயணிகள் உயிரிழந்ததுடன் ஆறு பயணிகள் சிகிச்சையில் உள்ளனர்.
கடவுள் எங்கே இருக்கிறார் தெரியுமா? – கணித மேதையின் தீர்ப்பு! படிக்க சிந்தனையை தூண்டும் அரை நிமிட கதைகள்
சுமுகமான முடிவு எட்டாததால், விஷயம் கணிதமேதையிடம் சென்றது. அவர் 3 ரொட்டிகளை கொடுத்தவருக்கு 1 காசும், 5 ரொட்டி கொடுத்தவருக்கு 7 காசுகளும் கொடுத்தார்.1 காசு வழங்கப்பட்டவருக்கு ஷாக் அந்த 1 காசு வழங்கப்பட்டவர், "இது அநியாயம். அவரே எனக்கு 3 காசுகள் கொடுக்க ஒப்புக் கொன்டார்" என அலறினார்.
146 கோடி: உலகில் மக்கள் தொகையில் நம்மதான் முதலிடம், ஆனால் …???
தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP per capita) என்பது ஒரு நாட்டின் தனிநபர் பொருளாதார உற்பத்தியின் அளவீடு ஆகும். இது ஒரு நாட்டின் மொத்த ஜிடிபி-ஐ அதன் மக்கள்தொகையால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது. இந்தியாவின் தனிநபர் ஜிடிபி 2,934 டாலராக தற்போதைய நிலையில் உள்ளது. ஆனால், அமெரிக்காவில் தனிநபர் ஜிடிபி தற்போது 54, 949 டாலர்களாகவும் கனடாவில் 53, 558 டாலர்களாகவும் பிரான்சில் 46, 892 டாலர்களாகவும் உள்ளன.
லோக்சபா எம்.பி., ராஜ்யசபா எம்.பி., வேறுபாடுகள் என்ன? போதிய எம்எல்ஏக்கள் இல்லாமல் அதிமுக இரண்டு ராஜ்யசபா உறுப்பினர்களை வென்றது...
ஒருவேளை ஐந்தாவது வேட்பாளரை திமுக அறிவித்து இருந்தால் இரண்டு நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புகள் இருந்தன. முதலாவதாக, அதிமுகவின் இரண்டாவது வேட்பாளருக்கு போதிய 34 எம்எல்ஏக்கள் ஆதரவு வாக்கு கிடைக்கவில்லை எனில் மீண்டும் கடைசி ஒரு ராஜ்யசபா உறுப்பினருக்கான தேர்தல் நடத்தப்படும் போது பெரும்பான்மை அடிப்படையில் திமுக ஐந்தாவது எம்பி பதவியையும் கைப்பற்றலாம். ஆனால் நடந்தது வேறு
நடனமாடும் தமிழக அரசியல் களம், குழந்தைகள் கமிஷனுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம், 10 மணி நேர...
தமிழக வெற்றிக் கழகத்தை பொறுத்தவரை அதன் தலைவர் விஜய்க்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தாலும் எவ்வாறு வாக்கு கிடைக்கும்? என்பதில் எவ்வித உறுதி தன்மையும் இல்லை. ஒவ்வொரு தேர்தலிலும் பேர வலிமையை சிறப்பாக நடத்தும் பாட்டாளி மக்கள் கட்சிதற்போது குடும்பப் பிரச்சினையால் சிக்கித் தவிக்கிறது. இருப்பினும் அந்த கட்சி பெரும்பாலும் அதிமுக கூட்டணியில் இணையவே வாய்ப்புள்ளது. விஜயின் கட்சி தனித்துப் போட்டியிட்டால் மட்டும் பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் அங்கு நகர வாய்ப்புகள் உள்ளன.
நமது பாரம்பரியமான திண்ணைகளை போற்றுவோம்! ஏன்? என்பதை அறிய ஒரு நிமிடம் படியுங்கள்!
எல்லா நேரமும் எல்லாத் திண்ணைகளும் ஏதோ ஒரு சேதியை சொல்லி கொண்டுதான் இருந்தன. அதில் அமர்ந்துதான் பாட்டிகள், பேரன் பேத்திகளுக்கு கதைகள் சொன்னார்கள். இளையவர்கள் பல்லாங்குழி விளையாடினார்கள். பெரியவர்கள் பரமபதம் ஆடினார்கள், அப்பாக்கள் அரசியல் பேசினார்கள். அம்மாக்கள் ஊர்க்கதை பேசினார்கள். புழக்கடை திண்ணையில் அமர்ந்து புது மணத்தம்பதியர் நிலாவை ரசித்தார்கள். எதிர் திண்ணைகளில் காதலர்கள் சமிக்ஞையில் காதலை வளர்த்தார்கள்.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்தும் கல்லூரிக்கு செல்ல முடியாத சூழல் உள்ளதா? கவலை வேண்டாம். கல்லூரிக்கு செல்லாமலே படித்து இன்ஜினியரிங்...
கல்லூரிக்கு செல்லாமலே இன்ஜினியரிங் பட்டம் பெறுவதற்கும் வழிகள் உள்ளது. முயற்சி பலமுறை என்னை கைவிட்டது உண்டு. ஆனால் முயற்சியை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன் என்பதற்கு ஏற்ப பொறியியல் கல்லூரியில் சேர இயலவில்லை என்று கவலை வேண்டாம். மாற்று வழிகளில் இணையான பட்டங்களை பெற்று வெற்றி பெறலாம்.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு சட்டக் கல்வி, பி.எஸ்சி.,-ல் இத்தனை பிரிவுகளா? பி. ஏ.,பி. காம்., உள்ளிட்ட பட்டங்கள். ...
பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த டாக்டர் வீ. ராமராஜ் அவர்கள் 12 ஆம் வகுப்பில் பள்ளியில் மிக அதிக மதிப்பெண்களை எடுத்த போதிலும் சூழல் காரணமாக கல்லூரியில் இணைய இயலவில்லை. இருப்பினும் தொலைதூரக் கல்வியில் பி. ஏ., பட்டம் பெற்ற பின்னர் அவர் கல்லூரிக்குச் சென்று சட்டக் கல்வியையும் சென்னை பல்கலைக்கழகத்தில் குற்றவியல் துறையிலும் படித்தார். தற்போது பன்னிரண்டு பட்டங்களுக்கு மேல் படித்துள்ள அவர் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராகவும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் இருந்து வந்து, தற்போது அமைச்சர்கள் அனைத்து அரசு அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பில் உறுப்பினராக (at the cadre of high court judge) பணியாற்றி வருகிறார். என்ன படிக்கிறோம் என்பது முக்கியமல்ல என்ன படித்தாலும் திட்டமிட்டு பணியாற்றினால் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு இவராகும்.