Theme: Voters list for Tamil Nadu, Image by “The News Park”

தமிழகத்தில் வாழும் வட இந்தியர்களின் ஆதரவின்றி தமிழக முதலமைச்சராக முடியாதா? அனைவரும் ஒரு நிமிடம் படித்து தெரிந்து கொள்ளுமாறும்...

தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ் கட்சி உட்பட பலரும் வெளி மாநிலத்தவரை தமிழகத்தில் வாக்காளராக பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். வெளிமாநிலத்தவர்கள் வட இந்தியர்கள் எதிர்காலத்தில் தமிழர்களை அடித்து விரட்டுவார்கள். நிலமற்ற அகதிகளாக தமிழர்கள் மாறி அடிமையாகி நாடோடியாக திரிவான். வட இந்தியர்களுக்கு தமிழ்நாட்டில் ஓட்டுரிமை வழங்கினால் தமிழகத்தின் அரசியலையும், அதிகாரத்தையும் தீர்மானிப்பார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். வட மாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால் தமிழக அரசியல் தலைகீழாக மாறிவிடும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாகாலாந்து – அருணாச்சலப்பிரதேசம் – மணிப்பூர் – மிசோரம் ஆகிய மாநிலங்களில் இருப்பதுபோல், இந்திய அரசு – தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவருக்கு வரம்பு கட்டும் வகையில் உள் நுழைவு அனுமதிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்
Theme: Current Affairs, Image by “The News Park”

தாய்ப்பால் ஊட்டாத பெண்கள் பாதிக்கும் மேல்?,கோவிலுக்காக சண்டையிட்டுக் கொள்ளும் இரண்டு நாடுகள், 73 ஆயிரம் வழக்குகளில் நீதிமன்ற ...

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு இடையே அந்த நாடுகளின் தற்போது உள்ள எல்லைப் பகுதியில் சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள இரண்டு கோவில்களின் சுவர்களில் மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்டவற்றின் புராண சிற்பங்கள் நிறைந்துள்ளது. தாய்லாந்திலும் கம்போடியாவிலும் புத்த மதம் வலுவாக உள்ள போதிலும் கம்போடியாவில் இந்து மத சம்பிரதாயங்கள் பலராலும் பின்பற்றப்படுகின்றன. பிரான்சின் ஆதிக்கத்திலிருந்து கம்போடியா விடுதலை பெற்ற போது கம்போடியாவின் எல்லை மறு வரையறை செய்யப்பட்டது.
Theme: Current Affairs + a little story, Image by “The News Park”

* மாணவனிடம் மாட்டிக்கிட்ட அப்பாவி டீச்சர்- சிரிக்க சிந்திக்க அரை நிமிட கதை. * தற்காலிக அரசு ஊழியருக்கு...

கலகப்பாவின் வீடு மற்றும் அவர்கள் அவருக்கு நெருக்கமான உறவினர்களின் வீடுகளில் லோக் ஆயுக்தா போலீஸாரால் சோதனைகள் நடத்தப்பட்டன..  சோதனை முடிவில் நகை பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ரூபாய் 15 ஆயிரத்தில் தற்காலிகமாக வேலை பார்த்து வந்தவரிடம் நான்கு வீட்டுமனைகள்,  24 வீடுகள், 40 ஏக்கர் விவசாய நிலம், கிலோ கணக்கில் வெள்ளி மற்றும் தங்க நகைகளும் கார்களும் இரு சக்கர வாகனங்களும் இருந்துள்ளது.
Theme: Current Affairs, Image by “The News Park”

கட்சிகள் களம் மாறுகின்றனவா? காணாமல் போன 23,000 பெண்களின் நிலைமை என்ன? பல்கலைக்கழகங்களுக்கு விமோசனம் உண்டா?, ட்ரம்ப்.. ட்ரம்ப்.....

விஜயும் சீமானும் வரும் தேர்தலில் தனித்துதான் போட்டியிடுவோம் என தொடர்ந்து கூறி வருகிறார்கள். சீமானுக்கு தனித்து நிற்பதில் ஏதாவது லாபம் இருக்கலாம் என்றாலும் முதன்முதலாக தேர்தலில் களம் இறங்கும் விஜயும் தனித்தே நிற்பது என்ற நிலைப்பாட்டை மேற்கொண்டால் தொடர்ந்து அரசியல் செய்ய முடியுமா? என்ற கேள்வியை அவரது ஆதரவாளர்கள் அவரிடம் முன் வைத்துள்ளதாக தெரிகிறது. இருந்த போதிலும் தனிப்பாதையில் தனக்கு பலனளிக்கும் என்று விஜய் எண்ணுவார் போல. என்ன லாபம் என்பது கட்சியின் தலைமைக்கு தானே தெரியும்
Theme: Thengumaragada, Image by “The News Park”

இயற்கை அழகு சூழ்ந்த தமிழகத்தின் இந்த கிராமத்துக்கு செல்ல அரசு அனுமதி வேண்டும் எந்த ஊர் தெரியுமா?

சாலை மார்க்கத்தில் தெங்குமரஹாடா கிராம நுழைவாயிலாக மாயாறு ஓடுவதால் ஆற்றின் ஒரு கரையில் பேருந்து நிறுத்தப்பட்டு விடும்.  ஆற்றை  பரிசல் மூலமாக கடந்து சிறிது தூரம் நடந்து இந்த கிராமத்தை அடைய முடியும்.  எஸ்யூவி கார், ஜீப் மூலமாக தண்ணீரின் குறுக்கே வாகனத்தை ஒட்டி   ஆற்றை கடந்து   கிராமத்தை அடையலாம்.  இந்த கிராமத்தில் விளையும் பொருட்களை ஆற்றில் லாரிகளை ஓட்டி எடுத்துச் செல்கிறார்கள். முதலைகள் அதிகமாக உள்ள மாயாற்றில் எப்போது நீர்வரத்து அதிகமாக இருக்கும் எப்போது குறைந்து காணப்படும் என்பது அந்த உள்ளூர் மக்களாலே கணிக்க  முடியாததாக உள்ளது.   ஊருக்கும் வனப்பகுதிக்கும் இடையேயுள்ள சுமார் 50 மீட்டர் நீளமுள்ள   மாயாற்றில் மழைக்காலங்களில் தண்ணீர் அதிகமாக செல்லும் போது மக்கள்   ஊருக்குள்ளேதான் முடங்கிக் கிடக்க வேண்டும்.
Theme: Story of Dr Muthulakshmi + Fate of love and friendship, Image by “The News Park”

காதல் கணவருக்கு நிபந்தனை விதித்து திருமணம் செய்த இந்தியாவின் முதல் பெண் மருத்துவர், ஆண்கள் படித்த கல்லூரியில்...

நம் கிட்ட பேசினால் மனசுக்கு நிம்மதியாக இருக்கு என்று சொல்லுவார்கள். நாம் என்ன சொன்னாலும் செய்வதற்கு தயாராக இருப்பார்கள். வாழ்க்கை நெறியிலும் இதை எல்லாம் செய்யாதே. இது நல்லதல்ல என்று சொன்னால் கருத்துடன் கேட்பார்கள். கேட்டபடி நடப்பார்கள். அவர்கள் வீட்டில் என்ன நடந்தாலும் நம்மிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுவார்கள். நம்மை பார்க்காமல்  உறங்கப் போக மாட்டார்கள். அவ்வளவு அதிக பாசப்பிணைப்பு இருக்கும். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்  பேசிக் கொண்டே இருப்பார்கள்.  நமக்கு அதிகம் முக்கியத்துவம் தருவார்கள்.
Theme: Love, Image by “The News Park”

ஒரு பெண்ணின் காதல் எப்போது தோற்று போகிறது தெரியுமா? செழியன் குமாரசாமி அவர்களின் வலைதளப்பதிவு

" நீ ரொம்ப அழகா இருக்க.... நீ சிரிச்சா அப்படி இருக்கு. உன் உடை அப்படி இருக்கு." இது போன்ற வார்த்தைகளில் காதல் என்று நம்பி ஏமாறும் பெண்களே அதிகம். இப்போதுலாம் முகநூல் இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளங்களில் நிறைய பெண்கள் நிறைய போட்டோ போடுறாங்க. நிறைய நண்பர்களை இணைகிறார்கள் இதற்கெல்லாம் காரணம் நீங்க அழகா இருக்கீங்க என்று வரும் வார்த்தைகளை ரசிக்கத்தான்.
Theme: Thoughts, Image by “The News Park”

நாம் நாத்திகரா? ஆத்திகரா? என்பது முக்கியமில்லை + ஹோட்டலில் ரூம் தரவில்லை என்பதற்காக…

மழை எவ்வாறு பெய்கிறது இது ஒரு கேள்வி. படிப்பறிவில்லாத  ஒரு ஆத்திகரை கேட்டால்  மேலிருந்து ஆண்டவன் குளிக்கிறான் அதுதான் மழை. எல்கேஜி மாணவனை கேட்டால் வானத்துல தேங்கி இருக்கிற தண்ணீர்பொத்துக் கொண்டு ஊத்துகிறது என்பான். பத்தாம் வகுப்பு மாணவனிடம் கேட்டால் கடல் நீர் ஆவியாகி மேலே சென்று மழையாக பொழிகிறது என்பான். ஒரு கல்லூரி மாணவனுக்கு இந்த விளக்கம் போதாது. அதுவே ஆராய்ச்சி மாணவனாக இருந்தால் பட்டதாரி மாணவனுக்கு சொன்ன விளக்கமும் போதுமானதாக இராது .
Theme: Self Development Thoughts, Image by “The News Park”

கிணற்றைதான் விற்றேன், நீருக்கு பணம் தர வேண்டும் என்ற வழக்கறிஞரின் கேள்விக்கு.., பில்கேட்சை விட பணக்காரர் யார் தெரியுமா?...

நண்பர் ஒருவர் நாட்டுப் பசு மாடு வாங்க வேண்டும் என நினைத்தார். பசுவைப் பற்றி முழுவதும் அறிந்த ஒருவரை தேடிப்பிடித்து, பசு வாங்குவதற்கான நல்ல நாள், நேரம், சகுனம் எல்லாம் பார்த்து, மாட்டினுடைய நிறம், அதனுடைய சுழி, அதனுடைய கொம்பு அமைப்பு என எல்லாவற்றையும் கவனித்து கடைசியில் பசுவும் வாங்கினார். அவர் எதிர்பார்த்ததை விட பாலும் நிறையவே கிடைத்தது. ஆனால்,
Theme: Human Rights Courts, Image by “The News Park”

மனித உரிமைகள் கமிஷனை பற்றி பெரும்பாலும் தெரியும். உங்கள் மாவட்டத்திலேயே உள்ள மனித உரிமை நீதிமன்றத்தை பற்றி தெரிந்துள்ளீர்களா?

ஆணையங்களைப் போல் அல்லாமல் தண்டனை வழங்கும் அதிகாரங்களைக் கொண்ட மனித உரிமை  நீதிமன்றங்களில் மனித உரிமை மீறல் வழக்குகள் அதிகம் பதிவாகாமல் இருப்பதற்கு என்ன காரணங்கள் என்பது   கவனிக்கத்தக்கதாகும்.  முதலாவதாக, மனித உரிமை நீதிமன்றங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இல்லை எனலாம்.  இரண்டாவதாக மனித உரிமை மீறல் வழக்குகளை பதிவு செய்து விசாரிக்க மாவட்ட அளவில் தனித்த காவல் அமைப்புகள் இல்லை என்பதாகும்.  மூன்றாவதாக, மனித உரிமை நீதிமன்றங்களின்  நடைமுறைகள் தெளிவாகவும் மக்கள் எளிதில் அணுகும் வகையிலும் உள்ளதா? .....