உலக பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாடினால் போதுமானதா?
ஒவ்வொரு ஆண்டும் உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டால் மட்டும் போதுமானது அல்ல. ஒவ்வொரு மாதமும் பிரதம அமைச்சரும் மத்திய அரசின் ஒவ்வொரு துறை அமைச்சர்களும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களையும் அழைத்து சந்திப்பு ஒன்றை நடத்த வேண்டும். நடுநிலை அல்லது ஆளுங்கட்சி ஆதரவு அல்லது எதிர்க்கட்சி ஆதரவு செய்தியாளர் என்ற பாரபட்சத்தை பார்க்காமல் அனைவரின் கேள்விகளுக்கும் இந்த சந்திப்பில் பதில்களை வழங்க வேண்டும்.
என்று முடியும் போக்குவரத்து நெரிசல்கள்?
வாழும் இடத்திலிருந்து வேலை பார்க்கும் இடத்திற்கு தினமும் பயணிக்க போக்குவரத்து நெரிசல் கடுமையான சிரமங்களை தருகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு மக்களுக்கு அதிக நேரம் செலவாவதோடு போக்குவரத்து நெரிசலால் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளின் செலவும் அதிகரிக்கிறது. உழைப்புக்கு செலவிடப்பட வேண்டிய மனிதனின் நேரம் போக்குவரத்து நெரிசலால் பயண நேர அதிகரிப்பின் காரணமாக வீணடிக்கப்படுகிறது. இதன் காரணமாக மனித உழைப்பும் எரிபொருளும் வீணாகி பொருளாதாரத்தை பாதிக்க கூடியதாக போக்குவரத்துக்கு நெரிசல் அமைகிறது
தேவை மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம்
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சென்னையில் பசுமை தீர்ப்பாயம் செயல்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரும் சென்னைக்குச் சென்று பசுமை தீர்ப்பாயத்தில் புகார் தாக்கல் செய்து வழக்கு நடத்துவது என்பது சிரமமான ஒன்றாகும். நீதி எப்போதுமே எளிதில் அணுகக் கூடியதாக இருந்தால்தான் மக்கள் அதனை பெறுவதில் சிரமம் இருக்காது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இதனை மனதில் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தை (district environmental protection commission) அமைக்க தகுந்த சட்டத்தை இயற்றி அமல்படுத்துவது தற்போதைய தேவையாக உள்ளது.
சின்னஞ்சிறிய மூன்று நாடுகள் – 121 ஏக்கரில் ஒரு நாடா?
121 ஏக்கர் பரப்பளவு மட்டுமே கொண்ட கிறிஸ்துவ மத - கத்தோலிக்கர்களின் தலைமையகமான வத்திக்கான் சிட்டி (Vatican City) உலகத்தில் உள்ள நாடுகளிலேயே மிகவும் சிறிய நாடாகும். 2023 ஆம் ஆண்டு கணக்கின்படி கணக்கெடுப்பின்படி இந்த நாட்டின் குடிமக்கள் எண்ணிக்கை 764 மட்டுமே.
ஊராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள், அலுவலர்கள் மீதான புகார்களை விசாரிக்கும் ஆம்புட்ஸ்மேன்
செய்ய வேண்டிய பணியை செய்யாமல் இருத்தல் (omission) மற்றும் செய்யக்கூடாத பணியை செய்தல் (commission), ஊழல் (corruption), சீர்கேடான நிர்வாகம் (maladministration) மற்றும் முறைகேடுகள் (scam) மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவருக்கு (லோக்கல்பாடி ஆம்புட்ஸ்மேன் அமைப்புக்கு) அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது
தமிழக நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் – விரிவான விவரங்களுடன்.
விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள “நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு, மெட்ராஸ் உயர்நீதிமன்றம், தமிழ்நாடு சார்நிலை நீதித்துறை பணியில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள் - அறிவிக்கை எண் 75 முதல் 171 வரை, நாள் 28 -04- 2024 என்ற அறிவிக்கையை பதிவிறக்கம் (Common Instructions to the candidates- (28th April 2024 – pdf file) செய்து முழுமையாக படித்து விவரங்களை தெரிந்து கொள்வது அவசியமாகும்.
இறையாண்மை என்றால் என்ன?
இருபத்தோராம் நூற்றாண்டில் இறையாண்மை மற்றும் அதன் உண்மையான அதிகாரங்கள் பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்டு வருகின்றது. உதாரணமாக உலகமயமாக்கல், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு அமைப்புகள், மனித உரிமைகள் பண்டைய நாடுகளின் அத்துமீறல்கள், உள்நாட்டில் ஏற்படக்கூடிய ராணுவ சம்பந்தப்பட்ட கிளர்ச்சிகள், பிரிவினைவாத இயக்கங்கள் போன்றவைகளால் இந்தியாவின் இறையாண்மையானது சவால்களை சந்தித்து வருகின்றது.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்வது எப்படி?
அரசு அலுவலர் அல்லது அரசு உதவி பெறும் அமைப்புகளில் அலுவலர் சட்டபூர்வமாக செய்ய வேண்டிய கடமையை செய்ய தவறுதல் (omission of duty) அல்லது செய்யக்கூடாத செயலை செய்தல் (commission of unlawful work) போன்றவற்றின் மூலம் மனித உரிமைகள் பாதிக்கப்படுகின்றன.
காவல்துறையின் அமைப்பு முறையை தெரிந்து கொள்ளுங்கள்
காவல் நிலையங்கள் போன்றவை இருப்பது மட்டுமல்லாமல் மாநில காவல் தலைமையகத்தின் கீழ் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள உளவு பிரிவு அலுவலர்களும் பணியாற்றுகிறார்கள். மாநில காவல் துறையின் கீழ் செயல்படும் பிரிவுகள் மட்டுமல்லாது ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்டெலிஜென்ஸ் பீரோ (IB) எனப்படும் மத்திய அரசின் உளவு பிரிவும் மத்திய அரசின் வேறு உளவு பிரிவுகளும் எத்தகைய அலுவலகங்களும் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.
இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் புற்றுநோய் – தேவை கவனம்
உலகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டில் நுரையீரல் புற்றுநோயால் 18 லட்சம் மக்களும் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் 9,16,000 மக்களும் கல்லீரல் புற்றுநோயால் 8,30,000 மக்களும் வயிறு புற்றுநோயால் 7,69,000 மக்களும் மார்பக புற்றுநோயால் 6,85,000 மக்களும் இறந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகில் கடந்த 1990 ஆம் ஆண்டு 18 லட்சம் மக்கள் மட்டுமே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு கணக்கின்படி 3 கோடியே 26 லட்சம் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.