Advertisement

பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டனின் டிரைவரின் சமயோசித புத்தி

ஐன்ஸ்டீனின் “சார்பியல் கோட்பாடு” மிகவும் புகழ் வாய்ந்தது. அப்போது, இந்த கோட்பாட்டைப் பற்றி விளக்கம் தருவதற்காக, அவரை ஒவ்வொரு இடமாக வருவதற்கு அழைப்பு விடுத்தனர். வழக்கமாக, ஐன்ஸ்டீன் காரில்தான் செல்வார். அவர் எங்கெல்லாம் செல்கிறாரோ, அவரது டிரைவரும் கூடவே செல்வார். ஐன்ஸ்டீனின் விளக்கக் கூட்டங்கள் நடக்கும் போது, டிரைவர் கடைசி வரிசையில், வழக்கமாக உட்கார்ந்து இருப்பார்.  

ஒரு விளக்கக் கூட்டத்திற்காக  ஒரு நாள் காரில் போய்க் கொண்டு இருக்கும் போது, அவரது டிரைவர், “சார், உங்களுடைய ‘சார்பியல் கோட்பாடு’ மிகவும் எளிமையானது. அதற்கு நான் கூட விளக்கம் கொடுக்க முடியும். நான் இதை நிறைய தடவைகள் கேட்டு இருக்கின்றேன்.  நீங்கள் உங்கள் கோட்பாட்டை  விளக்கும்போது, கூறிய ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ஞாபகம் இருக்கிறது” என்றார்.    

இதைக் கேட்டவுடன்  மனக்குழப்பம் அடைவதற்குப் பதிலாக, ஐன்ஸ்டீன் அதை  தனக்குக் கிடைத்த ஒரு பாராட்டாக எடுத்துக் கொண்டார். அறிவியலைப் பற்றி ஏதும் தெரியாமல் இருந்தாலும்,  தனது டிரைவர் கூட தன்னுடைய கோட்பாட்டை புரிந்து கொள்ளும் திறமை பெற்றிருப்பதற்கு மகிழ்ச்சி அடைந்தார்.

தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சி அடையாத அந்த கால கட்டத்தில், ஐன்ஸ்டீன் எப்படி இருப்பார் என்பது மக்களுக்கு உண்மையிலேயே தெரியாது.  “எனது அடுத்த விளக்கக் கூட்டத்தில் நீதான்  கோட்பாட்டை விளக்க வேண்டும்” என்று ஐன்ஸ்டீன் கூறிய போது, டிரைவரும் அதற்கு சம்மதித்தார்.   விளக்கக் கூட்டம் நடைபெறும் இடத்தை அடைந்தவுடன், அவர்கள் இருவரும் தங்கள் உடைகளை மாற்றிக் கொண்டனர். டிரைவர் ஒரு விஞ்ஞானி போல, உடை உடுத்திக் கொண்டார். ஐன்ஸ்டீன் தன்னைத் தானே ஒரு டிரைவர் போல் மாற்றிக் கொண்டு ஹால் உள்ளே சென்றனர்.

இறுதியாக, அவரது டிரைவர் மேடைக்குச் சென்று, “சார்பியல் கோட்பாடு“ பற்றி விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார். யாருமே அவரை சந்தேகம் கொள்ள இயலாத அளவில்,  விளக்கக் கூட்டம் நன்றாகவே போய்க்கொண்டு இருந்தது.     விளக்கம் முடிந்த பிறகு, கேள்வி பதில் சுற்று, வந்தது. கேள்விகளில் நிறைய கேள்விகள் ஏற்கனவே நடந்த கூட்டங்களில் கேட்கப்பட்டவை. எனவே எல்லா கேள்விகளுக்கும் உரிய பதில்களை டிரைவர் மிகவும் இலகுவாகக் கூறி விட்டார்.    

கேள்வி பதில் சுற்று அனேகமாக முடியும் தருணத்தில், பார்வையாளர்களில் ஒருவர் கடைசிக் கேள்வியைக் கேட்டார். இந்த கேள்வி இதுவரை நடந்த  விளக்கக் கூட்டங்களில் கேட்கப்படாத  கேள்வியாக இருந்ததால், டிரைவருக்கு பதில் கூற இயலவில்லை. இந்த கேள்விக்குத் தவறாக பதில் கொடுத்தால், அவரது எஜமானர் கற்றறிந்த அறிஞர்கள் முன்னிலையில் அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்பது டிரைவருக்குத் தெரியும். நான் ஐன்ஸ்டீன் அல்ல,  நான் ஒரு சாதாரண டிரைவர் என்று கூறினால், மிகப் பெரிய மகான்கள் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள்.

டிரைவர் ஒரு கணம் தனக்குள் ஸ்திரப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு,“உங்களுடைய கேள்வி, மிகச் சாதாரணமானது. இதற்கு என் டிரைவர் கூட விடை தருவார்” என்று பதில் கூறினார். “அவர் கடைசி வரிசையில்  உட்கார்ந்து கொண்டிருக்கிறார். நீங்கள் அவரிடம் சென்று இந்தக் கேள்விக்குரிய பதிலைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.” தன் டிரைவரின் இந்த பதிலைக் கேட்டு ஐன்ஸ்டீன் ஆச்சரியம் அடைந்தார். ஆனால், உள்ளுக்குள் முழுவதுமாக மகிழ்ச்சி அடைந்தார். அந்த கேள்விக்கு விடை கூறினார்.     எந்தவிதமான பிரச்சனைகளும்  இல்லாமல், விளக்கக் கூட்டம்  முடிவுக்கு வந்தது.  

இந்த சம்பவம் நமக்கு போதிப்பது என்னவெனில், “ஆழ்ந்த அமைதியும் மேலும் விழிப்புணர்வும் மனதில் இருக்கும் போது, இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து, நாம்  வெளியே வந்து விடலாம்“.

மாத்தி யோசி

என்னடா எங்க ஊருக்கு கிளம்பற போல? ஆமாண்டா ஊருக்கு தான்,
என்ன விசேஷம்?சனி, ஞாயிறு விடுமுறை அதான். ஓ ஆமாலஅது மட்டும் இல்ல ஊர்ல மாமாவுக்கு அறுபதாம் கல்யாணம். ஓ அப்படியா அப்ப நானும் கூட வரலாமா. எனக்கும் இங்க 2 நாள் தனியா இருக்க முடியாது. என்ன சொல்லற?
அது வந்துஏன்டா உங்க வீட்டில ஏதாவது சொல்லுவாங்களா? சே சே அப்படி ஏதும் இல்லசரி வா கிளம்பு ஓகே டா இதோ.

இரவு பேருந்தில் பயணம் செய்து கோவை வந்து இங்கிருந்து ஒரு முக்கால் மணி நேரம் உள்ளூர் பேருந்தில் பயணம். எத்தன மணிக்கு போய் சேருவோம்?எப்படியும் 11 மணிக்கு முன்னாலே போய்டலாம் டா

இருவரும் அந்த சிறிய கிராமத்துக்கு வந்தார்கள். அழகிய வயல் வெளி. பச்சை பசேல் என நிலம். நிறைய தென்னை, வாழை தோப்புகள்டேய் நா நிறைய திரைபடத்திலே பார்த்த காட்சிகள் எல்லாம் இதோ இப்ப எனது கண்களுக்கு எதிரே. அடடா என்ன அழகு! இது தான்டா சொர்கம்!!ம் ம் வா வா என நண்பனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றான்.

வீடு விழா கோலத்தில், அனைவரின் முகத்திலும் சந்தோஷம்என்னடா பேராண்டி வந்திட்டியா? எங்க நீ வராம அங்கேயே இருந்திடுவன்னு உன் பாட்டி எல்லாம் புலம்பிகிட்டு இருந்தா.. அடியே இந்தா பாரு யாரு வந்திருக்கான்னு..
அனைவரும் வாசலுக்கு வந்து மகிழ்வோடு அவர்களை வீட்டிற்குள் அழைத்து சென்றார்கள்.

நண்பன் சற்றே பரபரப்பாய் டேய் இங்க வா, இத பாருஎன்னடா?இல்ல மண்வெட்டி, கடப்பாறைன்னு ஏராளமான அதுவும் புதுசா இம்புட்டு வெச்சிருக்காங்க. ஏதாவது வியாபாரம் செய்யவா? இல்லையே. சரி வா தாத்தாகிட்ட கேட்கலாம்தாத்தா என்னது இவ்வளவு சாமான்?ஓ அதுவா, இன்னிக்கு நேர்ல பார்த்தா உனக்கு புரியும் என நகர்ந்தார்

அன்றைய 60ஆம் கல்யாண விழா சிறப்பாக நடைபெற்றது
மதியம் நல்ல சாப்பாடு. ஊரில் உள்ள அனைவரும் வந்து சாப்பிட்டு, தாம்பூலம் வாங்க சென்றார்கள். அப்ப அங்க மாமா அனைவருக்கும் அவரவர் தேவைக்கு ஏற்ற விவசாய கருவிகளை அன்பளிப்பா தந்தார்.

நண்பன் வியப்புடன் கண்டு மாமாவிடம் கேட்க,அதுவா தம்பி, தாம்பூலம் பை
மட்டும் தந்து அனுப்பாமவிவசாயிகளுக்கு தேவையான உபகரணம் தரேன். அது அனைத்து விவசாயிக்கும் உபயோகமா இருக்கும்ல. அதான்..
இப்ப தாத்தா இருவரையும் பார்த்து புன்னகை செய்கிறார்மாத்தி யோசி என சொல்லாம சொல்வது இருவரின் காதிலும் தேனாக விழுகிறது..

நுகர்வோர் நீதிமன்றத்தின் கருத்தும் தமிழக அரசின் போக்குவரத்து துறை அறிவிப்பும்- ஆம்னி பேருந்துகள் வரைமுறைப்படுத்தப்படுமா?https://theconsumerpark.com/omni-bus-regulation-dr-v-ramaraj-order

கே.பி. மனோகரன்
கே.பி. மனோகரன்
அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles