Friday, June 27, 2025
spot_img

ஆர்வமாக இருந்தால் அற்புதங்கள் நடக்கும் + சிந்திக்க சில வரிகள். ஒரு நிமிடம் படித்தால் உங்கள் வெற்றிக்கு அடித்தளம் ஏற்படலாம்

தங்கள் செயலில் ஆர்வம் காட்டுபவர்கள்  இலக்குகளை நிர்ணயித்து அவற்றை நிறைவேற்றுவார்கள். தங்களுக்கு ஆர்வம் உள்ள விவரங்களைதேடித்தேடி படிப்பார்கள். கற்றுக்கொள்வார்கள். அதில் ஒரு நிபுணராக மாறுவதற்கு ஆசைப்படுவார்கள். அணையா விளக்கு என்று சொல்கிறோமே, அது நமக்குள் தீயாக எரிந்து கொண்டிருக்கும் ஆர்வம் தான். இலட்சியக் கனவுகளும் அவற்றை நிறைவேற்றுவதில் காட்டக்கூடிய ஆர்வமுமே கண்ணெதிரே காணும் உண்மையை விடவும் பெரியவை.

ஆர்வம் மட்டும் இருந்து விட்டால் எத்தனை முறை தோற்றாலும் மீண்டும் அதே உத்வேகத்துடன் அந்த வேலையை முடிக்க முடியும். எந்த வேலையை செய்தாலும் அதை நேசிக்க வேண்டும். அவ்வாறு நேசித்த வேலையை செயல் வடிவத்தில் கொண்டு வந்து ஆர்வத்துடன் செய்யும்போது அது வளம் கூட்டும . ஊருக்கு செல்ல இருக்கின்ற இரவு நேர கடைசிப் பேருந்தை தவறவிடாமல் பிடிப்பதற்கு எவ்வளவு வேகத்தில் ஓடுவோமோ, அதே போல ஆர்வத்துடன் வேலைகளை செய்யும் போது வெற்றி வசப்படும். இதைச் செய்ய முடியுமா என்ற சந்தேக விதை முளைத்து விட்டால் எவ்வளவு ஆர்வம் இருந்தாலும் எதையும் சாதிக்க முடியாது. 

செய்யும் செயலில் ஆர்வம் இருந்து  அதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை யுடன் கடினமாக உழைத்தால் பலன் வெற்றியே . எடுத்த பணியை வெற்றிகரமாக முடிப்போம் என்ற நம்பிக்கை முதலில்  செயலில் ஈடுபடுபவருக்கு வேண்டும். எந்தப் பணியையும் விருப்பமின்றி செய்தால் மன அழுத்தமே விடையாக நிற்கும். அதையே ஆர்வத்துடன் செய்தால் வெற்றி மாலை கழுத்தில் விழும் .

வாழ்வில் எதில் ஆர்வம் இருக்கிறது என்று அறிந்து அதைப் பின்பற்றி அதை அடைவது பற்றி கனவு கண்டு அதற்காகவே வாழ்ந்தால் வெற்றிச் சிகரம் உங்கள் காலடியில். வாழ்வுப் பயணத்தில் ஏற்படும் பலவீனங்கள், தோல்விகள்.  போன்ற தடைக் கற்களைத் தாண்டி சாதிக்க வைப்பது ஆர்வம் மட்டுமே. அடைய வேண்டிய இலக்குக்கான முயற்சியை. எந்தச் சூழலிலும் கைவிடாது ஆர்வத்தோடு முயற்சித்தால் எண்ணியது எண்ணிய படி ஈடேறும். அர்ப்பணிப்பு உணர்வோடு ஆர்வத்துடன் இலக்கு நோக்கி பயணித்தால் வெற்றி எதிர் வந்து காத்திருக்கும். ஆர்வமாக இருந்தால் அற்புதங்கள் நடக்கும். ஆர்வம் உங்களை இயக்கட்டும். (தமிழக ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளர் சிவ கணபதி அவர்களின் வலைதள பதிவு)

சிந்திக்க சில வரிகள்

எலிகள் எந்த காலத்திலும் உணவு இன்றி செத்தது இல்லை. பூனைகளுக்கு மத்தியிலும் அவைகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதை போல பிரச்சினைகளைச் சமாளிக்கக் கற்று கொள்ள வேண்டும். 

உண்மையான அன்பு கொண்டவர்கள். எப்பவுமே ஏமாளிதான். கடவுளே வந்து கை கொடுத்தாலும், தன்னம்பிக்கை இல்லையென்றால் கரை சேர்வது கடினம் தான்.

சில நேரங்களில் வளைந்து போகுதல் வீரமாம். மரம் வெட்டுபவனின் முதல் இலக்கு. நேராய் நிமிர்ந்து நிற்கும் மரங்களே. 

பலவீனம் தெரியும்படி எல்லோரிடமும் பேசாதீர். பலம் தெரிய வேண்டும் என்றால் யாரிடமும் அதிகம் பேசாதீர்.

இல்லாதவன் மட்டுமே நினைக்கிறான் இருந்தால் நல்லா இருக்கும் என்று. இருப்பவன் இருப்பதை நினைத்து ஆனந்த பட்டதே இல்லை.

கஷ்டங்களும் அனுபவமும் நம்மை சூழும் போது தான் வாழ்க்கை நமக்கு நல்ல பாடத்தையும் பாதையும்தெளிவாகக் காட்டும்.

மகிழ்ச்சி என்பது நீங்கள் யாராக இருந்தாலும் அல்லது நீங்கள் என்ன வைத்து இருக்கிறீர்கள் என்பதை பொறுத்தது அல்ல. அது நீங்கள் நினைப்பது பொறுத்தது.

வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு. வாழ்வது உயிர்கள் மட்டும் அல்ல, வார்த்தைகளும் தான்.

தன் வலிமை தெரியாமல் உயரப்பறக்க நினைக்கும் பறவைகள் எல்லாம் வானில் உயரப்பறந்து விடுவதில்லை.

கழுகும் பறவை தான். குருவியும் பறவைதான். அதனதன் வலிமை அதனதன் உயரம்.

தோல்வி என்பது இழிவு அல்ல. தோல்வி வந்து விடும் என்று அஞ்சி பின் வாங்குவது தான் இழிவு. தோல்வியை கண்டு அஞ்சாதீர்கள்.

அறிவு என்பது வெறும் விவரத் திரட்டு வாசிப்பின் வரம் அல்லது கணிப்பொறியின் இரவல்.

இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால், இரண்டு கை உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது.

உங்களின் தோல்வி எங்கே ஒளிந்து உள்ளது தெரியுமா? பிரச்சனைகள் வரும் போது அல்ல. பிரச்சனைகளை கண்டு நீங்கள் பயந்து விலகும் போது.

என்னை யாரும் ஜெயித்ததில்லை, ஏனெனில், இது வரை யாருடனும் போட்டி போடவில்லை.

நீங்கள் திறமையானவன் என்பது புதிதல்ல.. அதை நீங்கள் இவ்வளவு காலம் மறந்திருந்தீர்கள். விழித்திருங்கள்! எழுந்திருங்கள். வென்றிடுங்கள்!

கடவுள் வரம் எல்லாம் தரமாட்டார், சந்தர்ப்பம் தான் தருவார். அதை வரம் ஆக்குவதும் சாபம் ஆக்குவதும் உங்க கையில் தான் இருக்கு.

சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது.

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்!     

பூங்கா இதழ் (The News Park) கருத்து: ஆர்வம் அற்புதங்களை நிகழ்த்தும் சக்தி என்பது மறுக்க இயலாது ஒன்றாகும்.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
 
வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles