Wednesday, June 25, 2025
spot_img

அமெரிக்கா மீது தாக்குதல், உலகப்போர் தொடங்கி விட்டதா? இங்கிலாந்து, பிரான்ஸ் படைகள் ஈரானுக்கு அருகில் விரைகின்றன. அமெரிக்க படைத்தளங்கள் அனைத்தும் தயார் நிலையில். சீனா, ரஷ்யா போரில் குதிக்குமா? அனைத்து பொருட்களின் விலைகளும் உயரும் அபாயம் உள்ளிட்ட கருத்து மூட்டைகளுடன் வாக்காளர் சாமி! 

அதிகாலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் கூறி விட்டு “உலகப் போர் வந்து விட்டது போல உள்ளதே? சாமி”என்றதும் “வரும், ஆனா, வராது?” என செல்லமாக கோபித்துக் கொண்டுகருத்து மூட்டைகளை அவிழ்க்க தொடங்கினார் வாக்காளர் சாமி.

“சில வாரங்களுக்கு முன்பு ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும்  இஸ்ரேல் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இத்துடன் பிரச்சனை முடிந்தது என்ற நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்களை தொடங்கியது. உடனடியாக இஸ்ரேல் மீது ஈரான் போரை தொடங்கியது. எந்த ஏவுகணை எங்கள் எல்லைக்குள் வந்தாலும் அதனை இடைமுறித்து தாக்கும் சக்தி படைத்த வான் பாதுகாப்பு அமைப்பை நாங்கள் வைத்துள்ளோம் என்று மார்தட்டிக் கொண்டிருந்த இஸ்ரேலுக்கு பெருத்த அடியை ஈரான் கொடுத்தது. இஸ்ரேலில் பலர் பலியானதோடு பலர் படுகாயங்களுக்கு உள்ளானார்கள். பல கட்டிடங்கள் இஸ்ரேலில் தகர்க்கப்பட்டன. இஸ்ரேலின் எதிர்த்தாக்குதல்களால் ஈரானுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது” என்றார் வாக்காளர் சாமி. 

“இதில் அமெரிக்கா எப்படி வந்தது? சாமி” என்றேன் நான். “தன் செல்லப் பிள்ளையான இஸ்ரேலின் வான் பாதுகாப்பை ஈரான் தகர்த்ததை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. ஈரான் உடனடியாக அணு ஆயுத சோதனை தடுப்பு ஒப்பந்தத்தில் கையொப்பம் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. அதற்கு ஈரான் ஒப்புக் கொள்ளாததால் இரண்டு தினங்களுக்கு முன்னர் ஈரானில் மூன்று ஆயுத பரிசோதனை கூடங்கள் மீது தனது விமானங்கள் மூலம் ஏவுகணை மழை பொழிந்தது. இதற்கு ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தை அமெரிக்காவுக்கு தெரிவித்தனர். இதற்கு ஒரு படி மேலே சென்று ஈரானின் அணு சோதனை கூட உங்களுக்கு ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளின் அணு விஞ்ஞானிகள் உதவுவார்கள் என்று ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஈரானின் அணு ஆயுத மையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன என்று அமெரிக்கா தெரிவித்தது. ஆனால், குகைக்குள் உள்ள அணுநிலையங்கள் பாதிக்கப்படவில்லை என்று  ஒரு சிலரும் அங்கு இருந்த யுரேனியம் ஏற்கனவே வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு இருக்கலாம் என்று ஒரு சிலரும் தெரிவிக்கின்றனர்” என்றார் வாக்காளர் சாமி.

“அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரான் எதிர் வினை ஆற்றவில்லையா? சாமி “ என்றேன் நான். “அமெரிக்கா தங்கள் மீது நடத்தியுள்ள தாக்குதல் சட்டவிரோதமானது என்றும் தகுந்த பதிலடி கொடுப்போம் என்றும் தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரங்களில் ஈரான் அறிவித்தது. இந்நிலையில் கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது நேற்று இரவு ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நேட்டோ ராணுவ கூட்டணியில் உள்ள நாடுகள் மத்திய ஆசிய பகுதிகளுக்கு தங்களது ராணுவத்தை நகர்த்துவதாக தெரிகிறது. நேட்டோ படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கினால் ஈரானுக்கு ஆதரவாக சில நாடுகள் போரில் குதிக்க கூடும் இந்த நிலை ஏற்பட்டால் உலகப்போர் தொடங்கியதாக கருதப்படும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். 

இதனிடையே இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், போர் நிறுத்தம் தொடர்பாகவோ, ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவோ எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த நிலையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி மறுப்பு தெரிவித்துள்ளார்.. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு முன்னரே போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாக அறிவித்தவர்தான் அமெரிக்க அதிபர். இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு தான் தான் காரணம் என்று பலமுறை தெரிவித்தவர் அமெரிக்க அதிபர். இதனை இந்திய பிரதமர் கடந்த தினங்களுக்கு முன்பு மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.” என்றார் வாக்காளர் சாமி.

“எங்கோ உள்ள அமெரிக்காவுக்கு ஈரானுக்கு அருகில் உள்ள கத்தாரில் எப்படி ராணுவ தளம் உள்ளது? சாமி “ என்றேன் நான். “அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாவது கடற்படை பிரிவு (U.S. Navy’s Fifth Fleet) பஹ்ரைனில் உள்ளது. இது வளைகுடா, செங்கடல், அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகள் வரை தாக்குதல் நடத்தும் சக்தி படைத்ததாக இந்த தளம் அமைந்துள்ளது.இப்போது தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் கத்தார் தளம் தோஹாவிற்கு வெளியே பாலைவனத்தில் 24 ஹெக்டேர் பரப்பளவில் அல் உடீத் விமான தளத்தில் அமைந்துள்ளது. கத்தார் தளம் அமெரிக்காவின் மத்திய கட்டளை மையமாகச் செயல்படுகிறது. எகிப்தில் இருந்து கஜகஸ்தான் வரை இதன் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்திலேயே அமெரிக்காவின் மிகப் பெரிய தளமாக கத்தார் தளம் இருக்கிறது. இங்கு சுமார் 10,000 வீரர்கள் உள்ளனர்.

குவைத்தில் அமெரிக்காவின் பல ராணுவ தளங்கள் உள்ளன. அவற்றில் கேம்ப் அரிஃப்ஜன் அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை தலைமையகமாக உள்ளது. அதேபோல அலி அல் சேலம் விமான தளம் ஈராக் எல்லையில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ளது. இது “தி ராக்” என்று அழைக்கப்படுகிறது. இது ஈராக் மற்றும் சிரியாவில் நிலைநிறுத்தப்படும் அமெரிக்க ராணுவப் பிரிவுகளுக்கான ஒரு தளமாக உள்ளது.

ஐக்கிய அமீரகத்தின் தலைநகரான அபுதாபிக்கு தெற்கே அமைந்துள்ளது அல் தஃப்ரா விமான தளம். இங்கு ஐக்கிய அமீரக விமானப்படையுடன் அமெரிக்க விமானப்படை செயல்படுகிறது. இது அமெரிக்க விமானப்படைக்கு ஒரு முக்கியமான மையமாக உள்ளது. இந்த பிராந்தியம் முழுக்க அமெரிக்கா செய்யும் ஆபரேஷன்களுக்கு இதுவே தலைமையிடமாக இருக்கிறது.

துபாயின் ஜெபல் அலி துறைமுகம் அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவின் ராணுவ தளம் இல்லை. இருந்தாலும் மத்திய கிழக்கில் இதுவே அமெரிக்கக் கடற்படையின் மிகப் பெரிய துறைமுகமாக உள்ளது. இங்கு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் பிற கப்பல்கள் அடிக்கடி வந்து செல்கின்றன.

அமெரிக்கப் படைகள் ஈராக்கில் மேற்கு அன்பார் மாகாணத்தில் உள்ள ஐன் அல் அசாத் விமான தளத்தில் இருக்கிறது. அங்கிருந்தபடி அவர்கள் ஈராக் பாதுகாப்புப் படைகளுக்கு உதவுகிறது., நேட்டோ மிஷன்களுக்கும் பங்களிக்கிறது. ஈராக்கின் தன்னாட்சி பெற்ற குர்திஸ்தான் பிராந்தியத்திலும் அமெரிக்காவுக்குச் சொந்தமான எர்பில் விமான தளம் உள்ளது. அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் போர் பயிற்சிகளை நடத்துவதற்கான இடமாக விளங்குகிறது. இது மட்டுமின்றி உளவுத்துறை மற்றும் தளவாட ஒருங்கிணைப்பு சார்ந்து பணிகளும் இங்கு நடக்கிறது.

சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க வீரர்கள் சவுதி அரசுடன் இணைந்து செயல்படுகிறார்கள். வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு உதவிகளை வழங்குவதோடு அமெரிக்க ராணுவ விமானங்களின் செயல்பாட்டிற்கும் சவுதி உதவுகிறது. ரியாத்திற்கு தெற்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இளவரசர் சுல்தான் விமான தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஜோர்டான் தலைநகர் அம்மானில் இருந்து 100 கிலோமீட்டர் வடகிழக்கில் உள்ள அஸ்ராக்கில் அமைந்துள்ள முவஃபாக் அல் சால்டி விமான தளத்தில் அமெரிக்க விமானப்படை இருக்கிறது. மத்திய கிழக்கில் மொத்தம் ஏழு நாடுகளில் அமெரிக்காவுக்கு ராணுவ தளங்கள் உள்ளன” என்றார் வாக்காளர் சாமி.

“படைத்தளங்களை உலகம் முழுவதும் வைத்திருப்பதும் போர் நடத்தும் நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பதும் அமெரிக்காவின் முக்கியமான தொழிலா? சாமி” என்றேன். “ஈரான் சர்வதேச விதிகளை மீறி அணு ஆயுதங்களை தயாரிக்கிறது என்றால் நாடுகளின் சங்கமாக உள்ள ஐக்கிய நாடுகளின் சபையில் விவாதித்து ஈரான் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாறாக, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும்போது மூன்றாம் தரப்பு நாடாக உள்ள அமெரிக்கா ஈரானின் மீது தாக்குதல் நடத்துவது சரியானதா என்பதை உலக நாடுகள் சிந்திக்க வேண்டும். உடனடியாக உலகப்போர் ஏற்படுவதை தவிர்க்க உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் அணு ஆயுத யுத்தமாக மாறுவதற்கும் லட்சக்கணக்கான உயிர் பலி ஏற்படுவதற்கும் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்படுவதற்கும் இந்தப் போர் கொண்டு செல்லும்” 

“ஈரான், ஓமன், மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையில் அமைந்துள்ள, 30 கி.மீ. நீளமுள்ள, பாரசீக வளைகுடா, அரபிக் கடல், மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றை இணைக்கும் ஒரு குறுகிய கடல் வழித்தடம் ஹோர்முஸ் ஜலசந்தி. உலக நாடுகளுக்கு தேவையான கச்சா எண்ணெயில் ஐந்தில் ஒரு பங்கு ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் கொண்டு செல்லப்படுகிறது. ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த முக்கிய கடல்வழி மூடப்பட்டால், இந்தியா உட்பட பல நாடுகளில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயரும் அபாயம் உள்ளது” எனக் கூறிவிட்டு விடைபெற்றார் வாக்காளர் சாமி.

பூங்கா இதழ் (The News Park) கருத்து: உலக அமைதி மக்களின் நல்வாழ்வுக்கு அடித்தளம்.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
 
வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles