நியாயமெல்லாம் கிடையாது வலுத்தவன் கைதான் ஓங்குமா?

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை முதன்முதலாக தொடங்கிய நிலையில் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதும் இதன் தொடர்ச்சியாக இரண்டு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்துவதும் இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் தற்போது ஓயாது என்பதை காட்டுகின்றன. இந்நிலையில் அமெரிக்கா தொடர்ந்து தமது செல்ல பிள்ளையான இஸ்ரேலுக்கு ஆதரவளித்து வருகிறது. இந்த போரில் அமெரிக்கா நேரடியாக இறங்கும் வகையில் அமெரிக்காவின் கப்பல் படை உள்ளிட்ட படை பிரிவுகள் மத்திய ஆசியாவுக்கு அருகாமையில் நகர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்கா நேரடியாக போர்க்களத்தில் குதித்தால் விளைவுகள் மோசமாகும் என்ற நிலையில் சீனா மற்றும் ரஷ்ய அதிபர்கள் நேற்று கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் தாக்குதலை உடனடியாக இஸ்ரேல் நடத்த வேண்டும் என்றும் ஈரானை தாக்க கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா ஈரானை தாக்கினால் நாங்களும் போருக்கு வருவோம் என்பதை உணர்த்தும் அறிகுறியாக இந்தக் கூட்ட அறிக்கை சீனா மற்றும் ரஷ்ய அதிபர்களின் கூட்ட அறிக்கை பார்க்கப்படுகிறது என்றும் இந்த போரில் அமெரிக்கா நேரடியாக களம் கண்டால் உலகப் போராக மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்றும் உலகப்போர் ஏற்பட்டால் அனைத்து நாடுகளிலும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் என்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
ஐயோ, பாவம்! அமெரிக்க அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காதா?

அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசிம் முனீருக்கு அமெரிக்க அதிபர் விருந்தளித்துள்ளார் இதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சண்டையை நிறுத்தியது நான் அல்ல என்று டிரம்ப் தெரிவித்துள்ளார் இந்தியா பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஆரம்பகட்ட இந்தியாவும் பாகிஸ்தானும் போர்க்களத்தில் குதிக்க தொடங்கிய போது இந்தியாவின் தாக்குதலை தாக்குப் பிடிக்காமல் பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகள் இந்திய ராணுவ அதிகாரிகளுடன் நடத்திய பேச்சில் போர் நிறுத்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டது என்று இந்தியா தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில் தெரிவித்தது ஆனால் நான்தான் இரண்டு நாடுகளின் பிரதமர்களிடம் பேசி போரை நிறுத்தினேன் போரை நிறுத்தாவிட்டால் வர்த்தக போரை தொடங்குவேன் என மிரட்டினேன் என்று பலமுறை கொக்கரித்த அமெரிக்க அதிபர் ஒப்பரித்தார் அமெரிக்க அதிபர் கொக்கரித்தார் அமெரிக்க அதிபர் இதற்கு இந்தியா தரப்பில் எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை ஆனால் இரண்டு தினங்களுக்கு முன்பு போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா காரணம் இல்லை என்று இந்திய பிரதமர் தெரிவித்தார் இதனைத் தொடர்ந்து சண்டையை நிறுத்தியது நான் அல்ல இரண்டு நாட்டு தலைவர்கள்தான் என்று பேச்சை மாற்றி உள்ளார். எப்போதும் ஒரே மாதிரி பேசிக் கொண்டிருந்தால் உலகம் எப்படி நம்மை கவனிக்கும் என நினைக்கிறாரோ? என்னவோ?
நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம். இதுதான் திருடன் கையில் சாவியை கொடுத்தது போலவா?

டெல்லியில் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்வந்த் சர்மா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது ஒரு அறையில் கட்டு கட்டாக பணம் எரிந்த நிலையில் காணப்பட்டது. இதனை தொடர்ந்து தில்லி காவல்துறை ஆணையர் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் 55 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் போது தமது வீட்டில் உள்ள அந்த அறையை தானோ அல்லது தனது குடும்ப உறுப்பினர்களோ பயன்படுத்தியது இல்லை அங்கு இருந்த பணம் என்னுடையது அல்ல என்று நீதிபதி தெரிவித்துள்ளார். விசாரணை அறிக்கையில் நீதிபதியின் தவறான நடத்தையிலேயே பணம் அங்கு இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரை பதவி நீக்க தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நல்லது செய்ய பாதுகாப்பு உரிமைகளை வழங்கினால் அதனை கேட்டதுக்கு கெட்டதுக்கு பயன்படுத்தக் கூடாது அல்லவா?
பூங்கா இதழ் (The News Park) கருத்து: செய்திகள் தரும் சங்கதிகளை பகுத்தாய்வு செய்து தகுந்த முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். இவைகள் தான் நாளை சரித்திரம் ஆகின்றன.