தேவைக்கு அதிகமாக நினைத்துக் கொண்டிருப்பது தேவையில்லை. ஒரு நிமிடம் படிக்கலாமே!
இளவரசனும் மார்க்கெட்டில் உள்ள முதல் கடைக்காரரிடம், “நான் இந்த வழியாக காலையில் சென்றேன். நீங்கள் என்னைப் பார்த்தீர்களா?” என்று கேட்டான். கடைக்காரர், “எனக்கு நேரம் இல்லை. காலை நேரம் சுறுசுறுப்பாக இருக்கும். வாடிக்கையாளர்களும் இருப்பார்கள். நான் உங்களைக் கவனிக்கவில்லை” என்றார். இதே போல மற்றவர்களைக் கேட்ட போதும், ஒருவரும் இளவரசனை நோக்கி தங்கள் கவனத்தை செலுத்தவில்லை என்பதை உணர்ந்தான்.
யார் வேண்டுமானாலும் பச்சை மையில் கையெழுத்து போடலாமா? அரசு வங்கியில் ரூ 31850 கோடி மோசடி. போலீசில் புகார்...
இந்திய குடிமக்களின் பணத்தை கையாளும் முக்கிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்பது மத்திய அரசு சொந்தமான வங்கி என்பது அனைவருக்கும் தெரியும். இத்தகைய வங்கிகளில் ரூபாய் ஒரு லட்சம் கடன் பெற்றுக் கொண்டு அதனை வேறு தொழிலுக்கு பயன்படுத்தினால் உடனடியாக கடன் வாங்கியவர் மோசடி செய்து விட்டார் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விடுவார்கள் என்று தானே நாம் அறிந்திருக்கிறோம்? ஒருவேளை கோடிக்கணக்கில் கடன் வாங்கினால் குறைந்த கடன் வாங்குபவர்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகள் வராதோ என்னவோ?
பட்டா பிரச்சினைகளுக்கு யாரை அணுகுவது? பசலி என்றால் என்ன? வேளாண்மை ஆண்டு என்பது என்ன? சம்பா சாகுபடி, குறுவை...
தமிழ் நாட்டில் நிர்வாக சீர்திருத்தம் குறிப்பிடும்படியான மாற்றத்தை கண்டது. மறைந்த தமிழ் நாடு முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் அதிரடி நடவடிக்கையாக கிராம் கர்ணம் மு. மணியம் பணியிடங்களை ஒழித்தார். அவரது ஆட்சி காலத்தில் மாவட்டங்கள் வட்டங்கள், உள்வட்டங்கள் பிரிக்கப்பட்டன. தமிழ் நாட்டில் 1967 க்கு பிறகு நிர்வாகத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. நில அளவைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்றும் சிரமங்களுக்கிடையில் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. பட்டா பிரச்சினைகளுக்கு யாரை எனது அணுகுவது என்ற ஓரம் கீழே விவரம் கீழே பூங்கா இதழ் கருத்தாக உள்ளது
சிரிப்பதற்கு கஞ்சமா! சிரிப்பே மனிதரின் முகவரி, ஆனால், மகிழ்ச்சி பட்டியலில் இந்தியாவுக்கு 118 ஆம் இடம் – ...
காரணம் இல்லாமல் சிரிப்பவன் பைத்தியம். ஆனால், தனிமையில் காரணமே இல்லாமல் சிரிக்கலாம், கண்ணாடியில் முகத்தை பார்க்கும்போது, குளியல் அறையில் கதவை அடைத்துக் கொண்டு கொண்டு காரணம் இல்லாமல் குலுங்கி குலுங்கி சிரிக்க வேண்டும். தொடர்ந்த சிரிப்பு நம்ம இளமையாக்குகின்றது. புது உற்சாகத்தை தருகிறது. காரணத்தோடு சிரித்தால் தான் சக்தி வரும் என்று இல்லை. சிரித்தாலே போதும் நம் மனதிற்கு உடம்பிற்கும் சக்தி பெருகுகின்றது. காரணத்தோடு சிரிக்கிறோமோ, இல்லை என்பது நம் மூளைக்கு தேவை இல்லை.
உலகச் செய்திகள், தேச செய்திகள் மற்றும் உள்ளூர் செய்திகள் உள்ளிட்ட கருத்து மூட்டைகளுடன் வாக்காளர் சாமி!
அதிகாலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் கூறி விட்டு “என்ன சாமி செய்திகள்?”என்றதும் “செய்திகள் இல்லாத நிமிடம் கிடையாது” என கூறிவிட்டு கருத்து மூட்டைகளை அவிழ்க்க தொடங்கினார் வாக்காளர்...
கட்டணம் இல்லாமல் வாசிக்கலாம்! நீங்களும் எழுதலாம்! ஆய்வும் செய்யலாம்! உங்களுக்காக 10 இணைய இதழ்கள்.
ஆறு ஆராய்ச்சி இதழ்களின் தொடக்க விழா வரும் 2025 அக்டோபர் முதல் நாள் அன்று நடைபெற உள்ளது. தொடக்க நிகழ்வுக்கு பின்பு தொடர்ந்து ஆய்வு இதழ்கள் வெளிவர உள்ளன. தங்களது ஆய்வு திறமையை மேம்படுத்த இந்த இதழ்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அப்பா, என் வாழ்வின் மதிப்பு என்ன? சிந்தனை தூண்டும் ஒரு நிமிடக் கதையைப் படிக்கத் தவறாதீர்கள்!
அப்பா, கல்லை வைரக் கற்கள் விற்கும் கடைக்குச் சென்று காட்டி வரச் சொன்னார். பையன், கல்லை எடுத்துக் கொண்டு விலை மதிப்புள்ள வைரங்கள் மற்றும் கற்கள் விற்கப்படும் கடைக்குச் சென்றான். அவன் அந்தக் கல்லை கடை சொந்தக்காரரிடம் காண்பித்தான். வைர வியாபாரி,“இந்த விலை மதிப்பற்ற வைரத்தை எங்கிருந்து பெற்றாய்? எனக்குச் சொந்தமாக இருக்கும் எல்லாவற்றையும் விற்றால் கூட, இந்த விலை மதிப்பற்ற வைரத்தை என்னால் வாங்க முடியாது. இதனுடைய விலையைக் கேட்பது கூட எந்தப் பயனும் இல்லை!” என்றார். திகைப்பும் வீட்டுக்குத் திரும்பிய பையன் அப்பாவிடம் நடந்ததைக் கூறினான்.
ஆர்வமாக இருந்தால் அற்புதங்கள் நடக்கும் + சிந்திக்க சில வரிகள். ஒரு நிமிடம் படித்தால் உங்கள் வெற்றிக்கு அடித்தளம்...
ஆர்வம் மட்டும் இருந்து விட்டால் எத்தனை முறை தோற்றாலும் மீண்டும் அதே உத்வேகத்துடன் அந்த வேலையை முடிக்க முடியும். எந்த வேலையை செய்தாலும் அதை நேசிக்க வேண்டும். அவ்வாறு நேசித்த வேலையை செயல் வடிவத்தில் கொண்டு வந்து ஆர்வத்துடன் செய்யும்போது அது வளம் கூட்டும . ஊருக்கு செல்ல இருக்கின்ற இரவு நேர கடைசிப் பேருந்தை தவறவிடாமல் பிடிப்பதற்கு எவ்வளவு வேகத்தில் ஓடுவோமோ, அதே போல ஆர்வத்துடன் வேலைகளை செய்யும் போது வெற்றி வசப்படும். இதைச் செய்ய முடியுமா என்ற சந்தேக விதை முளைத்து விட்டால் எவ்வளவு ஆர்வம் இருந்தாலும் எதையும் சாதிக்க முடியாது.
தனக்கு நல்ல நேரம் இன்னும் பிறக்கவில்லை என சுற்றி வருகிறார்கள் + கால் நிமிட கதையுடன். வாழ்க்கையில் ஒரு...
இனிய வணக்கம் .... நம்மை நாமே ஒரு வெற்றியாளராக கருதாதவரை .... எதையும் வெற்றிகரமாக நிகழ்த்திக்காட்ட முடியாது --- ஜிக் ஜேக்லர் If we don't see ourselves as a winner...Then cannot...
அதிமுக, பாமக, திமுகவில் என்ன நடக்கிறது? போதை பொருள் வாங்கிய நடிகர் கைது. இன்னும் தொடருமா நடிகர்களின் கைது...
தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு (கமிஷனுக்கு) தலைவர் மற்றும் ஆறு உறுப்பினர்களை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. வழக்கு நிலுவை காரணமாக நீண்ட நாட்களாக இந்த பதவியில் யாரும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் வழக்கு முடிவடைந்ததை தொடர்ந்து இவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது குழந்தைகள் உரிமைகளுக்கான ஆர்வலர்கள் இடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது ஏற்படுத்தி உள்ளது. ஓரிரு வாரங்களுக்கு முன்பே விரைவில் இவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று நான் கூறியது உனக்கு நினைவிருக்கிறதா? சிஷ்யா” எனக் கூறிவிட்டு விடைபெற்றார் வாக்காளர் சாமி.