Theme: Current Affairs, Image by “The News Park”

தமிழக அரசியல் கட்சிகள் திட்டமிட்டு உடைக்கப்படுகின்றனவா? 75 வயது நிறைவடைந்ததும் பிரதமருக்கு ஓய்வா? ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்!...

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் மூலமாக வழங்கப்படும் 46 சேவைகள் மற்றும் நகர்புறங்களில் 13 துறைகளின் மூலமாக வழங்கப்படும் 43 சேவைகள் ஆகியவற்றை விரைவாக வழங்கவும் குடிமக்களின் குறைகளை அறியவும் தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரம் சிறப்பு முகாம்களை நடத்தும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கியுள்ளார். இத்தகைய திட்டத்தின் மூலம் பொதுமக்களின் புகார் மீது 45 நாட்களில் முடிவு காணப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும், இந்தத் திட்டத்திற்கு சட்ட அங்கீகாரத்தை வழங்கினால் அந்த பெருமை தமிழக முதலமைச்சரை சேரும்.  புதிதாக ஒரு சட்டத்தை இயற்றி மாநில சேவை உரிமை ஆணையம் போன்ற புதிய அமைப்பு ஏற்படுத்துவதில் நிதிச் சுமை போன்ற சிரமங்கள் இருந்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட சேவை உரிமை அலுவலர் மற்றும் குடிமக்களின் குறைதீர் அலுவலரை நியமித்து மக்களின் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காண வழி வகுக்கலாம். இந்த விண்ணப்பங்கள் மீதான மேல்முறையீட்டு மன்றமாக தமிழ்நாடு லோக் ஆயுக்தாவை அறிவிக்கலாம்.  கடந்த தேர்தலுக்கு முன்பாக சேவை உரிமைச் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் லோக் ஆயுக்தா வலுப்படுத்தப்படும் என்றும் திமுக கூறிய நிலையில் மேற்கண்ட திட்டத்தை அமல்படுத்தினால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்றார் வாக்காளர் சாமி.
Theme: New seat arrangement in schools, cancer treatment, Image by “The News Park”

பள்ளிகளில் “ப” வடிவ இருக்கையில் உள்ள நன்மைகள் மற்றும் சிரமங்கள் + நூறு ரூபாயில் புற்று நோயை அழிக்க,...

இத்தகைய வரிசை முறை மாணவர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்துகிறது என்றும் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களிடமிருந்து சமமான கவனம் கிடைப்பதும் கிடைப்பதில்லை என்றும் கருதப்படுகிறது. இதனை மாற்றும் நோக்கத்துடன் அரை வட்ட வடிவ வடிவில் மாணவர்கள் இருக்கை பள்ளி வகுப்புகளில் இருப்பது போன்று ஒரு படம் கேரளாவில் வெளியானது. இந்த படத்தின் மூலம் பள்ளி வகுப்பறை இருக்கைகளில் மாற்றம் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கேரளா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர்   உள்ளிட்ட மாநிலங்களில் “ப” வடிவ இருக்கை முறையை பள்ளி வகுப்புகளில் ஏற்படுத்த நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
Theme: self-improvement thoughts, Image by “The News Park”

1.யாரிடம் பணம் தங்காது?,2. பிறரை வசியம் செய்திட வேண்டுமானால்…, 3. எங்கே தவறு நேர்ந்ததென்று பாருங்கள்!, 4. அந்தாளு...

மதிப்பிற்குரிய காவல்துறை அதிகாரி ஐயா, என் வீட்டில் கடந்த செவ்வாய் அன்று என் மனைவி கருவாட்டு குழம்பு வைத்தார்.‌ செவ்வாய், புதன் என இரண்டு நாள்கள் கருவாட்டு குழம்போடு ஓடியது. மூன்றாம் நாள் வியாழக்கிழமை நாளை என்ன குழம்பு என்று கேட்கும் போது கருவாட்டு குழம்பு தான் இருக்கே, அதுவே இன்னும் மூன்று நாளைக்கு வரும், சூடு பண்ணி வைக்கிறேன்' என்று சொன்னார். இது இந்த வாரம் மட்டுமல்ல கடந்த ஏழு வருடங்களாகவே தொடர்கிறது.
Theme: Land price rise, Image by “The News Park”

விண்ணைத் தொடும் காலி மனை இடம், நிலத்தின் விலை  – காரணம் என்ன? எப்படி கட்டுப்படுத்துவது? 

பணத்தை நிலத்தில் முதலீடு செய்பவர்கள் உண்மையாக சந்தையில் ஒரு ஏக்கர் நிலம் எவ்வளவு விலைக்கு  விற்கப்படுகிறது என்பதை காட்டிலும் பல மடங்கு கொடுத்து ஒரே இடத்தில் நிலத்தை வாங்குகிறார்கள்.   தமிழகம் முழுவதும் விவசாயம் செய்யாமல் கம்பி வேலி போடப்பட்ட நிலங்கள் அதிகரித்துள்ளதால் விவசாயத்திற்காக சிறிது நிலம் வாங்க விரும்பும் சிறு விவசாயிகளும் சிறு தொழில் நடத்த நிலம் வாங்க விரும்பும் குறுந்தொழில் புரிபவர்களும் நிலத்தை வாங்க முற்படும் போதும் அதிக வருமானம் பெறுபவர்கள் உண்மையான விலையைக் காட்டிலும் கூடுதலாக கொடுத்து வாங்கிய விலையைத்தான் நிலத்தின் உரிமையாளர்கள் கேட்கிறார்கள். 
Theme: Thoughts on life style, Image by “The News Park”

பிரச்சனை என்பது ஊதினால் பறக்கும் காகிதத்தைப் போன்றதே + நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்...

ஒரு பள்ளிக்கூடத்தில் தேர்வு நடந்து கொண்டு இருந்தது. குழந்தைகளும் தேர்வுக்குத் தயாராக வந்தார்கள். வகுப்பிலேயே புத்திசாலியான பையனுக்கு எல்லாக் கேள்விகளுக்கான விடை தெரிந்தாலும், கடைசி கேள்வியைப் பார்த்த போது கவலை அடைந்தான்.  கடைசிக் கேள்வி என்னவெனில், “தினந்தோறும் பள்ளிக்கூடத்துக்கு வரும், முதல் மனிதரின் பெயர் என்ன?“
Theme: Thoughts on life style, Image by “The News Park”

சீட்டுக்கட்டில் வாழ்வியல் உள்ளது தெரியுமா? + விமர்சனங்களை தாண்டி வெற்றி நடை போடுங்கள் + அறிவோமே சபை நாகரீகம்...

ஒரு ஆண்டுக்கு 52 வாரங்கள், சீட்டுக் கட்டிலும் 52 சீட்டுகள். ஒவ்வொரு பருவத்திலும் 13 வாரங்கள், ஒவ்வொரு வகையிலும் 13 சீட்டுகள். ஒரு ஆண்டுக்கு நான்கு பருவங்கள,  சீட்டுக்கட்டிலும் நான்கு வகையான சீட்டுகள். ஒரு வருடத்தில்  பன்னிரண்டு மாதங்கள், சீட்டுக்கட்டிலும் ராஜா, ராணி, ஜாக் என்ற முகங்களைக் கொண்ட சீட்டுகள் 12. 
Theme: Don’t feel bad, Image by “The News Park”

தேவைக்கு அதிகமாக நினைத்துக் கொண்டிருப்பது தேவையில்லை. ஒரு நிமிடம் படிக்கலாமே!

இளவரசனும் மார்க்கெட்டில் உள்ள முதல் கடைக்காரரிடம், “நான் இந்த வழியாக காலையில் சென்றேன். நீங்கள் என்னைப் பார்த்தீர்களா?” என்று கேட்டான். கடைக்காரர், “எனக்கு நேரம் இல்லை. காலை நேரம் சுறுசுறுப்பாக இருக்கும். வாடிக்கையாளர்களும் இருப்பார்கள். நான் உங்களைக் கவனிக்கவில்லை” என்றார். இதே போல மற்றவர்களைக் கேட்ட போதும், ஒருவரும் இளவரசனை நோக்கி தங்கள் கவனத்தை செலுத்தவில்லை என்பதை உணர்ந்தான்.
Theme: Small News and Big Questions, Image by “The News Park”

யார் வேண்டுமானாலும் பச்சை மையில் கையெழுத்து போடலாமா? அரசு வங்கியில் ரூ 31850 கோடி மோசடி. போலீசில் புகார்...

இந்திய குடிமக்களின் பணத்தை கையாளும் முக்கிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்பது மத்திய அரசு சொந்தமான வங்கி என்பது அனைவருக்கும் தெரியும். இத்தகைய வங்கிகளில் ரூபாய் ஒரு லட்சம் கடன் பெற்றுக் கொண்டு அதனை வேறு தொழிலுக்கு பயன்படுத்தினால் உடனடியாக கடன் வாங்கியவர் மோசடி செய்து விட்டார் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விடுவார்கள் என்று தானே நாம் அறிந்திருக்கிறோம்? ஒருவேளை கோடிக்கணக்கில் கடன் வாங்கினால் குறைந்த கடன் வாங்குபவர்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகள் வராதோ என்னவோ?
Theme: agricultural land administration, Image by “The News Park”

பட்டா பிரச்சினைகளுக்கு யாரை அணுகுவது? பசலி என்றால் என்ன? வேளாண்மை ஆண்டு என்பது என்ன? சம்பா சாகுபடி, குறுவை...

தமிழ் நாட்டில் நிர்வாக சீர்திருத்தம் குறிப்பிடும்படியான மாற்றத்தை கண்டது. மறைந்த தமிழ் நாடு முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் அதிரடி நடவடிக்கையாக கிராம் கர்ணம் மு. மணியம் பணியிடங்களை ஒழித்தார். அவரது ஆட்சி காலத்தில் மாவட்டங்கள் வட்டங்கள், உள்வட்டங்கள் பிரிக்கப்பட்டன. தமிழ் நாட்டில் 1967 க்கு பிறகு நிர்வாகத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. நில அளவைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்றும் சிரமங்களுக்கிடையில் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. பட்டா பிரச்சினைகளுக்கு யாரை எனது அணுகுவது என்ற ஓரம் கீழே விவரம் கீழே பூங்கா இதழ் கருத்தாக உள்ளது
Theme: Happiness Index - Be happy, Image by “The News Park”

சிரிப்பதற்கு கஞ்சமா! சிரிப்பே மனிதரின் முகவரி, ஆனால், மகிழ்ச்சி பட்டியலில் இந்தியாவுக்கு 118 ஆம் இடம் – ...

காரணம் இல்லாமல் சிரிப்பவன் பைத்தியம். ஆனால், தனிமையில் காரணமே இல்லாமல் சிரிக்கலாம், கண்ணாடியில் முகத்தை பார்க்கும்போது, குளியல் அறையில் கதவை அடைத்துக் கொண்டு கொண்டு காரணம் இல்லாமல் குலுங்கி குலுங்கி சிரிக்க வேண்டும். தொடர்ந்த சிரிப்பு நம்ம இளமையாக்குகின்றது. புது உற்சாகத்தை தருகிறது. காரணத்தோடு சிரித்தால் தான் சக்தி வரும் என்று இல்லை.  சிரித்தாலே போதும் நம் மனதிற்கு உடம்பிற்கும் சக்தி பெருகுகின்றது. காரணத்தோடு சிரிக்கிறோமோ, இல்லை என்பது நம் மூளைக்கு தேவை இல்லை.