கணவனிடம் மனைவியின் எதிர்பார்ப்பும் மகன், மகளிடம் அம்மாவின் எதிர்பார்ப்பும் – அம்மா எழுதிய கண்ணீர் கதை படிக்க தவறாதீர்கள்.   

ஒண்ணுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன். மறைக்காதீங்க ... உங்க முகரைய பார்த்தாலே தெரியுது... சொல்லுங்க. என்னத்த சொல்ல.. ஏதும் சின்னவீடு செட் பண்ணிட்டிங்களா… அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறிங்களா நம்ம கூட? போடி லூசு... அவன் சிரித்தான். ஆனால் அதில் உயிரில்லை.  மெதுவாய் சொன்னான்… நீயா கேட்பே சொல்லணும்னுதான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான்.
Identifying skill for success

அடையாளம் காணுதல் வெற்றியின் தொடக்கம்

அடையாளம் காண்பது எளிதல்ல. ஆனால், அடையாளம் காண்பது இயலாததும் அல்ல. வாழ்க்கையில் அடையாளம் காணும் திறனை வளர்த்துக் கொண்டால் வெற்றி நிச்சயம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தக் கட்டுரையை ஓரிரு முறை திரும்பத் திரும்ப வாசித்துப் பாருங்கள். இந்த கட்டுரையை ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் வெவ்வேறு விதமான சிந்தனைகள் உங்களுக்கு மனதில் தோன்றுவதோடு இந்த கட்டுரையின் அவசியத்தை அடையாளம் கண்டு கொள்வீர்கள். அடையாளம் காணுதலுக்கு தேவையான பண்பு ஆய்ந்தறியும் திறனாகும்.
formation of msme grievance redressal right to service environmental protection commission

நாடு முழுவதும் 45 வரி தீர்ப்பாயங்களை அமைக்க மத்திய அரசு உத்தரவு. மக்கள் நல சேவை உரிமை, தொழில்முனைவோர்...

அரசுக்கு வருவாய் தரக்கூடிய புதிய அமைப்புகளை உருவாக்க உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்களின் சம்பளத்திற்கான செலவுகளுக்கு உடனே அனுமதி அரசால் வழங்கப்படுகிறது. மக்களின் உரிமைகள் மற்றும் நலனுக்கான புதிய அமைப்புகளை உருவாக்கினால் உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்களின் சம்பளத்திற்கு செலவு ஏற்படும் என எப்போதுமே அரசின் நிதித்துறையினர் கருதுகிறார்கள். அரசு நிதி ஒதுக்கீடு செய்யாமல் ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்கள் மூலம் சேவை உரிமை, தொழில்முனைவோர் குறை தீர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆணையங்களை அமைக்க இயலும். மூலம் சேவை உரிமை, தொழில்முனைவோர் குறை தீர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆணையங்களை அமைப்பதற்கு செலவு ஏற்படும் என அரசு கருதினால் இத்தகைய அமைப்புகளை உருவாக்கி அதன் பொறுப்பை மாவட்டங்களில் செயல்படும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களுக்கு வழங்கலாம். 
india important commissions top post vacancies

தேசிய அளவில் உயர் அமைப்புகளில் காலியாக உள்ள தலைமை பதவிகள்

உயர்ந்த நோக்கங்களுக்காகவும் குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்கவும்  சட்டங்களை இயற்றி அதன் வாயிலாக தேசிய அளவிலான அமைப்புகளை பாராளுமன்றம் ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இத்தகைய உயர்  அமைப்புகளில் தலைமை பதவிகள் காலியாக இருந்தால் இந்த அமைப்புகள் திறம்பட செயல்படுவது சிக்கலானது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். காலியாக உள்ள உயர் அமைப்புகளின் தலைமை பதவிகளில் தகுந்த நபர்களை விரைவில் மத்திய அரசு நியமனம் செய்ய  வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
self confidence story

வலைத்தளத்தில் படித்ததில் மனதை தொட்ட நம்பிக்கை கதை 

எடுத்த எடுப்பிலேயே நம் மனதில் சக்தி வாய்ந்த மன உறுதியை எடுத்து அதை முழுவதுமாக பராமரித்து வரும்போது, தோல்வி என்பதே வராது. நிச்சயம் முழுமையான வெற்றியை சாதிக்க முடியும். கடுமையான சோதனைகளுக்கு  ஆளாகும் போது,  வலிமையுடையவர்கள் கூட அதில் இருந்து மீண்டு வர தவறி விடுகிறார்கள். ஆனால் அந்த நேரத்தில், அதை சமாளித்து விட்டால், நமது வேகத்தில் நாம் முன்னேறிச் செல்லலாம். வழியில் ஏற்படும் கஷ்டங்களையும், சவால்களையும் தாண்டி கடினமான கால கட்டத்தில் இருந்து உறுதியாக வெளியே வந்துவிடலாம்.  உன் மேல் நம்பிக்கை வைத்து, முன்னேறுவதற்கான வழியை கண்டுபிடி சவால்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை.
Nature Worship Tamil Tradition

இயற்கை வழிபாடு – பழந்தமிழர் பண்பாடு

இயற்கையையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பது தற்போதைய அவசிய தேவையான உள்ளது.  எதிர்கால சந்ததியினருக்கு இயற்கை வளங்கள் கிடைக்க தகுந்த முன்னேற்பாடுகளை செய்வதும் அவசியமானதாகும். இயற்கையை பாதுகாக்க தவறினால் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற நிலைமை கேள்விக்குறியாகும். தமிழர்களின் பண்பாடான இயற்கையை வழிபடுவோம்! இயற்கையை பாதுகாப்போம்!
longwa beautiful Indian Myanmar border village dual citizenship

இரட்டை குடியுரிமை கொண்ட, மூச்சடைக்கக்கூடிய இயற்கை அழகு நிறைந்த, வினோத இந்திய கிராமம்

தனித்துவமான கலாச்சார பாரம்பரியம், வளமான வரலாறு மற்றும் மூச்சடைக்கக்கூடிய இயற்கை அழகு நிறைந்த லுங்வா கிராமம் சுவாரசியமான உண்மைகளைக் கொண்டதாகும். டோயாங் நதி, நாகாலாந்து அறிவியல் மையம், ஹாங்காங் மார்க்கெட், ஷில்லோய் ஏரி மற்றும் பல சுற்றுலா தலங்கள் கொண்ட இந்த கிராமத்திலிருந்து சில மைல்களுக்கு அப்பால் இந்திய ராணுவத்தின் அஸ்ஸாம் ரைபிள்ஸ் பிரிவின் முகாம்கள் (army camps) அமைந்துள்ளது. இந்தியாவில் இரண்டு மற்றும் மியான்மரில் இரண்டு என மொத்தம் நான்கு ஆறுகள் இந்த கிராமத்தில் பாய்வதால் இயற்கை அழகு அபாரமானது. இயற்கை விரும்பிகளுக்கு பசுமையான காடுகள், மலைகள், மற்றும் அழகிய நீரோடைகள் ஆகியவற்றை கொண்டுள்ள லாங்வா ஒரு சிறந்த இடமாகும்.
increasing gang culture

அடிதடி, சண்டை தொழிலாக வளரும் கலாச்சாரம் ???

பெருநகரங்களில் மட்டும் இருந்த தீய தொழில்களுக்கான கும்பல்   கலாச்சாரமானது மெல்ல மெல்ல சிறு நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் நகர்ந்து வருகிறதா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் போதை பொருள் பழக்கம் சிறுவர்களிடையும் மாணவர்களியையும் இளைஞர்களிடையையும் அதிகரித்து வருகிறது.  அடிதடி சண்டைக்கு செல்வது ஒரு தொழில் என்ற மனப்பான்மையையும் கூலிப்படையினராக செல்வது வீரம் என்ற மனப்பான்மையையும் விதைக்கும் நயவஞ்சகர்கள் அதிகரித்துள்ளார்களோ எனக்கருத தோன்றுகிறது. இத்தகைய சூழல் ஏதோ ஒரு மாநிலத்தில் மட்டும் நிலவுகிறது என்று யாரும் கூறிவிட முடியாது.
increasing non veg food culture and adulteration

வலைத்தளத்தில் படித்ததில் பிடித்தது: 1. கறி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து விட்டது போல கலப்படமும் அதிகரித்து விட்டதா? ...

கறியில் கலக்கப்படும்...எக்கச்சக்கமான மசாலாக்கள், நிறமிகள், பிரிசர்வேட்டிவ்கள் கலக்கப்படுவதால் நம்மால் வித்தியாசம் கண்டுபிடிக்கவும் முடியாது. தப்பிக்க ஒரே வழி, குறைந்தபட்சம் அசைவ உணவுகளைப் பொறுத்தவரைக்குமாவது நம் நம்பிக்கைக்கு பாத்திரமான கடைகள் அல்லது நம் மரபு சார்ந்த பழக்க வழக்கங்களுக்கு திரும்புவது மட்டும்தான்.
pondicherry tamilnadu merger not possible

பாண்டிச்சேரியை தமிழகத்துடன் இணைக்க முடியுமா? என்பதைப் போல

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை பிரிட்டிஷார் ஆட்சி செய்தது போல தற்போது புதுச்சேரி பிரதேசமாக உள்ள பாண்டிச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளை சுமார் 280 ஆண்டுகள் பிரான்ஸ் நாடு ஆட்சி செய்தது. கடந்த 1954 நவம்பர் முதல் தேதியில் இந்த பகுதிகளை பிரான்ஸ் நாடு இந்தியாவிற்கு வழங்கிய போதிலும் கடந்த 1963 ஆம் ஆண்டுதான் இந்தியாவிற்கும் பிரான்சுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்றத்தால் ஏற்கப்பட்டு புதுச்சேரி சுதந்திரம் பெற்றது