மறைந்துவிட்ட பல்லுயிர் காவலனான இட்டேரி சுற்றுச்சூழல் அமைப்பு – தமிழர்களின் பாரம்பரியம் – படித்து தெரிந்து கொள்ளலாமே!
தமிழர்களின் பண்பாடும், வரலாறும் தெரியாத அளவிற்கு நம் வளர்ச்சி உள்ளது! கொள்ளிக்கட்டையால் சொரிந்து கொண்டால் புண்ணாகத்தான் செய்யும். பல்லுயிர் வளர்ச்சி நிலவிட, மயில்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மீண்டும் உயிர்வேலி முறைக்கு மாறுங்கள். இல்லையேல் இழப்புகளை அனுபவிக்கத்தான் வேண்டும்
ஒரு முதியோரின் டைரியில் எழுதி இருந்த ஒரு உண்மை கதை… உண்மையை படம் பிடித்து காட்டும் கதையை படிக்கத்...
அவள் மெல்லிய சிரிப்புடன் நான் எதை என்னவென்று சொல்ல.. 35 வருஷத்தில் சமையல்ல எண்ணெய் தெறிச்சதா இருக்கலாம். காய்கறி நறுக்கும்போது அருவாள் கத்தி கீறியிருக்கலாம். அடுப்பில் இருந்து பாத்திரம் இறக்கும்போது சூடு பட்டிருக்கலாம். இப்படி ஏதேதோ நடந்திருக்கும். என்றாள். மெல்லிய கோடாய் அவளின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் வடிந்தது.
உஷார்! டிஜிட்டல் அரஸ்ட், சைபர் குற்றங்கள், வாடகை மனைவி, யாரோடு வேண்டுமானாலும் உறவு எமர்ஜென்சி உள்ளிட்ட கருத்து மூட்டையுடன் ...
ஓரிரு நாட்களுக்கு முன்னர் அவருக்கு வீடியோ காலில் ஒரு போன் வந்துள்ளது. அதில் உயர் போலீஸ் அதிகாரிக்கான சீருடையில் ஒருவர் இருந்துள்ளார். தங்களது மொபைல் போன் போதை பொருள் கடத்தும் கும்பலுடன் தொடர்புடையதாக உள்ளது என கூறி பேச ஆரம்பித்துள்ளார். தம்மை மத்திய அரசின் போதை பொருள் தடுப்பு உயர் போலீஸ் அதிகாரி என கூறிக் கொண்டவர் டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருப்பதாக அந்த இளைஞரிடம் தெரிவித்துள்ளார். வீடியோ காலை ஆப் செய்தால் உங்கள் வீட்டுக்கு தகவல் சொல்வோம், பேப்பர், டிவியில் உங்கள் பெயர் வரும் என்று மிரட்டி அந்த இளைஞரை வீடியோ காலில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்காமல் 9 மணி நேரம் இருக்க வைத்துள்ளார். தாங்கள் கூறுகிற வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பினால் வழக்கிலிருந்து விடுவித்து விடுவதாக மிரட்டி இளைஞரின் வங்கி கணக்கிலிருந்து ரூபாய் இரண்டு லட்சத்தை இறுதியாக பறித்து விட்டார்.
ரூ 36,000 கோடி மெத்தம்பேட்டமைன் பறிமுதல், விற்ற காவலர்கள் கைது, கொடிய மெத்தம்பேட்டமைன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! அனுப்பி...
கடந்த வாரத்தில் சென்னைக்கு கிழக்கே உள்ள அந்தமான் தீவுகளுக்கு அருகில் ரூ 36,000 கோடி மதிப்புள்ளான மெத்தம்பேட்டமைன் போதை பொருளை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர் என்பது ஒரு செய்தி. மத்திய...
1. சமாளிப்பதற்கு உரிய மன உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம் – 2. 1940-1980 பிறந்தவர்கள் வாழ்ந்த...
பசித்தால் .. தட்டு கடையில் பாட்டி விற்ற .. ஜவ்வு மிட்டாய் ..தேன் மிட்டாய் .. கமர்கட்டு..ஐஸ் அபூர்வமாக பார்க்கப்பட்ட காலம் ..; 1960களில் குச்சி ஐஸ் அறிமுகம் .. சைக்கிள் ஹாண்டல் பாரில்... இரண்டு பெரிய பிளாஸ்க் கேண்கள் மாட்டி .. "ஐஸ் ப்ரூட் .. ஐஸ் ப்ரூட்" என்று தெருக்களில் கூவி விற்ற காலம் .. ஐஸ் ப்ரூட் .. சேமியா ஐஸ் வாங்கி.. சொட்ட சொட்ட உறிஞ்சி சாப்பிட்டு.. யூனிபார்ம் சட்டைகளெல்லாம் சிவப்பு கலர் கறையாக மாறின காலம்..!
உருவாக்கப்பட்டுள்ள நீதிபதி பணியிடங்கள் போதுமானவை அல்ல – உச்ச நீதிமன்றம். நீதிபதி பணியிடங்களில் 5,245 காலி- மத்திய அரசு.
நீதித்துறையின் சுதந்திரத்தை வலுப்படுத்தி, நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீட்டை செய்து, கூடுதல் நீதிபதிகளை நியமித்து, தொழில்நுட்ப வளர்ச்சியை நீதித்துறையில் பயன்படுத்தி வழக்குகள் நீண்ட காலம் நிலுவையில் உள்ளதை களை எடுக்க வேண்டிய நேரம் இதுவாகும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து உடனடியாக விரைவுபடுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாக உள்ளது.
அதானியை, இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய முடியுமா? மத்தியிலும் முடங்கிக் கிடக்கும் குழந்தைகள் கமிஷன், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த...
1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று உலகளாவிய மனித உரிமைகள் பிரகடன தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை இயற்றியது. இதைப்போலவே, ஒரு நாள் முன்னதாக 1948 டிசம்பர் 9 அன்று இனப்படுகொலைக்கு எதிரான உலகளாவிய பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தியது. இலங்கையில் உள்நாட்டு போரில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போதும் தற்போது காசாவில் பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதல்களிலும் இனப்படுகொலை என்ற குற்றச்சாட்டு ஒரு சாரார் தரப்பில் முன் வைக்கப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை குறித்த வியக்கும் சங்கதிகளை அறிந்து கொள்ளுங்கள்!
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி பல்லுயிர் பெருக்கம் நிறைந்த பகுதியாகும். பல்வேறு வகையான தாவரங்களையும் விலங்கினங்களையும் தன்னகத்தே கொண்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சுமார் 6000 பூச்சி இனங்கள் காணப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் குறைந்தது 325 உலகளவில் அழிந்து வரும் உயிரினங்களும் உலகின் 17 சதவீத புலிகளும் (பாந்தெரா டைகிரிஸ்) மற்றும் 30 சதவீத ஆசிய யானைகளும் (எலிபாஸ் மாக்சிமஸ்) உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலை தொடரை உலக பாரம்பரிய தளமாக 2012 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அறிவித்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள 39 இடங்களை பாரம்பரிய இடங்களாக உலக பாரம்பரிய குழு அறிவித்துள்ளது.
நவம்பர் 26 ஆம் தேதியில் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுவது ஏன் என்று தெரிந்து கொள்ளுங்கள்! அனைவருக்கும் அனுப்புங்கள்!
கடந்த 2021 நவம்பர் 26 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணி குழு சார்பில் நடைபெற்ற அரசியலமைப்பு தின விழாவில், அப்போதைய தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக இருந்தவரும் தற்போதைய நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியுமான டாக்டர் வீ. ராமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய உரையின் சுருக்கம். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகளும் வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
தமிழ்நாடு குழந்தைகள் ஆணையத்தை (கமிஷனை) அமைக்க தடை நீங்கியது – வலுவான ஆணையம் அமைய டாக்டர் வீ.ராமராஜ் கமிட்டியின்...
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள பணிகளை தமிழ்நாடு மாநில குழந்தைகள் ஆணையம் செய்வதற்கு ஏற்றவாறு உள்கட்டமைப்பு வசதிகளும் 2012 ஆம் ஆண்டில் மாநில அரசால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு குழந்தைகள் ஆணைய விதிகளும் இல்லை என்பதாகும். தமிழ்நாடு குழந்தைகள் ஆணையத்துக்கு புதிய விதிகளை உருவாக்க அரசுக்கு பரிந்துரை செய்யும் வகையில் மாதிரி வரைவு விதிகளை தயாரிக்கும் பணிக்கு தமிழ்நாடு குழந்தைகள் ஆணையத்தின் தீர்மானம் மூலம் கடந்த 2021 ஆம் ஆண்டு அப்போதைய உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் (Dr. V. Ramaraj One Man Committee) நியமனம் செய்யப்பட்டார். ஒன்பது அத்தியாயங்களில் 27 விதிகளை கொண்ட 28 பக்கங்கள் அடங்கிய மாதிரி விதிகளை (Model Rules) அவர் சமர்ப்பித்த போதிலும் அதனை ஆணைய கூட்டத்தில் அங்கீகரித்து அரசுக்கு மாநில குழந்தைகள் ஆணையம் சமர்ப்பிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மாதிரி விதிகளை தாக்கல் செய்த உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டார்.











