Wednesday, June 18, 2025
spot_img

கொஞ்சம் படிங்க! கொஞ்சம் சிரிங்க! நாம் அந்த வாழ்க்கையை சிக்கலாக்க வேண்டும்?

ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு

ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு. அந்த பள்ளிக்கூடத்தை பற்றி ஏற்கனவே அவரோடு வேலை பாத்தவங்க பலபேர் சொல்லி இருக்காங்க…  “இது ஒரு ஏடாகூமான ஸ்கூலு பார்த்து ட்ரீட் பண்ணுங்க”ன்னு…

 அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்… முதல்ல ஒரு வகுப்புக்குள்ள நுழைஞ்சாரு… உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க…

சரி… எடுத்தவுடனேயே எதாவது கேள்வி கேட்க வேண்டாம்ன்னு முதல் பையனை எழுப்பி…

“உன் பேர் சொல்லு” 

“பழனி”

“உன் அப்பா பேரு”

 “பழனியப்பன்”,

அடுத்தப் பையனை எழுப்பி ,

“உன் பேர் சொல்லு”

 “மாரி”

“உன் அப்பா பேரு”

 “மாரியப்பன்…”

அவருக்கு கொஞ்சம் டவுட் வருது …

இருந்தும் அடுத்தப் பையனை எழுப்பி…

“உன் பேர் சொல்லு”

“பிச்சை”

“உன் அப்பா பேரு”

“பிச்சையப்பா”

இப்போது அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு, சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க அப்படினு புரிஞ்சுருச்சு..

அடுத்தப் பையன எழுப்பினாரு…

“முதல்ல நீ உன் அப்பா பேரைச்சொல்லு…”

 (மனசுக்குள்ள ஒரு பெருமிதம்)

“ஜான்”

“இப்பொ உன் பேரைச் சொல்லு”

“ஜான்சன்”

கொஞ்சமா டென்சன் ஆயிடுச்சி…😈

அடுத்த பையன எழுப்பி,

“உன் அப்பா பேரை சொல்லு…”

“டேவிட்..”

“உன் பேரு…?”

“டேவிட்சன்”

 கொலவெறி ஆயிட்டாரு😬

கொஞ்ச நேரம் நிதானமா யோசிச்சி,

அடுத்த பையனை எழுப்பி,

“உன் தாத்தா பேரை சொல்லு”

“சார்… அப்பாவோட அப்பாவா?, அம்மாவோட அப்பாவா?”

ஆய்வாளர் பல்ல கடிச்சிக்கிட்டு😬,

“அப்பாவோட அப்பா”ன்னாரு

“வீரமணி”,

“சரி அப்பா பேரு?”,

“வீ.ரமணி”,

“உன் பேரு?”,

“வீ.ர.மணி…”

அப்புறம் என்ன… அதுக்கு அப்பறம் அந்த பள்ளிக்கு ஆய்வாளருன்னு ஒருத்தருமே எட்டி பார்க்குறதில்லியாம்

மீனவனும் சுற்றுலாப் பயணியும்

ஒரு சுற்றுலாப் பயணி கோவா கடற்கரைக்கு அருகில் ஒரு மீனவனை சந்தித்தார். மீனவன் பிடித்து இருந்த மீன்களின் எண்ணிக்கையைப் பார்த்த சுற்றுலாவாசி, “இவற்றைப் பிடிப்பதற்கு உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகியது?” என்று கேட்டார். “வெகு நேரம் பிடிக்கவில்லை” என்று மீனவன்  பதிலளித்தான்.

“நீங்கள் ஏன் இன்னும் அதிகமாக வேலை செய்து, அதிக எண்ணிக்கையில் மீன்களைப் பிடிக்கக்கூடாது?“ சுற்றுலாப் பயணியின் கேள்வி இது. மீனவன், “சார்,  இந்த எண்ணிக்கையிலான மீன்களைப் பிடிப்பதால், நானும் எனது குடும்பத்தினரும் வசதியாகவே வாழ்ந்து வருகின்றோம். பிறகு எதற்காக நான் இன்னும் அதிகமாக வேலை செய்தாக வேண்டும்?”

சுற்றுலா பயணி, “மீதமுள்ள ஓய்வு நேரங்களில் நீ என்ன செய்திடுவாய்?” “நான் மீன் சாப்பிடுகிறேன், வெகு நேரம் தூங்குகிறேன், குழந்தைகளோடு விளையாடுகிறேன், குடும்பத்தோடும் நண்பர்களோடும், என் நேரத்தை செலவு செய்கின்றேன்.”

சுற்றுலாப் பயணி, “நான் எனது MBA படிப்பை IIM–இல் படித்து இருக்கிறேன். ஒரு சிறந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்றால், நீங்கள் ஒவ்வொரு நாளும் நீண்ட பொழுது உழைத்தாக வேண்டும். உபரியாக நீங்கள் பிடிக்கின்ற மீன்களை விற்று அதில் உள்ள உபரி வருமானத்தை வைத்து நீங்கள் ஒரு பெரிய படகினை வாங்கிட முடியும். பிறகு இரண்டாவது மூன்றாவது என உனக்கென்று  சொந்தமாக நிறைய படகுகள் ஆகிவிடும். தரகரிடம் மீனை விற்பதற்குப் பதிலாக நீயே நேரடியாக பதப்படுத்தும் மார்க்கெட்டுக்கு விற்க முடியும். உனக்கென்று சொந்தமாக ஒரு ஆலையைக் கூட தொடங்கலாம். இந்த கிராமத்தை விட்டு அடுத்த நகருக்குச் சென்று பெரிய அளவிலான வியாபாரத்தை உன்னால் செய்ய முடியும்.”

“இவை எல்லாம் நடப்பதற்கு, எவ்வளவு காலம் பிடிக்கும்?“ மீனவன் கேட்டான். “20 அல்லது 25 ஆண்டுகள் ஆகலாம். உன்னுடைய வியாபாரம் பெரிதாகும்போது, உன்னுடைய பங்குகளை விற்று மில்லியன் கணக்கில் சம்பாத்தியம் செய்திட முடியும். பிறகு நீ ஓய்வு எடுத்துக் கொண்டு, கடற்கரை அருகில் சிறிய கிராமத்தில் வாழ்ந்து கொண்டு, கொஞ்சம் மீன்களைப் பிடித்துக் கொண்டு, நிறைய நேரம் தூங்கிக் கொண்டு, குழந்தைகளோடு விளையாடிக் கொண்டு, நண்பர்களோடும்,  குடும்பத்தினரோடும் நேரத்தை செலவழிக்கலாம்.”

மீனவன், “சார், நான் இப்பவே இந்த வேலையைத்தான் செய்து கொண்டு இருக்கிறேன். ஆகவே இதுக்காக 25 ஆண்டுகளை ஏன் வீணாக்க வேண்டும்?“ என்று கேட்டான். சுற்றுலாப் பயணி மௌனமாகி விட்டார். அவரிடம் பதில் இல்லை. நாம் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தால் மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஏன் நாம் அந்த வாழ்க்கையை சிக்கலாக்க வேண்டும்?

பூங்கா இதழ் (The News Park) கருத்து: கதைகள் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும்தான்.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
 
வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles