நாடு முழுவதும் 45 வரி தீர்ப்பாயங்களை அமைக்க மத்திய அரசு உத்தரவு. மக்கள் நல சேவை உரிமை, தொழில்முனைவோர்...
அரசுக்கு வருவாய் தரக்கூடிய புதிய அமைப்புகளை உருவாக்க உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்களின் சம்பளத்திற்கான செலவுகளுக்கு உடனே அனுமதி அரசால் வழங்கப்படுகிறது. மக்களின் உரிமைகள் மற்றும் நலனுக்கான புதிய அமைப்புகளை உருவாக்கினால் உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்களின் சம்பளத்திற்கு செலவு ஏற்படும் என எப்போதுமே அரசின் நிதித்துறையினர் கருதுகிறார்கள். அரசு நிதி ஒதுக்கீடு செய்யாமல் ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்கள் மூலம் சேவை உரிமை, தொழில்முனைவோர் குறை தீர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆணையங்களை அமைக்க இயலும். மூலம் சேவை உரிமை, தொழில்முனைவோர் குறை தீர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆணையங்களை அமைப்பதற்கு செலவு ஏற்படும் என அரசு கருதினால் இத்தகைய அமைப்புகளை உருவாக்கி அதன் பொறுப்பை மாவட்டங்களில் செயல்படும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களுக்கு வழங்கலாம்.
தேசிய அளவில் உயர் அமைப்புகளில் காலியாக உள்ள தலைமை பதவிகள்
உயர்ந்த நோக்கங்களுக்காகவும் குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் சட்டங்களை இயற்றி அதன் வாயிலாக தேசிய அளவிலான அமைப்புகளை பாராளுமன்றம் ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இத்தகைய உயர் அமைப்புகளில் தலைமை பதவிகள் காலியாக இருந்தால் இந்த அமைப்புகள் திறம்பட செயல்படுவது சிக்கலானது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். காலியாக உள்ள உயர் அமைப்புகளின் தலைமை பதவிகளில் தகுந்த நபர்களை விரைவில் மத்திய அரசு நியமனம் செய்ய வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வலைத்தளத்தில் படித்ததில் மனதை தொட்ட நம்பிக்கை கதை
எடுத்த எடுப்பிலேயே நம் மனதில் சக்தி வாய்ந்த மன உறுதியை எடுத்து அதை முழுவதுமாக பராமரித்து வரும்போது, தோல்வி என்பதே வராது. நிச்சயம் முழுமையான வெற்றியை சாதிக்க முடியும். கடுமையான சோதனைகளுக்கு ஆளாகும் போது, வலிமையுடையவர்கள் கூட அதில் இருந்து மீண்டு வர தவறி விடுகிறார்கள். ஆனால் அந்த நேரத்தில், அதை சமாளித்து விட்டால், நமது வேகத்தில் நாம் முன்னேறிச் செல்லலாம். வழியில் ஏற்படும் கஷ்டங்களையும், சவால்களையும் தாண்டி கடினமான கால கட்டத்தில் இருந்து உறுதியாக வெளியே வந்துவிடலாம். உன் மேல் நம்பிக்கை வைத்து, முன்னேறுவதற்கான வழியை கண்டுபிடி சவால்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை.
இயற்கை வழிபாடு – பழந்தமிழர் பண்பாடு
இயற்கையையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பது தற்போதைய அவசிய தேவையான உள்ளது. எதிர்கால சந்ததியினருக்கு இயற்கை வளங்கள் கிடைக்க தகுந்த முன்னேற்பாடுகளை செய்வதும் அவசியமானதாகும். இயற்கையை பாதுகாக்க தவறினால் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற நிலைமை கேள்விக்குறியாகும். தமிழர்களின் பண்பாடான இயற்கையை வழிபடுவோம்! இயற்கையை பாதுகாப்போம்!
இரட்டை குடியுரிமை கொண்ட, மூச்சடைக்கக்கூடிய இயற்கை அழகு நிறைந்த, வினோத இந்திய கிராமம்
தனித்துவமான கலாச்சார பாரம்பரியம், வளமான வரலாறு மற்றும் மூச்சடைக்கக்கூடிய இயற்கை அழகு நிறைந்த லுங்வா கிராமம் சுவாரசியமான உண்மைகளைக் கொண்டதாகும். டோயாங் நதி, நாகாலாந்து அறிவியல் மையம், ஹாங்காங் மார்க்கெட், ஷில்லோய் ஏரி மற்றும் பல சுற்றுலா தலங்கள் கொண்ட இந்த கிராமத்திலிருந்து சில மைல்களுக்கு அப்பால் இந்திய ராணுவத்தின் அஸ்ஸாம் ரைபிள்ஸ் பிரிவின் முகாம்கள் (army camps) அமைந்துள்ளது. இந்தியாவில் இரண்டு மற்றும் மியான்மரில் இரண்டு என மொத்தம் நான்கு ஆறுகள் இந்த கிராமத்தில் பாய்வதால் இயற்கை அழகு அபாரமானது. இயற்கை விரும்பிகளுக்கு பசுமையான காடுகள், மலைகள், மற்றும் அழகிய நீரோடைகள் ஆகியவற்றை கொண்டுள்ள லாங்வா ஒரு சிறந்த இடமாகும்.
அடிதடி, சண்டை தொழிலாக வளரும் கலாச்சாரம் ???
பெருநகரங்களில் மட்டும் இருந்த தீய தொழில்களுக்கான கும்பல் கலாச்சாரமானது மெல்ல மெல்ல சிறு நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் நகர்ந்து வருகிறதா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் போதை பொருள் பழக்கம் சிறுவர்களிடையும் மாணவர்களியையும் இளைஞர்களிடையையும் அதிகரித்து வருகிறது. அடிதடி சண்டைக்கு செல்வது ஒரு தொழில் என்ற மனப்பான்மையையும் கூலிப்படையினராக செல்வது வீரம் என்ற மனப்பான்மையையும் விதைக்கும் நயவஞ்சகர்கள் அதிகரித்துள்ளார்களோ எனக்கருத தோன்றுகிறது. இத்தகைய சூழல் ஏதோ ஒரு மாநிலத்தில் மட்டும் நிலவுகிறது என்று யாரும் கூறிவிட முடியாது.
வலைத்தளத்தில் படித்ததில் பிடித்தது: 1. கறி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து விட்டது போல கலப்படமும் அதிகரித்து விட்டதா? ...
கறியில் கலக்கப்படும்...எக்கச்சக்கமான மசாலாக்கள், நிறமிகள், பிரிசர்வேட்டிவ்கள் கலக்கப்படுவதால் நம்மால் வித்தியாசம் கண்டுபிடிக்கவும் முடியாது. தப்பிக்க ஒரே வழி, குறைந்தபட்சம் அசைவ உணவுகளைப் பொறுத்தவரைக்குமாவது நம் நம்பிக்கைக்கு பாத்திரமான கடைகள் அல்லது நம் மரபு சார்ந்த பழக்க வழக்கங்களுக்கு திரும்புவது மட்டும்தான்.
பாண்டிச்சேரியை தமிழகத்துடன் இணைக்க முடியுமா? என்பதைப் போல
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை பிரிட்டிஷார் ஆட்சி செய்தது போல தற்போது புதுச்சேரி பிரதேசமாக உள்ள பாண்டிச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளை சுமார் 280 ஆண்டுகள் பிரான்ஸ் நாடு ஆட்சி செய்தது. கடந்த 1954 நவம்பர் முதல் தேதியில் இந்த பகுதிகளை பிரான்ஸ் நாடு இந்தியாவிற்கு வழங்கிய போதிலும் கடந்த 1963 ஆம் ஆண்டுதான் இந்தியாவிற்கும் பிரான்சுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்றத்தால் ஏற்கப்பட்டு புதுச்சேரி சுதந்திரம் பெற்றது
வழக்கறிஞர் தொழிலில் அனுபவம் இல்லாதவர்களை நீதிபதிகளாக (மேஜிஸ்ட்ரேட்/முன்சீப்) பதவிகளில் நியமித்து வருவது சரியா?
தமிழகத்தில் இளநிலை நீதிபதியான பணியிடங்கள் பல காலியாக உள்ள நிலையில் அடுத்து வரும் இளநிலை நீதிபதி தேர்வுகளுக்கு உயர் நீதிமன்ற விதிமுறைகள் மாற்றப்பட்டு அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவார்களா? அல்லது சட்ட பட்டம் மட்டும் படித்து எவ்வித வழக்கறிஞர் தொழில் அனுபவம் இல்லாதவர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அமெரிக்காவில் நவம்பர் மாத தேர்தலுக்கு ஓராண்டராக பிரச்சாரம் ஏன்? அமெரிக்காவைப் பற்றி அறிய வேண்டிய சங்கதிகள்
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று குடியுரிமை பெற்று வாழ்பவர்களில் முதலிடம் பிடித்திருப்பது மெக்சிகோ நாட்டவர்கள் ஆவார்கள். இரண்டாம் இடத்தை பிடித்திருப்பது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்திய பரம்பரையினர் ஆவார்கள். அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களுக்கும் தனித்தனி அரசியலமைப்பு உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி கொடி உள்ளது.