இளங்கலை (பி. ஏ.,) படித்தாலும் சாதிக்கலாம்!
இளங்கலை பட்ட படிப்பை படிக்கும் போதே மாநில அளவிலும் தேசிய அளவிலும் நடத்தப்படும் அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் வேலை வாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகலாம். இளங்கலை படிப்பை படிக்கும் போதே ஏ.சி.எஸ்., (Company Secretaryship) ஐ.சி.டபிள்யூ.ஏ., (Cost Accountant) சி. ஏ., (Auditor) போன்ற படிப்புகளை பயிலும் மாணவர்களும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் தலைமை பண்பை உருவாக்கும் தன்மை கொண்ட இளங்கலை படிப்புகளை படித்து பல்வேறு சாதனைகளை படைக்கலாம் - வாழ்வில் வெற்றிகளும் பெறலாம் என்பதில் மாற்றமில்லை.
போரில்லா உலகம் வேண்டும் என முழங்கும் செஞ்சிலுவைச் சங்கம்
ஜெனிவாவுக்குத் திரும்பிய பின் டியுனான்டுக்கு சால்பரினோ போர்க்கள காட்சிகள் அடிக்கடி நினைவுக்கு வந்தது. இது போன்ற நிகழ்வு இப் பூமியில் மீண்டும் தொடரக் கூடாது என்பதற்காக போரில் காயம்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக தனி அமைப்பு தேவை என்பதையும் வலியுறுத்தி 1862-ல் சால்பரினோ நினைவுகள் என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.
உயர்ந்த பதவிகளையும் வேலை வாய்ப்புகளையும் வழங்கும் ஐ. நா. (U.N.O) நிறுவனங்கள்
தமிழகத்தில் திறமை மிக்க இளைஞர்களும் அனுபவம் வாய்ந்த தொழில் முறை வல்லுனர்களும் நிறைந்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு சர்வதேச அளவில் சிறப்பான பணியை செய்வதற்கு தமிழர்கள் முன் வர வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளில் பணியாற்றுவது அரிய அனுபவங்களையும் நல்ல வாய்ப்புகளையும் வழங்கக் கூடியதாகும். இந்தப் பணிகளுக்கு தகுதியின் (merit) அடிப்படையிலேயே உரிய தேர்வு முறைகளில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது
அரசியலமைப்பை மாற்றுவதில் தவறில்லை. ஆனால், அதற்கான அவசியம் தற்போது இல்லை
அரிஸ்டாட்டிலின் அரசியலமைப்பு குறித்த கருத்து என்னவெனில் "அரசியலமைப்பு என்பது அரசு தனக்குத் தானே தேர்ந்தெடுத்த வாழ்க்கை முறை." ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு அரசியலமைப்பை வகுத்துக் கொண்டுள்ளது. இந்த அரசியலமைப்புதான் சட்டம் இயற்றும் அமைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும்? பாராளுமன்ற முறை அமைப்பு இருக்க வேண்டுமா? அல்லது அதிபர் ஆட்சி முறை இருக்க வேண்டுமா? அல்லது வேறு ஏதாவது வகையிலான ஆட்சி முறை இருக்க வேண்டுமா? என்பதையும் கூட்டாட்சி அரசாங்கமாக இருக்க வேண்டுமா? அல்லது ஒற்றையாட்சி முறை அரசாங்கமாக இருக்க வேண்டுமா? என்பதையும் நீதித்துறையின் அமைப்பையும் தீர்மானிக்கிறது.
உலக பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாடினால் போதுமானதா?
ஒவ்வொரு ஆண்டும் உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டால் மட்டும் போதுமானது அல்ல. ஒவ்வொரு மாதமும் பிரதம அமைச்சரும் மத்திய அரசின் ஒவ்வொரு துறை அமைச்சர்களும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களையும் அழைத்து சந்திப்பு ஒன்றை நடத்த வேண்டும். நடுநிலை அல்லது ஆளுங்கட்சி ஆதரவு அல்லது எதிர்க்கட்சி ஆதரவு செய்தியாளர் என்ற பாரபட்சத்தை பார்க்காமல் அனைவரின் கேள்விகளுக்கும் இந்த சந்திப்பில் பதில்களை வழங்க வேண்டும்.
என்று முடியும் போக்குவரத்து நெரிசல்கள்?
வாழும் இடத்திலிருந்து வேலை பார்க்கும் இடத்திற்கு தினமும் பயணிக்க போக்குவரத்து நெரிசல் கடுமையான சிரமங்களை தருகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு மக்களுக்கு அதிக நேரம் செலவாவதோடு போக்குவரத்து நெரிசலால் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளின் செலவும் அதிகரிக்கிறது. உழைப்புக்கு செலவிடப்பட வேண்டிய மனிதனின் நேரம் போக்குவரத்து நெரிசலால் பயண நேர அதிகரிப்பின் காரணமாக வீணடிக்கப்படுகிறது. இதன் காரணமாக மனித உழைப்பும் எரிபொருளும் வீணாகி பொருளாதாரத்தை பாதிக்க கூடியதாக போக்குவரத்துக்கு நெரிசல் அமைகிறது
தேவை மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம்
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சென்னையில் பசுமை தீர்ப்பாயம் செயல்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரும் சென்னைக்குச் சென்று பசுமை தீர்ப்பாயத்தில் புகார் தாக்கல் செய்து வழக்கு நடத்துவது என்பது சிரமமான ஒன்றாகும். நீதி எப்போதுமே எளிதில் அணுகக் கூடியதாக இருந்தால்தான் மக்கள் அதனை பெறுவதில் சிரமம் இருக்காது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இதனை மனதில் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தை (district environmental protection commission) அமைக்க தகுந்த சட்டத்தை இயற்றி அமல்படுத்துவது தற்போதைய தேவையாக உள்ளது.
சின்னஞ்சிறிய மூன்று நாடுகள் – 121 ஏக்கரில் ஒரு நாடா?
121 ஏக்கர் பரப்பளவு மட்டுமே கொண்ட கிறிஸ்துவ மத - கத்தோலிக்கர்களின் தலைமையகமான வத்திக்கான் சிட்டி (Vatican City) உலகத்தில் உள்ள நாடுகளிலேயே மிகவும் சிறிய நாடாகும். 2023 ஆம் ஆண்டு கணக்கின்படி கணக்கெடுப்பின்படி இந்த நாட்டின் குடிமக்கள் எண்ணிக்கை 764 மட்டுமே.
ஊராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள், அலுவலர்கள் மீதான புகார்களை விசாரிக்கும் ஆம்புட்ஸ்மேன்
செய்ய வேண்டிய பணியை செய்யாமல் இருத்தல் (omission) மற்றும் செய்யக்கூடாத பணியை செய்தல் (commission), ஊழல் (corruption), சீர்கேடான நிர்வாகம் (maladministration) மற்றும் முறைகேடுகள் (scam) மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவருக்கு (லோக்கல்பாடி ஆம்புட்ஸ்மேன் அமைப்புக்கு) அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது
தமிழக நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் – விரிவான விவரங்களுடன்.
விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள “நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு, மெட்ராஸ் உயர்நீதிமன்றம், தமிழ்நாடு சார்நிலை நீதித்துறை பணியில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள் - அறிவிக்கை எண் 75 முதல் 171 வரை, நாள் 28 -04- 2024 என்ற அறிவிக்கையை பதிவிறக்கம் (Common Instructions to the candidates- (28th April 2024 – pdf file) செய்து முழுமையாக படித்து விவரங்களை தெரிந்து கொள்வது அவசியமாகும்.