விஞ்ஞானிக்கு மரண தண்டனை வழங்கியது சரிதானா? வலைத்தளத்தில் படித்த பிடித்த கதை
வெற்றியடைய எந்த தகுதியும் தேவையில்லை. உங்கள் இதயம் கூறுவதை பின்பற்றி உங்களை உற்சாகமூட்டும் வேலையை செய்பவராக இருந்தால் உங்கள் வெற்றி உறுதியாகிவிட்டது. தேவையான தகுதிகளை வளர்த்துக் கொள்ளுங்கள். புதிய யோசனைகள் மற்றும் திறனாய்வு சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள். எதிலும் மோதல் வேண்டாம். உங்களுக்கான நேரம் வரும்வரை மௌனமாக காத்திருங்கள். ரிஸ்க் எடுக்க தயங்காதீர்கள். நீங்கள் செய்யும் வேலையின் மீது தீராத காதல் வேண்டும். தெளிவான கருத்து பரிமாற்றம் அவசியம். முடிந்தால் உங்கள் தலைவரின் வேலையை சேர்த்து செய்யுங்கள்.
தமிழகத்துக்கு புதிய ஆளுநரா? இந்த அரசியல் ஆய்வாளருக்கு எப்படி நேரம் கிடைக்கிறது? என்பது உள்ளிட்ட கருத்து மூட்டைகளுடன் வாக்காளர்...
இது மட்டுமல்ல. அவர் பல்கலைக்கழக மானிய குழுவால் வழங்கப்பட்டுள்ள சில ஆய்வுத் திட்டங்களையும் மேற்கொண்டுள்ளார். சில விருதுகளை பெற்றுள்ளதோடு அரசியல் அறிவியல் கல்வி தொடர்பான பல குழுக்களில் தலைவராகவும் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், பிஎச். டி., எம். பில்., பட்டத்துக்காக ஆய்வு செய்யும் மாணவர்கள் பலருக்கு ஆய்வு வழிகாட்டியாகவும் (Research Guide) இருந்துள்ளார். தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் திறம்பட பணியாற்றியதோடு ஆணையத்திற்கான மாதிரி விதிகளை (Model Rules) சமர்ப்பித்தவரும் தற்போது மாவட்ட நுகர்வோர் நீதிபதியாக இருப்பவருமான டாக்டர் வீ. ராமராஜ் அவர்களுக்கு பிஎச். டி., எம். பில்., பட்ட வழிகாட்டி டாக்டர் பி சக்திவேல் ஆவார்
மனைவியை கொலை செய்தது நியாயம்தான் – வலைத்தளத்தில் படித்த ஒரு நிமிடக் கதை
வரிசையாக அனைவரும் நின்று, உயிர் காப்புப் படகில் ஏறிக்கொண்டு இருந்தனர். அந்தக் கப்பலில் ஒரு இளஞ்ஜோடி இருந்தனர். இந்த இளம் ஜோடி படகில் ஏறும் தருணத்தில் ஒருவருக்கு மட்டும்தான் படகில் இடம் இருந்தது. அந்த சமயத்தில் அந்த மனிதன் தன்னுடைய மனைவியை வரிசையை விட்டு நீக்கி விட்டு, அவன் முன்னால் வந்து படகில் குதித்தான். மூழ்கிக்கொண்டு இருக்கும் கப்பலில் நின்று கொண்டு இருந்த அந்த பெண்மணி தன்னை விட்டுச் சென்றுகொண்டு இருக்கும் கணவனைப் பார்த்து உரத்த குரலில் ஒரு வாக்கியத்தைக் கூறினாள்.
மறந்து போன தமிழர் கலாச்சாரம்: வெற்றிலையிலும் ஆண் வெற்றிலை, பெண் வெற்றிலையா? புறக்கணிப்போம்
வெற்றிலையுடன் புகையிலை சேர்ந்து உண்ணும் பழக்கம் கணையம் மற்றும் உணவு குழாய் புற்று நோய்களை உருவாக வழி வருகிறது. புகையிலை உடன் கலக்கும் பொழுது வெற்றிலை பாக்கு மெல்லும் பழக்கத்தை கைவிடுவது மிக கடினமாகும். வெற்றிலை ஆகிய மருந்தை அளவாக உட்கொண்டு பயனை பெறுவதே உடலுக்கு மிகச் சிறந்தது. உடல் நலத்துக்கு பலனளிக்கும் மறந்து போன தமிழர்களின் வெற்றிலை கலாச்சாரத்தை மீட்டெடுப்போம். ரசாயன கலவைகளை கொண்ட “பான்” போன்ற அந்நிய கலாச்சாரத்தை புறக்கணிப்போம்.
மருத்துவம் என்ற பெயரிலான சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட சட்டத்தை அமல்படுத்த காலதாமதம் செய்வது ஏன்?
மருத்துவம் மற்றும் மருத்துவக் கல்வி என்ற பெயரில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி மக்களை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை அமல்படுத்துவது ஏன் காலதாமதம் செய்யப்படுகிறது? என தெரியவில்லை. இந்த சட்டத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.
பேய் இருக்கிறதா? இல்லையா? உள்ளிட்ட கருத்து மூட்டைகளுடன் வாக்காளர் சுவாமி
“சரி சாமி, பேய் இருக்கிறதா? இல்லையா?” என்று வாக்காளர் சாமியிடம் கேட்டபோது “இது குறித்து பல விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. பூங்கா இதழில் நீங்களும் ஒரு கட்டுரை வெளியிடுங்கள் என்பதற்கு இந்த செய்தியை கூறினேன் “ பேய் கருத்து முட்டையை கட்டி வைத்தார் வாக்காளர் சாமி. பேய் இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்த கருத்துக்களை வாசகர்களும் என்ற [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு வாரத்துக்குள் அனுப்பலாம். தகுதி வாய்ந்த கருத்துக்கள் விரைவில் வெளியாகும் பேய் குறித்த கட்டுரையில் இடம்பெறும். “இன்று பூங்கா இதழின் 30 பயிற்சி கட்டுரையாளர்களுக்கும் கூட்டம் நடைபெறுகிறது அல்லவா? முதலில் அவர்கள் சிலரிடம் பேய் இருக்கிறதா? இல்லையா? என்று கருத்து கேட்டு வெளியிடுங்கள்” என்று வாக்காளர் சாமி வேண்டுகோள் வைத்தார்.
பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் வேண்டும் சமத்துவம்- பல்கீஸ் பீவி. மு, சட்டக் கல்லூரி மாணவி
பல இடங்களில் ஆண்களுக்கு சட்டத்தில் சம உரிமை வழங்கப்படவில்லை . உதாரணமாக, தவறான அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளை ஆண்கள் மீது சுமத்துவது குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் மூலம் அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது. ஆண்களும் சில தருணங்களில் பெண்களால் அச்சுறுத்தி கற்பழிக்கப்படுகிறார்கள். இவ்வாறு பாதிக்கப்படும் ஆண்கள் புகார் செய்தால் சம்பந்தப்பட்ட பெண்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு சட்டத்தில் இன்றளவும் இடமில்லைஎன்பதும் சமத்துவமின்மையே. பெண்களுக்கு முன்னுரிமை என்ற பெயரில் ஆண்களுக்கு சமத்துவம் வழங்கப்படாத அநீதியும் சில நிகழ்வுகளில் தொடர்ந்து இருந்து வருவது மறுக்க முடியாத உண்மையாகும்.
வெளிப்புற தோற்றத்தை வைத்து எடை போடாதீர் – வலைதளத்தில் படித்த பிடித்த கதை
அடுத்தடுத்து, அவர் நிறைய இரவுகள் எங்களுடன் தங்கினார். மீனோ, சிப்பிகளோ அல்லது அவர் தோட்டத்தில் இருந்து காய்கறிகளோ என்று ஏதாவது ஒன்றை ஒரு போதும் அவர் வாங்கி வராத நாளே கிடையாது. சில வேளைகளில், தபாலில், பார்சல்களாக வரும். எப்போதும் ஸ்பெஷல் டெலிவரி என்றே வரும். மீன்களும், சிப்பிகளும், கீரை, பசலைக் கீரைகளால் ஆன பெட்டிகளில் வைத்து வரும். கீரைகள் சுத்தமாகக் கழுவப்பட்டு, புத்தம் புதியதாக இருக்கும். இதை மெயிலில் அனுப்ப அவர், மூன்று மைல் தூரம் நடந்து சென்றாக வேண்டும். அவரிடம் பணம் குறைவாக இருப்பதும் கூட நான் அறிவேன். இது அனைத்தும் சேர்ந்து, அவரது பரிசை மிகவும் விலைமதிப்பு உள்ளதாக்கிவிட்டது.
இப்படியும் நடக்குமா? வலைத்தளத்தில் படித்த ஒரு நிமிட கதை
முதல் முறை நாம் செய்த தவறு அதிலிருந்த குறைகள் போன்றவையே அந்த வெற்றி நம்மை அடைவிடாமல் செய்துவிட்டது என்பதை புரிந்துகொண்டு அந்த காரணத்தை அடுத்த முறை முயற்சி செய்கின்றபொழுது தவிர்க்கவேண்டும். அப்பொழுதும் வேறு ஒரு தவறால் வேறு ஒரு காரணத்தால் அது வெற்றி அடையவில்லை என்றால் அதையும் சரி செய்து நாம் மீண்டும் வெற்றிபெற முயற்சி செய்யவேண்டும். இவ்வாறு நாம் வெற்றி அடைகின்ற வரை செய்கின்ற தவறுகளையும் அதை அடையவிடாமல் செய்யும் காரணத்தையும் சரி செய்து சரி செய்து மீண்டும் மீண்டும் முயற்சி செய்கின்ற பொழுது நிச்சயம் ஒருமுறை அந்த முயற்சி வெற்றியை அடைந்தே தீரும்.
300 ஆண்டுகள் பழமையான சனி பகவான் கோவில் உள்ள சிக்னாபூரில் வீடுகளுக்கு மட்டுமல்ல, வங்கிக்கும் கழிப்பறைகளுக்கும் கதவுகள் கிடையாது
சனி சிக்னாபூர் கிராம சனிபகவான் கோவிலில் கடந்த 300 ஆண்டுகளாக கருவறைக்குள் பெண்கள் நுழைவது அனுமதிக்கப்படுவதில்லை . 26 ஜனவரி 2016 அன்று, 500 க்கும் மேற்பட்ட பெண்கள் குழு கோவிலுக்கு அணிவகுத்து, உள் சன்னதிக்குள் நுழையக் அனுமதி கோரினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தப்பட்டதை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பெண்கள் கோவிலின் கருவறைக்குள் நுழைவதை உறுதி செய்யுமாறு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 8 ஏப்ரல் 2016 அன்று, சனி சிக்னாபூர் அறக்கட்டளை பெண் பக்தர்களை கருவறைக்குள் நுழைய அனுமதித்தது. காலத்துக்கேற்ற மாற்றங்கள் கட்டாயமானது என்பதை இந்த ஊரில் நடைபெறும் சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன.