அக்டோபரில் பாகிஸ்தானுக்கு இந்திய பிரதமரை வருமாறு பாகிஸ்தான் எதற்கு அழைக்கிறது? இந்திய பிரதமர் செல்வாரா?
ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் அடுத்த மாநாடு வரும் அக்டோபர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டை நடத்தும் நாடு என்ற முறையில் பாகிஸ்தான் அரசாங்கம் இந்திய பிரதமரை இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது. மக்களவைத் தேர்தல் காரணமாக கடந்த முறையில் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும் பிரதமர் பங்கேற்கவில்லை இந்த நிலையில் பாகிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்வாரா? என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
வேற்று கிரகவாசிகள் பூமியில் இருக்கிறார்கள்! இஸ்ரோ தலைவரின் கருத்து குறித்து ஒரு அலசல்
பறக்கும் தட்டுகளில் வேற்றுக்கிரகவாசிகள் அவ்வப்போது பூமிக்கு வருவதாக பல வெளிநாட்டு திரைப்படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். தற்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் வேற்றுக்கிரகவாசிகள் உலகுக்கு வந்து சென்றிருக்க வாய்ப்புகள் உள்ளது என்றும் உலகில் அவர்கள் இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது என்றும் கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூமியின் துருவங்களில் இவ்வளவு அதிசயங்களா?
6 மாதம் இருளும் 6 மாதம் பகலும் காணப்படும். அண்டார்டிகாவில் செப்டம்பர் 1 முதல் மார்ச் 22 வரை சூரியன் உதயமாகும். மற்ற நாட்களில் இருள் சூழ்ந்து துருவ இரவு (Polar Night) நிலவுகிறது. அண்டார்டிகாவின் கடலோரப் பகுதிகளில் கோடைகாலத்தில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் அளவிலும் குளிர்காலத்தில் மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் அளவிலும் நிலவுகிறது. அண்டார்டிகாவின் உள்பகுதிகளில் உயரமான பனி பிரதேசங்களில் கோடைகாலத்தில் சுமார் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் அளவிலும் குளிர்காலத்தில் மைனஸ் 80 டிகிரி செல்சியஸ் அளவிலும் நிலவுகிறது.
சிறப்புமிகு சிறுவாபுரி முருகன் ஆலயம்
சிறுவாபுரி முருகனின் திருத்தலத்தில் ஒரு திருப்புகழ் பாடினால் சொந்த வீடு, தொழில், சிறந்த குடும்பம், செல்வம், மோட்சம் ஆகிய ஐந்து பெரும் பலன்களை அடையலாம் என முருக பக்தர்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். முருகனின் திருவடியை சரணம் என எண்னும் அனைவரும் வாழ்வில் ஒரு முறையாவது சிறுவாபுரி சென்று அவர் புகழ் பாடி முருகனின் திருப்பாதங்கள் பணிந்து இன்புற்று நலமாக வாழலாம்.
வீடுகளில் வளர்க்கப்படும் செடிகளில் அறிவியலா? ….. ஆன்மீகமா?
வாஸ்து ரீதியாக ஸ்பைடர் பிளான்ட், அதிர்ஷ்ட மூங்கில் மற்றும் இன்னும் பல செடிகளை கூறுகின்றனர். இவ்வாறு அறிவில் கூறும் கருத்துக்களையும் ஆன்மீகம் கூறும் தகவல்களையும் நாம் கேட்கும் பொழுது மனதில் சற்று குழப்பம் ஏற்படும். எது நமக்கு நல்லது? என்ற கருத்துக்களை அறிவியலோ, ஆன்மீகமோ எது கூறினாலும் அவற்றில் உள்ள நல்ல கருத்துக்களை நாம் வாழ்க்கையில் செயல்படுத்துவதே சிறப்பானதாக அமையும்.
வேறுபட்ட கண்ணோட்டம் – ஏற்றுக்கொள்ளும் மனநிலையை வளர்க்கும் வலைத்தளத்தில் படித்த கதை
எந்த நிகழ்ச்சியோ அல்லது விஷயமோ அவற்றிற்கு இரண்டு பக்கங்கள் உண்டு – நேர்மறை அம்சமும், எதிர்மறை அம்சமும். அதை நாம் எப்படிப் பார்க்க விரும்புகிறோமோ அதைப் பொறுத்து, அது நம்மை சார்ந்து இருக்கிறது. நமது வாழ்க்கையின் விதியும் அதைப் பொறுத்துதான் அமைகிறது.
எல்லாவிதமான இக்கட்டான சூழ்நிலைகளிலும்,ஏற்றுக் கொள்ளுதல் என்னும் உணர்வு இருந்தால்,அது மிக மோசமான விளைவுகள் எதுவுமே இல்லாமல் காப்பாற்றி,நம்மை முன்னோக்கி செல்ல வைக்கும்.
ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இணையான பதவிகளில் நேரடி நியமனம். இட ஒதுக்கீட்டு முறைக்கு ஆபத்தா?
இவ்வாறு இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நகர்வுகள் எதேச்சையாக நடக்கிறதா? என்பதை பாதிப்புக்கு உள்ளாகும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தீர்மானிக்கட்டும். நீயும் நானும் பேசி என்ன உபயோகம்?” என்று டாப்பிக்கை முடித்தார் வாக்காளர் சாமி.
தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் மாறுகின்றனவா? சிறப்பு செய்தி தொகுப்பு & கடந்த ஏழு நாட்கள் (11-18 ஆகஸ்ட்...
தற்போது நிலவும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் கடந்த மக்களவைத் தேர்தலில் இருந்த நிலைப்பாடுகளிலிருந்து மாற்றம் கண்டுள்ளனவா? என யோசிக்க வைப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். எவ்வாறு இருப்பினும் 2026 தமிழக சட்டமன்ற களத்தில் திமுக, அஇஅதிமுக, பாஜக, தமிழக வெற்றி கழகம் ஆகிய நான்கு தலைமைகளில் நான்கு கூட்டணிகள் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. எந்த எந்த கூட்டணியில் எந்த எந்த கட்சிகளோ?
பிரதமர் தவறான புள்ளி விவரத்தை வழங்கினாரா? எதிர் கட்சித் தலைவருக்கு அவமரியாதையா?+ 5, சிரிக்க போனசாக 12 ஜோக்ஸ்!
இந்தியாவுடன் நல்ல நட்பில் இருந்த மாலத்தீவு தற்போது இந்தியாவை விட்டு விலகிச் சென்று சீனாவுடன் உறவு காட்டுகிறது என்பது ஊரறிந்த உண்மை. இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்று வந்தார். இதன் பின்னர் அதிரடி வியூகத்தால் 28 தீவுகளை இந்தியாவிடம் ஒப்படைத்த மாலத்தீவு என்ற தகவல் சமூக ஊடங்களில் வேகமாக பரவியது. மக்களிடையே இந்தியாவின் வெளியுறவு கொள்கை சிறந்தது என்பதை காட்டுவதற்கு இத்தகைய தகவல் பரப்பப்பட்டதா? என்பது தெரியவில்லை. ஆனால், உண்மையில் எந்த ஒரு தீவையும் மாலத்தீவு இந்தியாவின் நிர்வாகத்திற்கு ஒப்படைக்கவில்லை என்பதுதான் உண்மையான சங்கதியாகும். பொய்யை உரக்கச் சொன்னால் நம்பி விடுவார்களோ?
தேவை மக்களுக்கான இரண்டாம் விடுதலைப் போர்
வறுமை, பசி, ஊட்டச்சத்து குறைபாடு, வீடு இல்லாமை, வேலையில்லாமை, குற்றங்கள் அதிகரிப்பு போன்றவற்றிலிருந்து இந்திய மக்கள் விடுதலை பெறுவதற்கான இரண்டாவது சுதந்திர போராட்டத்தை தீவிரமாக தொடங்க வேண்டிய தருணம் இதுவாகும். அரசும் அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் இந்த போரில் களம் கண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.