தங்கள் இலக்கை நிர்ணயம் செய்யுங்கள்
வாழ்க்கையின் இலக்குகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக இருக்கலாம். ஒருவருக்கு மிகப்பெரிய பணக்காரராக வேண்டும் என்பது ஆசையாக இருக்கலாம். மற்றொருவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக தினமும் வாழ வேண்டும் என்பது எண்ணமாக இருக்கலாம். இன்னொருவருக்கு பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது விருப்பமாக இருக்கலாம். மற்றொருவருக்கு ஆன்மீக பணியில் ஈடுபட வேண்டும் என்பது கருத்தாக இருக்கலாம்.
தமிழ்நாடு குழந்தைகள் ஆணையம் மறு ஜென்மம் பெறுமா?
மூன்று ஆண்டுகள் பதவியில் நியமிக்கப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 13 மாதங்களே பணியாற்றி உள்ளார்கள். எஞ்சிய 23 மாதங்கள் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக அவர்களால் பணியாற்ற இயலவில்லை. அவர்களது பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதத்தில் முடிந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக தொடர்ந்து ஆணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இல்லாத நிலை நீடிக்கிறது. இந்த வகையில் கடந்த 27 மாதங்களாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் ஆணையம் செயல்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. இத்தகைய போக்கு குழந்தைகளின் பாதுகாப்புக்கும் எதிர்காலத்துக்கும் மிகுந்த ஆபத்தானதாகும்.
வாழ்க்கை வாழுகிறோமா! வசிக்கிறோமா? வலைதள பக்கத்தில் படித்ததில் பிடித்தது
தாய்க்கு நிகராய் காவல் காத்த தாய் மாமன்கள் இருந்தார்கள். ஜரிகை குறைவான வேட்டி வாங்கி தந்ததற்காக சண்டை போட்ட பங்காளிகள் இருந்தார்கள். இழவு விழுந்த வீடுகளில் உறவினர் இடுகாடு வரை போனார்கள்..
ஆறு மாதத்தில் பா.ஜ.க., தனி மெஜாரிட்டி பெற போகிறதா?
இத்தகைய நடவடிக்கைகள் மூலம் பாராளுமன்றத்தின் மக்களவையில் பாரதிய ஜனதா கட்சி இன்னும் ஆறு மாதங்களில் அறுதி பெரும்பான்மை பெறுமா? என்பதை யாராலும் தற்போது கணிக்க இயலாது. எவ்வாறு இருப்பினும் எல்லா அரசியல் கட்சிகளின் தலைமையும் தங்களது பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் மீது தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் கட்சி மாறுவது அல்லது கட்சி பிளவை ஏற்படுத்துவது அல்லது ராஜினாமா செய்வது போன்ற எந்த ஒரு நடவடிக்கையும் வாக்களித்த மக்களுக்கும் வாய்ப்பு அளித்த கட்சிக்கும் துரோகமானது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் இந்தி பேசும் தொழிலாளர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதா? தமிழக தொழிலாளர்களின் உடல் உழைப்பு வளம் குறைகிறதா?
தமிழக தொழிலாளர்களின் உடல் உழைப்பு வளம் குறைகிறதா? என்பதை என்பது குறித்த ஆய்வை தமிழக அரசு உடனடியாக மேற்கொண்டு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பது தற்போதைய அவசிய தேவையாக உள்ளது. தமிழக தொழிலாளர்களின் உடல் உழைப்பு வளம் குறையுமாயின் அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் கண்டறிந்து சரியாக அவர்களை வழிநடத்த வேண்டியது உடனடி தேவையாகும்.
சமச்சீரான பொருளாதார பிராந்தியங்கள் உருவாக்கப்பட வேண்டும்
ஒவ்வொரு பகுதியிலும் அந்த பகுதிக்கு ஏற்றவாறு தொழில்களை வளர்ச்சி அடைய செய்ய நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் வேலை வாய்ப்பின்மை கட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் அனைத்து பகுதிகளிலும் சாலை, குடியிருப்பு உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படும். எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் ஒற்றுமையும் கலாச்சாரமும் சிறப்பாக வளரும். இதற்கு தேச அளவிலான திட்டத்தை வகுத்து அதனை அமல்படுத்த வேண்டிய தருணம் இதுவாகும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறினால் பொருளாதார சமச்சீரின்மை ஏற்பட்டு அதன் காரணமாக பல்வேறு பிரச்சனைகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்.
சென்னை மாநகராட்சி கொடியில் மீன், புலி, வில் அம்பு சின்னம் பொறிக்க காரணமாக இருந்த ம.பொ.சி.
யார் இந்த ம.பொ.சி? தனது ஏழ்மை நிலை காரணமாக, மூன்றாம் படிவப் படிப்பை பாதியிலிலேயே நிறுத்திய ம.பொ.சி திறன்மிக்க புத்தக படைப்புகளின் மூலம் தன் பட்டறிவை நிரூபித்தார். சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழுவில் இருமுறை உறுப்பினராகவும், மதுரை காமராஜர் பல்கலை கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலை கழகம் ஆகியவற்றில் செனட் உறுப்பினராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். இவர் எழுதிய சுதந்திரவீரன் கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் ஆகிய புத்தகங்கள் பின்னாளில் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன.
ஐ.நா. அமைதிப்படை தினம்: வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்!
கடந்த 75 ஆண்டுகளில் ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றிய 4,300 பேர் பணியின் போது வீரமரணம் அடைந்துள்ளார்கள். கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் மே 29 அன்று ஐக்கிய நாடுகள் சபை அமைதிப்படை தினமாக அனுசரிக்கப்படுகிறது. அமைதிப்படை பணியில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அமைதிப்படையில் பணியாற்றிய மற்றும் பணியாற்றி கொண்டு உள்ளவர்களின் சேவையை பாராட்டு விதமாகவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
தேவையானதை விட கூடுதல் கலோரி ஆற்றல் தரும் உணவுகளை எடுத்து கொழுப்பை அதிகரிக்கிறீர்களா?
ஒருவருக்கு தேவையான கலோரி அளவைவிட கூடுதலான உணவை சாப்பிடும்போது உடல் தனது தேவைக்கானது போக கூடுதலாக பெறப்படும் கலோரிகளில் குறிப்பிட்ட அளவு பங்கை மட்டும் உடல் சேமித்து வைத்துக் கொள்ளும். உடலால் சேமிக்க கூடிய அளவையும் விட கூடுதலாக உணவுகள் மூலமாக உடலுக்கு கலோரி கிடைக்கப்பெற்றால் அவை கொழுப்பாக மாறிவிடும்.
கண்ணாடி இல்லையா- கைது செய்?
தலைய வளைச்சு செல்போனை பேசி அடுத்தவங்க உயிரை எடுக்க நினைச்ச நபர்களின் செல்போன்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் இப்போதே ஒப்படைத்து ஒப்புகை சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். தப்பு செஞ்சவங்க 24 மணி நேரம் கழித்து அதாவது நாளைக்கு மாலை 5 மணிக்கு ஒப்புகை சீட்டை கொடுத்து செல்போனை பெற்றுக் கொள்ளலாம்