அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய “வாக்காளரியல்” (Voterology)
கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக “வாக்காளரியல்” என்ற வார்த்தையை உபயோகித்து அதன் அவசியத்தை தர்க்க ரீதியாக எடுத்துரைப்பதால் (Dr. V.Ramaraj, Father of Voterology, advocates the need of Voterology) டாக்டர் வீ. ராமராஜ் அவர்களை “வாக்காளரியலின் தந்தை” என அழைப்பது பொருத்தமானதாக இருக்கும் என்றால் மிகையல்ல.
இந்தியாவில் உள்ளது நியாயமற்ற தேர்தல் முறையா? குறைந்த மக்களின் ஓட்டு – ஆனால் பிரதமர் சீட்டு
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த மக்களின் ஓட்டை பெற்றுக்கொண்டு 50 சதவீத மக்கள் கூட ஆதரிக்காத நிலையில் உள்ள கட்சிகள் பிரதமர் பதவியை பெற்று ஆட்சி நடத்தி வந்துள்ளன. இந்தியாவின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட மக்களின் ஆதரவர்களை பெற்றவர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் சட்ட திருத்தத்தை கொண்டு வர தேர்தல் களத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பார்களா? வாக்காளர்களே! நீங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சிகளிடம் இத்தகைய கோரிக்கையை முன்வைப்பீர்களா?.
ஒரே நாடு – ஒரே தேர்தல் ...
இந்திய திருநாட்டில் பதினெட்டாம் மக்களவைக்கான தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தலைமை தேர்தல் ஆணையராக டி. என். சேஷன் பதவி வகித்த போது தேசிய வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம்...
செய்தியாளர் மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சிக்கு மாணவர்- இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தின் சார்பில் நுகர்வோர் பூங்கா (theconsumerpark.com), பூங்கா இதழ் (thenewspark.in) ஆகிய இணைய இதழ்கள் தமிழில் வெளியாகி வருகின்றன. வரும் 2024 ஜூலை முதல் தேதியில் இருந்து ஆராய்ச்சி பூங்கா...
மாதவிடாய் கால சானிட்டரி நாப்கின்கள் – வரமா? சாபமா?
பெண்களின் மாதவிடாய் கால உரிமைகளை (Right of Mensuration Period) அரசாங்கத்தாலும் தனியார் அமைப்புகளாலும் தனிநபர்களாலும் மறுக்க முடியாது. ஆனால், இதைப் பற்றி வெளிப்படையாக பேசுவதையே அருவருப்பான செயலாக பலர் கருதுவது கோபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
கொடைக்கானல்: அறிந்ததும் அறியாததும் – பழனியில் இருந்து பறப்பது எப்போது?
பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு செல்ல 65 கிலோ மீட்டர் தூரத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆங்கில ஆட்சி காலத்தின் போது பழனியில் இருந்து பால சமுத்திரம், பாலாறு அணை, ஐந்து வீட்டு அருவி வழியாக கொடைக்கானலில் உள்ள வில்பட்டி என்ற இடத்துக்கு சுமார் 30 கிலோமீட்டர் தூர பயணத்திலேயே செல்லும் வகையில் சாலை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இந்தப் பாதையை அமைத்தால் அப்பகுதியில் உள்ள விவசாயம் செழிப்பதோடு சுற்றுலா பயணிகளுக்கும் உபயோகமாக அமையும் என்பதில் மாற்றமில்லை. அதே சமயத்தில் குறுகிய தூரத்தில் கொடைக்கானல் சென்றடைவதால் தற்போதுள்ள வழியில் செல்ல பயணத்துக்கு ஏற்படும் எரிபொருளும் மிகப்பெரிய அளவில் மிச்சமாகும் என்பதே உண்மையாகும்.
அதிக வருமானம் தரக்கூடிய கண்வலி கிழங்கு விவசாயத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன?
மனதை கொள்ளை கொள்ளும் அழகை கொண்ட செங்காந்தள் மலர்தான் தமிழகத்தின் மாநில மலராகும். இந்த மலரே ஜிம்பாவே நாட்டின் தேசிய மலராகும். மிக அதிகமாக கார்த்திகை மாதத்தில் இந்த பூ மலர்வதால் இதனை கார்த்திகை பூ என்றும் அழைக்கின்றனர். சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை பத்துப்பாட்டு போன்றவற்றிலும் செங்காந்தள் மலர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசறிவியலை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் – அரசறிவியல் பேராசிரியர் வலியுறுத்தல்
இன்று இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடிமக்களும் அரசு, அரசாங்கம் மற்றும் அரசியல் அமைப்பு பற்றி தெரிந்து கொள்வது என்பது இன்றியமையாத ஒரு செயலாகும். மனிதனுடைய ஒவ்வொரு வாழ்க்கையிலும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு பாடம் அரசறிவியல். அரசறிவியல் பாடத்தின் தந்தையாக கருதக்கூடிய அரிஸ்டாட்டில் இப்பாடத்தை பற்றி கூறும் பொழுது மனிதன் அன்றாடம் இயங்குவதற்கு தேவைப்படக்கூடிய ஒரு பாடம் அரசறிவியல் என்று கூறினார். இன்று மேற்கத்திய நாடுகள் முதற்கொண்டு இந்தியா வரை பெரும்பான்மையான மாணவர்கள் படிக்கக்கூடிய ஒரு பாடமாக அரசறிவியல் இருந்து வருகின்றது.
சமரச தீர்வில் சாதனை படைத்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்
1986 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் நுகர்வோர் தகராறுகளில் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கான சட்டபூர்வமான வழிமுறை ஏற்படுத்தப்படவில்லை. இந்த குறையை போக்கும் வகையில் 2019 ஆம்...
மயில்களின் இனப்பெருக்கம் விவசாயிகளுக்கு பிரச்சனையாக உள்ளதா?
தேசத்தின் முதுகெலும்பாக திகழும் விவசாயத்திற்கும் இயற்கையின் கொடையாக உள்ள உணவு சங்கிலி முறைக்கும் மயில்களின் இனப்பெருக்கம் ஆபத்தாக அமையாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியது உடனடி தேவையாகும்.