Friday, May 30, 2025
spot_img

மனிதர்கள் இப்படித்தானா? என்பதை அறிய ஒரு நிமிடம் செலவழித்து படியுங்கள்! இது கதையா? உண்மையா?

ஒரு இளம் பெண் தன் தாத்தாவிடம் கேட்டாள், “தாத்தா, என் வாழ்க்கையில் பயனுள்ளதாக இருக்கும் என்பதை  நீங்கள் எனக்கு என்ன கற்றுத்தர முடியும்? ” தாத்தா ரொம்ப நாளா யோசித்தார் பிறகு சொன்னார், “உனக்கு கற்றுத்தர என்னிடம் சக்தி வாய்ந்த வாழ்க்கை பாடம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.  ஆனால், அதற்கு முன், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில், பெரிய ஒன்றை நீ செய்ய வேண்டும். “

அந்த பெண் மகிழ்ச்சியாய் கேட்டாள். “என்ன  ஏதாவது செய்ய வேண்டுமா தாத்தா? ” தாத்தா ஒரு கணம் இடைநிறுத்திவிட்டு, பிறகு விசில் அடித்தார், “நீ அக்கம் பக்கம் சுற்றிச் சென்று, என் தீக்கோழி ஆறு தங்க முட்டைகளை இட்டதாக எல்லோருக்கும் சொல்ல வேண்டும். அவர்கள் அனைவரும் இதைக் கேட்டு ஆச்சரியப்படுவார்கள். ஒவ்வொரு முட்டையும் பல மில்லியன் மதிப்புள்ளவை என்றும், அவற்றை விற்று நான்  கோடிசுவரனாக மாறுவேன் என்றும் அவர்களிடம் சொல்லு. விரைவில் என் வாழ்க்கை மாறும்  என்று எல்லோருக்கும் சொல்லு, நான் சமூகத்தின் பணக்காரர்களில் ஒருவனாக மாறுவேன். “என சொல்லு

அதன் சாராம்சம் புரியாமல் அந்த இளம்பெண் அப்படியே செய்தாள். அவள் திரும்பி வந்தபின், அவளும் அவளுடைய தாத்தாவும் பகலும் இரவும் காத்திருந்தார்கள். ஆனால் அவர்களுடைய அக்கம்பக்கத்தார் யாரும் வீட்டிற்கு வந்து அவரை வாழ்த்தி, அவருடன் சேர்ந்து மகிழவில்லை.

மறுநாள் காலை, தாத்தா தன் பேத்தியிடம் சொன்னார், “இப்போது, நீ அக்கம்பக்கம் சுற்றிப்போய், நேற்றிரவு, ஒரு திருடன் வந்து என் வீட்டை அழித்து, என் தீக்கோழியை கொன்று, தங்க முட்டைகளை திருடிவிட்டான் என்று எல்லோரிடமும் சொல்ல வேண்டும். நான் அனைத்தையும் இழந்துவிட்டேன் என்று அவர்களிடம் சொல்லு! ” அந்த பெண்  வெளியே சென்று அக்கம்பக்கத்தினரிடம் அப்படிச் சொன்னாள். சொன்னவுடனே சிறிது நேரத்திற்கு பிறகு, தங்கள் வீட்டில் மக்கள் கூட்டம் கூடியது அவளுக்கு அதிர்ச்சியூட்டுகிறது. ஆச்சரியமாக இருந்தது, 

அந்த இளம் பெண் தன் தாத்தாவிடம் கேட்டாள், “தாத்தா, இன்று நிறைய பேர் வந்தாங்க, ஆனா நேத்து யாரும் வரலியே? “தாத்தா சிரித்துக்கொண்டே சொன்னார். மக்கள் நம்மைப் பற்றிய நல்ல செய்திகளைக் கேட்கும்போது, அவர்கள் அமைதியாக இருந்து, அதைப் புறக்கணித்து, எதுவும் நடக்காதது போல் நடிக்கிறார்கள். அவர்கள் நம்மைப்பற்றிய தீய செய்தியை கேட்டால், அதை காட்டுத்தீ போல் பரப்பி, அது உண்மையா என அவர்கள் விரைகின்றனர். உன் வெற்றியை கொண்டாட மக்கள் சிரமப்படுவார்கள், ஆனால் உன் வீழ்ச்சியைக் காண விரைவார்கள்”.

அந்த தருணத்தில், தாத்தா பேத்தியின் தோள்களில் ஒரு கையை வைத்து, மீண்டும் புன்னகைத்தார், பின்னர் தொடர்ந்தார், “இப்போது நான் உனக்கு கற்றுத்தர வேண்டிய சக்திவாய்ந்த வாழ்க்கை பாடம் இதுதான். நம்மை சுற்றி இருப்பவர்கள் நம்மிடம் சொல்லும் மிகப்பெரிய பொய் நாம் வெற்றி பெறுவதை பார்த்து அவர்கள் சந்தோசப்படுகிறார்கள் என்பதே.  உண்மை என்னவென்றால், பெரும்பாலான மக்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் கூட நீங்கள் வெற்றி பெறுவதை பார்க்க விரும்புவதில்லை. நீங்கள் அவர்களை விட வெற்றிகரமானவராகிறீர்கள் என்பதை யாராவது உணரும்போது, அது அச்சுறுத்தலாக மாறிவிடும். 

பெரும்பாலான மக்கள் அவர்களை விட சிறப்பாகச் செய்வதை உண்மையாக விரும்புவதில்லை. அவர்கள் பொறாமைப்படுகிறார்கள், உள்ளே ஆழமாகப் யோசிக்கிறார்கள், அந்த வாழ்க்கை இருப்பதைத் தவிர வேறு எதுவும் அவர்களுக்குத் தேவையில்லை. இருப்பினும், மற்றவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் அல்லது அவர்கள் உங்களை எவ்வாறு உணர்கிறார்கள் என்பதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது என்பதை நினைவில் கொள்வது அவசியம். 

மாறாக, உங்களை சிறந்தவர்களாக மாற்றுவதில்  கவனம் செலுத்துங்கள். மற்றவர்களை மாற்ற முயற்சிப்பதை நிறுத்துங்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவலைப்படுவதை நிறுத்துங்கள்.  உங்கள் இலக்குகளை நிர்ணயித்து கொள்ளுங்கள். உங்கள் கனவுகளைப் பின்பற்றுங்கள். உங்கள் இதயம் சொல்வதைக் கேளுங்கள். மேலும் உங்கள் கனவுகளை அடைவதில் இருந்து உங்களை யாரும் அல்லது எதுவும் தடுப்பதை தவிர்த்து வெற்றி நடை போடுங்கள் (SIX GOLDEN EGGS என்ற  ஆங்கில கதையின் தமிழாக்கம்)

பூங்கா இதழ் (The News Park) கருத்து: மனிதர்களின் மனதை அறிந்து கொள்வது தான் உளவியலோ?.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
 
வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles