தமிழ்நாடு குழந்தைகள் ஆணையம் மறு ஜென்மம் பெறுமா?

மூன்று ஆண்டுகள் பதவியில் நியமிக்கப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 13 மாதங்களே பணியாற்றி உள்ளார்கள்.  எஞ்சிய 23 மாதங்கள் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் ஆணையத்தின் தலைவர்  மற்றும் உறுப்பினர்களாக அவர்களால் பணியாற்ற இயலவில்லை. அவர்களது பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதத்தில் முடிந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக தொடர்ந்து ஆணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இல்லாத நிலை நீடிக்கிறது.  இந்த வகையில் கடந்த 27 மாதங்களாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள்  ஆணையம் செயல்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. இத்தகைய போக்கு குழந்தைகளின் பாதுகாப்புக்கும் எதிர்காலத்துக்கும் மிகுந்த ஆபத்தானதாகும்.