சமீபத்திய கட்டுரைகள்

Theme: Earn Engineering Degree without going to college, Image by “The News Park”

பன்னிரண்டாம் வகுப்பு முடித்தும் கல்லூரிக்கு செல்ல முடியாத சூழல் உள்ளதா? கவலை வேண்டாம். கல்லூரிக்கு செல்லாமலே படித்து இன்ஜினியரிங்...

கல்லூரிக்கு செல்லாமலே இன்ஜினியரிங் பட்டம் பெறுவதற்கும் வழிகள் உள்ளது.  முயற்சி பலமுறை என்னை கைவிட்டது உண்டு. ஆனால் முயற்சியை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன் என்பதற்கு ஏற்ப   பொறியியல் கல்லூரியில் சேர இயலவில்லை என்று கவலை வேண்டாம். மாற்று வழிகளில் இணையான பட்டங்களை பெற்று வெற்றி பெறலாம்.
Theme: Study opportunities – after 12th, Image by “The News Park”

பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு சட்டக் கல்வி,  பி.எஸ்சி.,-ல் இத்தனை பிரிவுகளா? பி. ஏ.,பி. காம்., உள்ளிட்ட பட்டங்கள்.  ...

பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த டாக்டர் வீ. ராமராஜ் அவர்கள் 12 ஆம் வகுப்பில் பள்ளியில் மிக அதிக மதிப்பெண்களை எடுத்த போதிலும் சூழல் காரணமாக கல்லூரியில் இணைய இயலவில்லை. இருப்பினும் தொலைதூரக் கல்வியில் பி. ஏ., பட்டம் பெற்ற பின்னர் அவர் கல்லூரிக்குச் சென்று சட்டக் கல்வியையும் சென்னை பல்கலைக்கழகத்தில் குற்றவியல் துறையிலும் படித்தார். தற்போது பன்னிரண்டு பட்டங்களுக்கு மேல் படித்துள்ள அவர் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராகவும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் இருந்து வந்து, தற்போது அமைச்சர்கள் அனைத்து அரசு அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பில் உறுப்பினராக  (at the cadre of high court judge) பணியாற்றி வருகிறார். என்ன படிக்கிறோம் என்பது முக்கியமல்ல என்ன படித்தாலும் திட்டமிட்டு பணியாற்றினால் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு இவராகும்.
Theme: Stories makes laughing and thinking, Image by “The News Park”

நாற்காலியை தொங்க விட்டது யார்? 98 மதிப்பெண்கள், நீங்களும் சைக்காலஜி நிபுணர்தான். இரண்டு அரை நிமிட கதைகளை படியுங்கள்!...

ஒருவர் நம்மிடம் கடன் கேட்டால், அவர் புரபஷனல், நாம கத்துக்குட்டி என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஏன் என்றால் கடன் வாங்குபவர்களுக்கு பலரிடம் கடன் வாங்கிய அனுபவம் இருக்கும். கொடுப்பவர்களுக்கு இருக்காது. ஒரு புரபஷனலும், கத்துகுட்டியும் மோதினால் என்ன ஆகும்?
Theme: wiseman wins story, Image by “The News Park”

“ஒரு தட்டில் பூசணிக்காயையும் உங்கள் தலையையும்  இன்னொரு தட்டில் உங்கள் தலையையும் வெட்டி வைக்கிறேன்” என்ற அறிவாளியின் ஒரு...

“ஐயா! நான் செய்ய வேண்டிய இரண்டாவது வேலை என்ன?” என்று பணிவுடன் கேட்டான் அவன். “என்னிடமா உன் திறமையைக் காட்டுகிறாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்’ என்று தனக்குள் கறுவினார் அவர்.  “அந்த அறைக்குள் ஈர நெல் உள்ளது. அந்த நெல்லை நீ வெளியே எடுத்துச் செல்லாமல் காய வைக்க வேண்டும்,” என்றார். “இதுவும் எளிய வேலைதான்,” என்ற அவன், அந்த வீட்டுக் கூரையின் மேல் ஏறி, கூரையைப் பிரித்துக் கீழே தள்ளத் தொடங்கினான்.
Theme: Importance of Liver, Image by “The News Park”

மதுவின் எதிரியான கல்லீரல் பற்றி தெரிந்து கொள்வோம்! கல்லீரல் வேலை செய்யாவிட்டால் அவ்வளவுதான்!

கல்லீரல் முழுமையாக செயலிழந்தால் நமது உடலும் செயல் இழந்து விடும். கல்லீரல் உயிரணுக்களில் பல நொதிகள் காணப்படுகின்றன. கல்லீரல் உயிரணுக்கள் பாதிப்படயும்போது இவை நோய் நிலைகளின்போது இரத்தத்தில் வெளிப்படுகின்றன. கல்லீரலை பாதிக்கும் சில நோய்கள் ஆல்கஹால் கல்லீரல் நோய் (Alcoholic liver disease), கொழுப்பு கல்லீரல் நோய் (Fatty liver disease), ஹெப்படைடிஸ் (Hepatitis) போன்றவை. மாற்றுக் கல்லீரல் பொருத்துதல் என்ற சிகிச்சைக்கு ...........
Theme: Human Nature, Image by “The News Park”

மனிதர்கள் இப்படித்தானா? என்பதை அறிய ஒரு நிமிடம் செலவழித்து படியுங்கள்! இது கதையா? உண்மையா?

மறுநாள் காலை, தாத்தா தன் பேத்தியிடம் சொன்னார், "இப்போது, நீ அக்கம்பக்கம் சுற்றிப்போய், நேற்றிரவு, ஒரு திருடன் வந்து என் வீட்டை அழித்து, என் தீக்கோழியை கொன்று, தங்க முட்டைகளை திருடிவிட்டான் என்று எல்லோரிடமும் சொல்ல வேண்டும். நான் அனைத்தையும் இழந்துவிட்டேன் என்று அவர்களிடம் சொல்லு! " அந்த பெண்  வெளியே சென்று அக்கம்பக்கத்தினரிடம் அப்படிச் சொன்னாள்.
Theme: Kolukkumalai- hill station – trekking. Image by “The News Park”

தமிழகத்தில் உள்ள மூடுபனிமலையான கொழுக்குமலைதான் உலகின் மிக உயரமான தேயிலை தோட்டம்.

கடற்கரைகளில் நின்று சூரியன் தோற்றம் மறைவைக் கண்டு ரசிப்பதற்கு மாறாக மலையுச்சியிலிருந்து சூரியன் தோற்றம், மறைவைக் காண்பது மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். விடியற்காலையின் அமைதியையும், இரவின் நட்சத்திர வெளிச்சத்தையும் அனுபவிக்க இங்கு தங்குவது ஒரு அரிய வாய்ப்பாகும்.கொழுக்குமலைக்கு கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொழுக்குமலைக்கு வந்து செல்கிறார்கள். இந்த பகுதி மலையற்ற பயிற்சிக்கு செல்வதற்கு உலக புகழ் பெற்றது.
Theme: if you try, when one door closes, another one opens. Image by “The News Park”

படித்து மகிழ சிந்திக்க: முயற்சித்தால் மட்டுமே ஒரு கதவு மூடினாலும் இன்னொரு கதவு திறக்கும் என்பதை காட்டும் மனதை...

கடை கொஞ்சம் கொஞ்சமா படுக்க ஆரம்பிச்சது. சரக்கு போட்டு ஓடுனாத்தான் இது மாதிரி கடைகளுக்கு லாபம். போட்ட சரக்கு நின்னுச்சின்னா படு நட்டம் ஆயிடும் அதுதான் ஆச்சிக்கி நடந்தது. சுத்தமாப் படுத்துருச்சு கடை வாடகைக்குக் கட்டுபடி ஆகாததால கடைய மூடுற மாதிரி ஆயிப்போச்சு கடைய மூடிட்டு அவங்க வீட்டு வாசல்லயே எடம் கொஞ்சமா இருந்ததால இட்லி தோசை மாத்திரம் விக்க ஆரம்பிச்சது ஆச்சி.
Theme: Moral Stories Image by “The News Park”

சிந்திக்க: அரை நிமிட கதைகள் இரண்டு.  1. உதவிக்கரம் நீட்டுவது நின்று விடும். 2. மனைவிக்கான தேர்வு

குதிரை வீரன் சிரித்தவாறே, "ஏறுங்கள்" என்றான். அவன் ஏற முயன்ற போது அவனால் ஏற முடியவில்லை, "நான் ஒரு உழவன், குதிரை மீது ஏறி எனக்கு பழக்கம் இல்லை" என்றான். குதிரை வீரன் கீழே இறங்கி அவன் ஏறி அமர உதவி புரிந்தான். குதிரை மீது அவன் ஏறியவுடன், தேர்ச்சி பெற்ற குதிரை வீரனாக குதிரை மீது தட்டி வேகமாக அவன் குதிரையுடன் நகரத் தொடங்கினான். தலையில் கையை வைத்த குதிரை வீரன், தான் ஒரு பெரும் கொள்ளைக்காரனிடம் சிக்கியது தெரியவந்தது. 
Theme: Way to happy family life, Image by “The News Park”

மனைவி தைலம் தடவ… மனைவி குளிப்பதற்காக கணவன் வெந்நீர் போட.. இன்னும் எத்தனையோ வாழ்க்கையை ரசிக்க இதனை படியுங்கள்!

'குடும்ப நண்பர்கள்' என்று கண்டவர்களையும் சேர்த்துக் கொள்ளாதீர்கள். முன்பின் அறியாதவர்களை வீட்டிற்கு வரவழைக்காதீர்கள். பேசுவதை மட்டுமே வைத்து யாரையும் நல்லவர்கள் என்று நம்பிவிடாதீர்கள். அப்படிப்பட்டவர்களால் கணவன் - மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டு, பல குடும்பங்கள் தரைமட்டமாகிப் போயிருக்கின்றன.