அக்டோபரில் பாகிஸ்தானுக்கு இந்திய பிரதமரை வருமாறு பாகிஸ்தான் எதற்கு அழைக்கிறது? இந்திய பிரதமர் செல்வாரா?

ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் அடுத்த மாநாடு வரும் அக்டோபர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டை நடத்தும் நாடு என்ற முறையில் பாகிஸ்தான் அரசாங்கம் இந்திய பிரதமரை இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது. மக்களவைத் தேர்தல் காரணமாக கடந்த முறையில் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும் பிரதமர் பங்கேற்கவில்லை இந்த நிலையில் பாகிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின்  மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்வாரா? என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.