உலகப் புகழ்பெற்ற பத்து மலை முருகன்

மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து வடக்கே 13 கிலோமீட்டர் தொலைவில் இயற்கையாக அமைந்த சுண்ணாம்பு குன்றுகளுக்கு அருகில் செல்லும்   பத்து   என்ற பெயர் கொண்ட ஆற்றின் அருகே பத்து மலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த குகை கோவிலுக்குள் பல குகைகள் உள்ளன. முருகன் கோவில் அமைக்கப்படுவதற்கு வெகு காலத்துக்கு முன்னர் இந்த குகைகளில் மலேசிய பழங்குடியினர் வாழ்ந்து வந்ததாக சரித்திர சான்றுகள் தெரிவிக்கின்றன.