தமிழகத்தில் உதயமாக உள்ள சர்வதேச அமைதிக்கான உத்திகள் கல்வி மையம்

“அமைதிக்கான உத்திகள் அமைப்பின் சமூக பொறியியல் பிரிவின் சார்பில் சர்வதேச அமைதிக்கான உத்திகள் கல்வி மையத்தை (International Institute of Peace Strategies) விரைவில் தமிழகத்தில் நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். தொடக்கத்தில் இந்த மையம் டிஜிட்டல் முறையிலானதாக அமையும். அமைதி கலாச்சாரத்துக்கான கல்வியை போதித்தல் மற்றும் பயிற்சி அளித்தல், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக குறுகிய கால படிப்புகளை நடத்துதல் ஆகியன இந்த கல்வி மையத்தின் முதல் கட்ட பணிகளாக இருக்கும். சர்வதேச அமைதிக்கான உத்திகள் கல்வி மையத்தில் கீழ்க்கண்ட துறைகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது”.