தேவை மக்களுக்கான இரண்டாம் விடுதலைப் போர்

வறுமை, பசி, ஊட்டச்சத்து குறைபாடு, வீடு இல்லாமை, வேலையில்லாமை, குற்றங்கள் அதிகரிப்பு போன்றவற்றிலிருந்து இந்திய மக்கள் விடுதலை பெறுவதற்கான இரண்டாவது சுதந்திர போராட்டத்தை தீவிரமாக தொடங்க வேண்டிய தருணம் இதுவாகும்.  அரசும் அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் இந்த போரில் களம் கண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.