தேவை மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம்

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சென்னையில் பசுமை தீர்ப்பாயம் செயல்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரும் சென்னைக்குச் சென்று பசுமை தீர்ப்பாயத்தில் புகார் தாக்கல் செய்து வழக்கு நடத்துவது என்பது சிரமமான ஒன்றாகும். நீதி எப்போதுமே எளிதில் அணுகக் கூடியதாக இருந்தால்தான் மக்கள் அதனை பெறுவதில் சிரமம் இருக்காது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இதனை மனதில் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும்   மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தை (district environmental protection commission) அமைக்க தகுந்த சட்டத்தை இயற்றி அமல்படுத்துவது தற்போதைய தேவையாக உள்ளது.