Theme: Story of Dr Muthulakshmi + Fate of love and friendship, Image by “The News Park”

காதல் கணவருக்கு நிபந்தனை விதித்து திருமணம் செய்த இந்தியாவின் முதல் பெண் மருத்துவர், ஆண்கள் படித்த கல்லூரியில்...

நம் கிட்ட பேசினால் மனசுக்கு நிம்மதியாக இருக்கு என்று சொல்லுவார்கள். நாம் என்ன சொன்னாலும் செய்வதற்கு தயாராக இருப்பார்கள். வாழ்க்கை நெறியிலும் இதை எல்லாம் செய்யாதே. இது நல்லதல்ல என்று சொன்னால் கருத்துடன் கேட்பார்கள். கேட்டபடி நடப்பார்கள். அவர்கள் வீட்டில் என்ன நடந்தாலும் நம்மிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுவார்கள். நம்மை பார்க்காமல்  உறங்கப் போக மாட்டார்கள். அவ்வளவு அதிக பாசப்பிணைப்பு இருக்கும். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்  பேசிக் கொண்டே இருப்பார்கள்.  நமக்கு அதிகம் முக்கியத்துவம் தருவார்கள்.
Theme: Love, Image by “The News Park”

ஒரு பெண்ணின் காதல் எப்போது தோற்று போகிறது தெரியுமா? செழியன் குமாரசாமி அவர்களின் வலைதளப்பதிவு

" நீ ரொம்ப அழகா இருக்க.... நீ சிரிச்சா அப்படி இருக்கு. உன் உடை அப்படி இருக்கு." இது போன்ற வார்த்தைகளில் காதல் என்று நம்பி ஏமாறும் பெண்களே அதிகம். இப்போதுலாம் முகநூல் இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளங்களில் நிறைய பெண்கள் நிறைய போட்டோ போடுறாங்க. நிறைய நண்பர்களை இணைகிறார்கள் இதற்கெல்லாம் காரணம் நீங்க அழகா இருக்கீங்க என்று வரும் வார்த்தைகளை ரசிக்கத்தான்.
Theme: Thoughts, Image by “The News Park”

நாம் நாத்திகரா? ஆத்திகரா? என்பது முக்கியமில்லை + ஹோட்டலில் ரூம் தரவில்லை என்பதற்காக…

மழை எவ்வாறு பெய்கிறது இது ஒரு கேள்வி. படிப்பறிவில்லாத  ஒரு ஆத்திகரை கேட்டால்  மேலிருந்து ஆண்டவன் குளிக்கிறான் அதுதான் மழை. எல்கேஜி மாணவனை கேட்டால் வானத்துல தேங்கி இருக்கிற தண்ணீர்பொத்துக் கொண்டு ஊத்துகிறது என்பான். பத்தாம் வகுப்பு மாணவனிடம் கேட்டால் கடல் நீர் ஆவியாகி மேலே சென்று மழையாக பொழிகிறது என்பான். ஒரு கல்லூரி மாணவனுக்கு இந்த விளக்கம் போதாது. அதுவே ஆராய்ச்சி மாணவனாக இருந்தால் பட்டதாரி மாணவனுக்கு சொன்ன விளக்கமும் போதுமானதாக இராது .
Theme: Self Development Thoughts, Image by “The News Park”

கிணற்றைதான் விற்றேன், நீருக்கு பணம் தர வேண்டும் என்ற வழக்கறிஞரின் கேள்விக்கு.., பில்கேட்சை விட பணக்காரர் யார் தெரியுமா?...

நண்பர் ஒருவர் நாட்டுப் பசு மாடு வாங்க வேண்டும் என நினைத்தார். பசுவைப் பற்றி முழுவதும் அறிந்த ஒருவரை தேடிப்பிடித்து, பசு வாங்குவதற்கான நல்ல நாள், நேரம், சகுனம் எல்லாம் பார்த்து, மாட்டினுடைய நிறம், அதனுடைய சுழி, அதனுடைய கொம்பு அமைப்பு என எல்லாவற்றையும் கவனித்து கடைசியில் பசுவும் வாங்கினார். அவர் எதிர்பார்த்ததை விட பாலும் நிறையவே கிடைத்தது. ஆனால்,
Theme: Human Rights Courts, Image by “The News Park”

மனித உரிமைகள் கமிஷனை பற்றி பெரும்பாலும் தெரியும். உங்கள் மாவட்டத்திலேயே உள்ள மனித உரிமை நீதிமன்றத்தை பற்றி தெரிந்துள்ளீர்களா?

ஆணையங்களைப் போல் அல்லாமல் தண்டனை வழங்கும் அதிகாரங்களைக் கொண்ட மனித உரிமை  நீதிமன்றங்களில் மனித உரிமை மீறல் வழக்குகள் அதிகம் பதிவாகாமல் இருப்பதற்கு என்ன காரணங்கள் என்பது   கவனிக்கத்தக்கதாகும்.  முதலாவதாக, மனித உரிமை நீதிமன்றங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இல்லை எனலாம்.  இரண்டாவதாக மனித உரிமை மீறல் வழக்குகளை பதிவு செய்து விசாரிக்க மாவட்ட அளவில் தனித்த காவல் அமைப்புகள் இல்லை என்பதாகும்.  மூன்றாவதாக, மனித உரிமை நீதிமன்றங்களின்  நடைமுறைகள் தெளிவாகவும் மக்கள் எளிதில் அணுகும் வகையிலும் உள்ளதா? .....
Theme: Old students serve for their school development, Tamil Nadu Lokayukta, Image by “The News Park”

பள்ளிகளின் வளர்ச்சிக்கும், கல்வி நிலையங்களில் ஊழல் ஒழிப்புக்கும் முன்னாள் மாணவர் சங்கங்களை ஒரு இயக்கமாக நடத்த வேண்டும் –...

அரசு நடத்தும் தொடக்கப் பள்ளிகளிலும் நடுநிலைப் பள்ளிகளிலும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் முன்னாள் மாணவர் சங்கங்களை தமிழகம்  முழுவதும் வலுப்படுத்த வேண்டும் இந்த சங்கங்கள் மூலம்  பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும் சிறப்பாக படிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்கு  உதவும் வகையில் முன்னாள் மாணவர் சங்கங்களை மக்கள் தானாக முன்வந்து ஒரு இயக்கமாக நடத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் வைத்தார்.
Theme: Husband Wife understanding, Image by “The News Park”

கணவன் மனைவி என்றால் இப்படித்தானோ! ஒரு நிமிட கதையை படியுங்கள்! சிரியுங்கள்! சிந்தியுங்கள்!

எதிரேயொருவர் கையில் ஒரு பெட்டைக் கோழியுடன் வந்தார். அவன், அந்தக் கணவனை ஏமாற்ற, “கோழியென்றால் கையிலேயே தூக்கிக் கொண்டு போய்விடலாம்” என்றதும், அதற்கும் கணவன் ஒப்புக்கொண்டு ஆட்டை அவரிடம் கொடுத்துவிட்டுக் கோழியை வாங்கிக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான். போகும்போது ஒரு பிரியாணிக் கடை! அந்தக் கடைக்காரர் அந்தக் கோழியை வாங்கி அன்றைக்குச் சமைத்துவிடத் திட்டம் போட்டு கணவனிடம் நயமாகப் பேசி, ஒரு குவளைத் தேநீருக்குக் கோழியை வாங்கிக் கொண்டான்.
Theme: Facts – Don’t worry – International Justice day, Image by “The News Park”

கவலையைப் பற்றி கவலைப் படாதே! ஒரு நிமிடம் படிக்கலாமே! + தெரிந்து கொள்ளுங்கள்  ஜூலை – 17 –...

சில பேருக்கு கவலைப்படுவதற்கு ஏதாவது இல்லை என்றால் கவலை அடைகிறார்கள். இன்னும் சிலரோ கவலைப் படுவதற்கு முன்பே கதறி அழுவார்கள். விருந்தாளியாக நுழையும் கவலை வெகு சீக்கிரத்தில் எஜமான் ஆகிவிடும்.  கவலைப்பட்டு கவலைப்பட்டு பழக்கத்தால்  மனதுக்கு கவலை ஒரு நோயாகவே ஆகி விடுகிறது. 
Theme: Facts – Criminal Justice, Image by “The News Park”

காதல் ஜோடி கொலை. தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம். காவல்துறையின் மீது நடவடிக்கையை தேவையா? பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கும்...

வழக்கின் தீர்ப்பு ஒரு பக்கம் இருக்கட்டும் தற்போது நமக்கு எழுந்துள்ள மூன்று கேள்விகளுக்கு சரியான தீர்வு தேவை என்பது எதிர்பார்ப்பாகும். 01. காவல்துறையினர் முழுமையாக சரியாக புலன் விசாரணை செய்ய தவறுவதால் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான வழக்கு தள்ளுபடி செய்வதற்கு செய்யப்படும் போது காவல்துறையினரின் மீது எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்? என்பது குறித்த தெளிவான கொள்கையும் சட்டமும் அவசியமாகும்.  02. ஒருவர் மீதான குற்ற வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு அவர் அந்த வழக்கிலிருந்து விடுதலை பெறும்போது அவர் நீண்ட நாட்கள் சிறைச்சாலையில் இருந்திருந்தால் அவருக்கு ஏற்பட்ட வாழ்க்கைக்கான உரிமை பிரச்சனைக்கு எத்தகைய நிவாரணங்களை வழங்குவது? என்ற தெளிவான கொள்கையும் சட்டமும் அவசியமாகும். 03. குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு அல்லது குடும்பத்தினருக்கு எத்தகைய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்? என்ற தெளிவான கொள்கையும் சட்டமும் அவசியமாகும்.
Theme: Facts - Gold, Image by “The News Park”

தங்கத்தைப் பற்றிய தெரிந்த மற்றும் தெரியாத உண்மைகளையும் ஏமாற்று வர்த்தக   நடைமுறைகளையும் அறிந்து கொள்ளுங்கள்!  

தங்க ஆபரணங்கள் செய்யும்போது ஒரு குறிப்பிட்ட அளவு சேதாரம் ஏற்பட்டதாக கூறி சேதார தங்கத்துக்கான பணத்தை வாடிக்கையாளரிடம்  வசூலிப்பதில்  மோசடியான நடைமுறைகள் வழக்கத்தில் இருந்து வருகின்றன. கற்கள் பதிக்கப்படாத நகைகளில் 3.5 சதவீதத்துக்கு மேலாக சேதாரம் கணக்கிடப்படக்கூடாது. இதைப்போலவே பிஸ்கட், பதக்கங்கள் போன்றவற்றில் 1.25 சதவீதத்துக்கு மிகாமல் சேதாரம் கணக்கிடப்படக்கூடாது.   சில நாடுகளில் சேதாரத்துக்கான தொகை என்று எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.  ஏனெனில், தற்போதைய நவீன தங்க ஆபரணங்கள் உற்பத்தியில் சேதாரம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக உள்ளது. இதனால், சேதாரம் என்ற பெயரில் தங்க நகை கடைக்காரர்கள் பணத்தை வசூலிப்பது சரியானது அல்ல என்று பலர்  வாதிடுகின்றனர்.  இந்த வாதம் தர்க்க ரீதியாக (logic)  ஏற்புடையதாகவே உள்ளது.