கணவன் மனைவி என்றால் இப்படித்தானோ! ஒரு நிமிட கதையை படியுங்கள்! சிரியுங்கள்! சிந்தியுங்கள்!
எதிரேயொருவர் கையில் ஒரு பெட்டைக் கோழியுடன் வந்தார். அவன், அந்தக் கணவனை ஏமாற்ற, “கோழியென்றால் கையிலேயே தூக்கிக் கொண்டு போய்விடலாம்” என்றதும், அதற்கும் கணவன் ஒப்புக்கொண்டு ஆட்டை அவரிடம் கொடுத்துவிட்டுக் கோழியை வாங்கிக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான். போகும்போது ஒரு பிரியாணிக் கடை! அந்தக் கடைக்காரர் அந்தக் கோழியை வாங்கி அன்றைக்குச் சமைத்துவிடத் திட்டம் போட்டு கணவனிடம் நயமாகப் பேசி, ஒரு குவளைத் தேநீருக்குக் கோழியை வாங்கிக் கொண்டான்.
கவலையைப் பற்றி கவலைப் படாதே! ஒரு நிமிடம் படிக்கலாமே! + தெரிந்து கொள்ளுங்கள் ஜூலை – 17 –...
சில பேருக்கு கவலைப்படுவதற்கு ஏதாவது இல்லை என்றால் கவலை அடைகிறார்கள். இன்னும் சிலரோ கவலைப் படுவதற்கு முன்பே கதறி அழுவார்கள். விருந்தாளியாக நுழையும் கவலை வெகு சீக்கிரத்தில் எஜமான் ஆகிவிடும். கவலைப்பட்டு கவலைப்பட்டு பழக்கத்தால் மனதுக்கு கவலை ஒரு நோயாகவே ஆகி விடுகிறது.
காதல் ஜோடி கொலை. தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம். காவல்துறையின் மீது நடவடிக்கையை தேவையா? பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கும்...
வழக்கின் தீர்ப்பு ஒரு பக்கம் இருக்கட்டும் தற்போது நமக்கு எழுந்துள்ள மூன்று கேள்விகளுக்கு சரியான தீர்வு தேவை என்பது எதிர்பார்ப்பாகும்.
01. காவல்துறையினர் முழுமையாக சரியாக புலன் விசாரணை செய்ய தவறுவதால் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான வழக்கு தள்ளுபடி செய்வதற்கு செய்யப்படும் போது காவல்துறையினரின் மீது எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்? என்பது குறித்த தெளிவான கொள்கையும் சட்டமும் அவசியமாகும்.
02. ஒருவர் மீதான குற்ற வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு அவர் அந்த வழக்கிலிருந்து விடுதலை பெறும்போது அவர் நீண்ட நாட்கள் சிறைச்சாலையில் இருந்திருந்தால் அவருக்கு ஏற்பட்ட வாழ்க்கைக்கான உரிமை பிரச்சனைக்கு எத்தகைய நிவாரணங்களை வழங்குவது? என்ற தெளிவான கொள்கையும் சட்டமும் அவசியமாகும்.
03. குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு அல்லது குடும்பத்தினருக்கு எத்தகைய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்? என்ற தெளிவான கொள்கையும் சட்டமும் அவசியமாகும்.
தங்கத்தைப் பற்றிய தெரிந்த மற்றும் தெரியாத உண்மைகளையும் ஏமாற்று வர்த்தக நடைமுறைகளையும் அறிந்து கொள்ளுங்கள்!
தங்க ஆபரணங்கள் செய்யும்போது ஒரு குறிப்பிட்ட அளவு சேதாரம் ஏற்பட்டதாக கூறி சேதார தங்கத்துக்கான பணத்தை வாடிக்கையாளரிடம் வசூலிப்பதில் மோசடியான நடைமுறைகள் வழக்கத்தில் இருந்து வருகின்றன. கற்கள் பதிக்கப்படாத நகைகளில் 3.5 சதவீதத்துக்கு மேலாக சேதாரம் கணக்கிடப்படக்கூடாது. இதைப்போலவே பிஸ்கட், பதக்கங்கள் போன்றவற்றில் 1.25 சதவீதத்துக்கு மிகாமல் சேதாரம் கணக்கிடப்படக்கூடாது. சில நாடுகளில் சேதாரத்துக்கான தொகை என்று எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. ஏனெனில், தற்போதைய நவீன தங்க ஆபரணங்கள் உற்பத்தியில் சேதாரம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக உள்ளது. இதனால், சேதாரம் என்ற பெயரில் தங்க நகை கடைக்காரர்கள் பணத்தை வசூலிப்பது சரியானது அல்ல என்று பலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தர்க்க ரீதியாக (logic) ஏற்புடையதாகவே உள்ளது.
தமிழக அரசியல் கட்சிகள் திட்டமிட்டு உடைக்கப்படுகின்றனவா? 75 வயது நிறைவடைந்ததும் பிரதமருக்கு ஓய்வா? ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்!...
தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் மூலமாக வழங்கப்படும் 46 சேவைகள் மற்றும் நகர்புறங்களில் 13 துறைகளின் மூலமாக வழங்கப்படும் 43 சேவைகள் ஆகியவற்றை விரைவாக வழங்கவும் குடிமக்களின் குறைகளை அறியவும் தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரம் சிறப்பு முகாம்களை நடத்தும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கியுள்ளார். இத்தகைய திட்டத்தின் மூலம் பொதுமக்களின் புகார் மீது 45 நாட்களில் முடிவு காணப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும், இந்தத் திட்டத்திற்கு சட்ட அங்கீகாரத்தை வழங்கினால் அந்த பெருமை தமிழக முதலமைச்சரை சேரும். புதிதாக ஒரு சட்டத்தை இயற்றி மாநில சேவை உரிமை ஆணையம் போன்ற புதிய அமைப்பு ஏற்படுத்துவதில் நிதிச் சுமை போன்ற சிரமங்கள் இருந்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட சேவை உரிமை அலுவலர் மற்றும் குடிமக்களின் குறைதீர் அலுவலரை நியமித்து மக்களின் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காண வழி வகுக்கலாம். இந்த விண்ணப்பங்கள் மீதான மேல்முறையீட்டு மன்றமாக தமிழ்நாடு லோக் ஆயுக்தாவை அறிவிக்கலாம். கடந்த தேர்தலுக்கு முன்பாக சேவை உரிமைச் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் லோக் ஆயுக்தா வலுப்படுத்தப்படும் என்றும் திமுக கூறிய நிலையில் மேற்கண்ட திட்டத்தை அமல்படுத்தினால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்றார் வாக்காளர் சாமி.
பள்ளிகளில் “ப” வடிவ இருக்கையில் உள்ள நன்மைகள் மற்றும் சிரமங்கள் + நூறு ரூபாயில் புற்று நோயை அழிக்க,...
இத்தகைய வரிசை முறை மாணவர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்துகிறது என்றும் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களிடமிருந்து சமமான கவனம் கிடைப்பதும் கிடைப்பதில்லை என்றும் கருதப்படுகிறது. இதனை மாற்றும் நோக்கத்துடன் அரை வட்ட வடிவ வடிவில் மாணவர்கள் இருக்கை பள்ளி வகுப்புகளில் இருப்பது போன்று ஒரு படம் கேரளாவில் வெளியானது. இந்த படத்தின் மூலம் பள்ளி வகுப்பறை இருக்கைகளில் மாற்றம் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கேரளா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் “ப” வடிவ இருக்கை முறையை பள்ளி வகுப்புகளில் ஏற்படுத்த நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
1.யாரிடம் பணம் தங்காது?,2. பிறரை வசியம் செய்திட வேண்டுமானால்…, 3. எங்கே தவறு நேர்ந்ததென்று பாருங்கள்!, 4. அந்தாளு...
மதிப்பிற்குரிய காவல்துறை அதிகாரி ஐயா, என் வீட்டில் கடந்த செவ்வாய் அன்று என் மனைவி கருவாட்டு குழம்பு வைத்தார். செவ்வாய், புதன் என இரண்டு நாள்கள் கருவாட்டு குழம்போடு ஓடியது. மூன்றாம் நாள் வியாழக்கிழமை நாளை என்ன குழம்பு என்று கேட்கும் போது கருவாட்டு குழம்பு தான் இருக்கே, அதுவே இன்னும் மூன்று நாளைக்கு வரும், சூடு பண்ணி வைக்கிறேன்' என்று சொன்னார். இது இந்த வாரம் மட்டுமல்ல கடந்த ஏழு வருடங்களாகவே தொடர்கிறது.
விண்ணைத் தொடும் காலி மனை இடம், நிலத்தின் விலை – காரணம் என்ன? எப்படி கட்டுப்படுத்துவது?
பணத்தை நிலத்தில் முதலீடு செய்பவர்கள் உண்மையாக சந்தையில் ஒரு ஏக்கர் நிலம் எவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறது என்பதை காட்டிலும் பல மடங்கு கொடுத்து ஒரே இடத்தில் நிலத்தை வாங்குகிறார்கள். தமிழகம் முழுவதும் விவசாயம் செய்யாமல் கம்பி வேலி போடப்பட்ட நிலங்கள் அதிகரித்துள்ளதால் விவசாயத்திற்காக சிறிது நிலம் வாங்க விரும்பும் சிறு விவசாயிகளும் சிறு தொழில் நடத்த நிலம் வாங்க விரும்பும் குறுந்தொழில் புரிபவர்களும் நிலத்தை வாங்க முற்படும் போதும் அதிக வருமானம் பெறுபவர்கள் உண்மையான விலையைக் காட்டிலும் கூடுதலாக கொடுத்து வாங்கிய விலையைத்தான் நிலத்தின் உரிமையாளர்கள் கேட்கிறார்கள்.
பிரச்சனை என்பது ஊதினால் பறக்கும் காகிதத்தைப் போன்றதே + நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்...
ஒரு பள்ளிக்கூடத்தில் தேர்வு நடந்து கொண்டு இருந்தது. குழந்தைகளும் தேர்வுக்குத் தயாராக வந்தார்கள். வகுப்பிலேயே புத்திசாலியான பையனுக்கு எல்லாக் கேள்விகளுக்கான விடை தெரிந்தாலும், கடைசி கேள்வியைப் பார்த்த போது கவலை அடைந்தான். கடைசிக் கேள்வி என்னவெனில், “தினந்தோறும் பள்ளிக்கூடத்துக்கு வரும், முதல் மனிதரின் பெயர் என்ன?“
சீட்டுக்கட்டில் வாழ்வியல் உள்ளது தெரியுமா? + விமர்சனங்களை தாண்டி வெற்றி நடை போடுங்கள் + அறிவோமே சபை நாகரீகம்...
ஒரு ஆண்டுக்கு 52 வாரங்கள், சீட்டுக் கட்டிலும் 52 சீட்டுகள். ஒவ்வொரு பருவத்திலும் 13 வாரங்கள், ஒவ்வொரு வகையிலும் 13 சீட்டுகள். ஒரு ஆண்டுக்கு நான்கு பருவங்கள, சீட்டுக்கட்டிலும் நான்கு வகையான சீட்டுகள். ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள், சீட்டுக்கட்டிலும் ராஜா, ராணி, ஜாக் என்ற முகங்களைக் கொண்ட சீட்டுகள் 12.