உங்கள் தங்கையை அழைத்து கொண்டு ஓடி விட்டால் என்ன செய்வீர்கள்? – ஐஎஎஸ் நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி....
கேள்வி : ஒரு முட்டை மேலிருந்து கான்கிரிட் தரையில் போடப்படுகிறது ஆனால் உடையவில்லை ஏன்? பதில்: ஏன்னா கான்கிரிட் தரை முட்டையை விட பலமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
நவகிரக கோவில்கள்: கஞ்சனூரில் அமைந்துள்ள யோககாரகன் சுக்கிர பகவான் தலம்
நவகிரகங்களில் யோககாரகன் என அழைக்கப்படுபவர் சுக்கிரன். இவர் அசுரர்களின் குலகுருவாக போற்றப்படுபவர். வாழ்விற்கு தேவையான அத்தனை சந்தோஷங்களையும் தரக்கூடியவர் சுக்கிரன்தான். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிர பலம் சரியாக இருந்தால் தான் மண வாழ்க்கை, மகப்பேறு, மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது அமைய முடியும் என்பது நம்பிக்கை.
தூங்கியதால் சாதனை படைத்த ஜார்ஜ் பெர்னார்டு டான்சிக். தவறவிட்ட சந்தர்ப்பங்கள் முன்னேற்றும் படிக்கற்களாக அமைகின்றன –...
கணித பேராசிரியர் பாடத்தை துவக்கினார். பாடத்தை துவக்கிய சில நிமிடங்களிலேயே அந்த மாணவனுக்கு உறக்கம் கண்களை சொக்கிக் கொண்டு வந்தது. அவனையும் அறியாமல் உறங்கினான். திடீரென மற்ற மாணவர்களின் சலசலப்பு சத்தம் கேட்டு கண் விழித்தான். கணித வகுப்பு முடிந்து பேராசிரியர் வெளியேறி இருந்தார். உறங்கியதை நினைத்து வெட்கப்பட்டுக் கொண்டே கரும்பலகையைப் பார்த்தான். பேராசிரியர் கரும்பலகையில் இரண்டு கணிதங்களை கேள்வியாக எழுதி வைத்திருந்தார்.
போலீசால ஒரு தடவை கூட என்னைப் பிடிக்க முடியலை’ – ஒரு நிமிடக் கதை + முயலுங்கள்! முன்னேறுவீர்கள்! ...
அவனைப் பார்த்ததுமே அவனது மனைவிக்கு புரிந்து போனது. இந்த முறையும் வேலை காலி. ஒரு மாதத்திற்குள் ஒன்பது இடத்திற்கு வேலைக்கு போன ஒரே நபர் இவனாகத்தான் இருக்கும். வேலைக்கு வைத்திருப்பவர்கள் ஏதாவது ஒரு வேலை செய்யச் சொன்னால் அதற்கு எதிர்மாறான வேலையை செய்யச் சொல்லி இவனது மூளை கட்டளையிடும். விளைவு? வேலைக்கு சேர்ந்த வேகத்தோடு வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். வேலையில்லாமல் இவன் திரும்பி வருவது ஒன்றும் புதிதல்ல.
இப்படிப்பட்ட நல்ல மனிதர்களும் இன்னும் இருக்கிறார்கள்! வலைத்தளத்தில் படித்த கண்ணீர் வரவழைக்கும் ஒரு நிமிடக் கதை
மேலாளர் சிலையாக உறைந்திருந்தார். “அய்யோ… பிள்ளை செத்ததே அவங்களுக்கு தெரியாதா?”“தெரியாது சார். அங்கே நிரவிக்கு போய் நிலைமையை பார்த்ததும், என் அம்மாவுக்கும், மனைவிக்கும் போன் செய்து விவரத்தை சொல்லி சுந்தரேசனுக்கு, அவங்க முறைப்படி இறுதிக்கடன் செய்ய ஏற்பாடு செய்ய சொல்லிட்டேன். அந்தம்மாவுக்கு பிள்ளை இறந்த சேதி தெரியவே வேண்டாம் சார். ஏதாவது சாக்கு போக்குச் சொல்லி சமாளிச்சுடுவேன். இனி, அவங்களுக்கு பிள்ளையா இருந்து காப்பாத்தறது என் பொறுப்பு.”
30 நிமிட வேலைக்கு கட்டணம் 1,99,000/- ரூபாயா? ஏன்? என்பதையும் இன்றே தொடங்குங்கள் என்பதற்கான காரணங்கள் என்ன?...
நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க விரும்பினால், உங்களை நீங்களே நம்புவதன் மூலம் தொடங்குங்கள். நீங்கள் ஒரு புதிய திறமையைக் கற்றுக்கொள்ள விரும்பினால், தினமும் பயிற்சி செய்வதன் மூலம் தொடங்குங்கள். நீங்கள் படைப்பாற்றல் மிக்கவராக இருக்க விரும்பினால், புதிய விஷயங்களை முயற்சிப்பதன் மூலம் தொடங்குங்கள். நீங்கள் மதிக்கப்பட விரும்பினால், மற்றவர்களை மதிப்பதன் மூலம் தொடங்குங்கள். நீங்கள் வலுவான உறவுகளை உருவாக்க விரும்பினால், நம்பகமானவராக இருப்பதன் மூலம் தொடங்குங்கள்.
தற்போதைய இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ள ட்ரோன் யுத்தம் பற்றி அறிவோம்!
அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், சீனா, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் ராணுவ ட்ரோன்கள் அதிகமாக உள்ளன. இதன் மூலம் வெளிநாட்டின் மீது யுத்தம் நடத்தும் போது அந்த நாட்டுக்குள் சென்று தாக்குதல் நடத்தும் மனிதர்களின் உயிரிழப்பு தடுக்கப்படுகிறது. சமீபத்தில் ரஷ்யா தொடர்ந்து ட்ரோன்கள் மூலமாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
முதலாவது இந்தியா பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் கைப்பற்றிய வடக்கு நிலங்கள் மற்றும் ஆசாத் காஷ்மீர் பற்றி தெரிந்து...
பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட வடக்கு நிலங்கள் தற்போது கில்கித் மற்றும் பல்திஸ்தான் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையே காஷ்மீரின் வடக்கு பகுதியை குறிக்க வடக்கு நிலங்கள் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியது. வடக்கு நிலங்கள் காஷ்மீரின் பகுதி என்றாலும் இதற்கு, மேற்குப் பகுதியான ஆசாத் காஷ்மீருக்கு உள்ள அதிகாரங்களை பாகிஸ்தான் அரசு அளிக்கவில்லை.
உங்கப்பனை கொன்னுட்டியே தம்பி. கண்ணீரை வரவழைக்கும் ஒரு நிமிடக் கதை உண்மைச் சம்பவம்
பீரோவை நோட்டமிட்டான். உள்ளே ஐந்து கிழிந்து போன மூன்று பழைய சட்டைகள். இரண்டு வேஷ்டிகள். நூல் பிரிந்த டவுசர்கள் இருந்தன. கண்களில் நீர் வடிய பார்த்துக் கொண்டே இருந்தான். உறவினர் சொன்னார், 'இப்படியே பேசாமல் இருந்தால் எப்படி தம்பி? அவரோட எச்சம்னு எதுவும் இருக்கக்கூடாது. சட்டுனு அதை அழிச்சுரு'
யுத்தம் தொடங்கிவிட்டது…… எப்படி நகர போகிறது?
யுத்தம்.. யுத்தம்.. யுத்தம்.. வரும், ஆனா வராது என்ற தலைப்பில் நேற்று பூங்கா இதழில் கட்டுரை வெளியானது. “மிகவும் அவசியமானது என்ற நிலை வரும் வரை இந்தியா நேரடியாக போரை தொடங்காது என்றும் பாகிஸ்தான் மீது மிகப்பெரிய பொருளாதார தாக்குதலையும் எல்லைகளை பலப்படுத்தி எல்லை பிரதேசங்களில் உள்ள பயங்கரவாதிகளை அழிக்கும் போரையும் இந்தியா நடத்தும் என்றே சர்வதேச பார்வையாளர்கள் கருதுகிறார்கள்” என்று நேற்றைய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை வெளியான 24 மணி நேரத்துக்குள் பாகிஸ்தானுக்குள்ளும் பாகிஸ்தான் கைப்பற்றியுள்ள காஷ்மீரிலும் இந்திய ராணுவம் துல்லிய தாக்குதலை நடத்தியுள்ளது.