இரண்டாம் ஆண்டில் அமைதிக்கான உத்திகள் நிறுவனம் – நுகர்வோர் பூங்கா & பூங்கா இதழ் இணைய பத்திரிகை பணிகளில்...
Job opportunities for Marketing Executives and Content Writers – interested candidates may register your willingness through [email protected]/ & [email protected] or to 9487665454 by WhatsApp. Registered candidates will be contacted.
கையில் ஒன்றும் இல்லாமல் இருந்து ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு சொந்தக்காரரானரின் கதை
"பிழைக்கத் தெரியாத முட்டாள்" என்று 18 வயது இளைஞனை அவனது அப்பா திட்டினார். தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன் என்று கேலி பேசினார்கள் அவனது நண்பர்கள். அந்த இளைஞன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை செய்துக் கொண்டிருப்பார்கள். அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியை தனதாக்கிய அந்த மாமனிதன் தான் “சாய்க்கிரோ ஹோண்டா”.
கண்ணீரை வரவழைக்கும் தனுஷ்கோடி – ஆண் கடலும் பெண் கடலும் சங்கமிக்கும் அழகை பாருங்கள்
1964 அன்று டிசம்பர் 22 ஆம் நாள் தெற்கு அந்தமான் கடலில் சிறு காற்று அழுத்தம் உருவானதாக ஐந்து நாட்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்தது. காற்றழுத்த தாழ்வு நிலை 1964 டிசம்பர் 19ஆம் தேதி புயலாக மாறிய நிலையில் 1964 டிசம்பர் 22 ஆம் நாள் இரவு அதிக வேகமான காற்றும் 7 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் அதிக வேகத்துடன் தனுஷ்கோடியை வந்தடைந்தது. இதன் காரணமாக ஒட்டுமொத்த நகரமும் நீரில் மிதந்தது. 7 மீட்டர் உயரம் என்பது ஏறக்குறைய 23 அடி ஆகும். இப்பேரலையில் சுமார் 1800 பேர் இறந்திருக்க கூடும். இந்தியா, இலங்கை என இரண்டு பகுதிகளுமே பாதிப்புக்கு உள்ளானது. அதே வேளையில் பாம்பன்- தனுஷ்கோடி பாசஞ்சர் ரயில் தனுஷ்கூடியை நெருங்கிக் கொண்டிருந்தது அப்பொழுது கடல் நீர் முழுவதுமாக ரயிலை தண்ணீரில் அடித்துச் சென்றது.
விஞ்ஞானிக்கு மரண தண்டனை வழங்கியது சரிதானா? வலைத்தளத்தில் படித்த பிடித்த கதை
வெற்றியடைய எந்த தகுதியும் தேவையில்லை. உங்கள் இதயம் கூறுவதை பின்பற்றி உங்களை உற்சாகமூட்டும் வேலையை செய்பவராக இருந்தால் உங்கள் வெற்றி உறுதியாகிவிட்டது. தேவையான தகுதிகளை வளர்த்துக் கொள்ளுங்கள். புதிய யோசனைகள் மற்றும் திறனாய்வு சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள். எதிலும் மோதல் வேண்டாம். உங்களுக்கான நேரம் வரும்வரை மௌனமாக காத்திருங்கள். ரிஸ்க் எடுக்க தயங்காதீர்கள். நீங்கள் செய்யும் வேலையின் மீது தீராத காதல் வேண்டும். தெளிவான கருத்து பரிமாற்றம் அவசியம். முடிந்தால் உங்கள் தலைவரின் வேலையை சேர்த்து செய்யுங்கள்.
தமிழகத்துக்கு புதிய ஆளுநரா? இந்த அரசியல் ஆய்வாளருக்கு எப்படி நேரம் கிடைக்கிறது? என்பது உள்ளிட்ட கருத்து மூட்டைகளுடன் வாக்காளர்...
இது மட்டுமல்ல. அவர் பல்கலைக்கழக மானிய குழுவால் வழங்கப்பட்டுள்ள சில ஆய்வுத் திட்டங்களையும் மேற்கொண்டுள்ளார். சில விருதுகளை பெற்றுள்ளதோடு அரசியல் அறிவியல் கல்வி தொடர்பான பல குழுக்களில் தலைவராகவும் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், பிஎச். டி., எம். பில்., பட்டத்துக்காக ஆய்வு செய்யும் மாணவர்கள் பலருக்கு ஆய்வு வழிகாட்டியாகவும் (Research Guide) இருந்துள்ளார். தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் திறம்பட பணியாற்றியதோடு ஆணையத்திற்கான மாதிரி விதிகளை (Model Rules) சமர்ப்பித்தவரும் தற்போது மாவட்ட நுகர்வோர் நீதிபதியாக இருப்பவருமான டாக்டர் வீ. ராமராஜ் அவர்களுக்கு பிஎச். டி., எம். பில்., பட்ட வழிகாட்டி டாக்டர் பி சக்திவேல் ஆவார்
மனைவியை கொலை செய்தது நியாயம்தான் – வலைத்தளத்தில் படித்த ஒரு நிமிடக் கதை
வரிசையாக அனைவரும் நின்று, உயிர் காப்புப் படகில் ஏறிக்கொண்டு இருந்தனர். அந்தக் கப்பலில் ஒரு இளஞ்ஜோடி இருந்தனர். இந்த இளம் ஜோடி படகில் ஏறும் தருணத்தில் ஒருவருக்கு மட்டும்தான் படகில் இடம் இருந்தது. அந்த சமயத்தில் அந்த மனிதன் தன்னுடைய மனைவியை வரிசையை விட்டு நீக்கி விட்டு, அவன் முன்னால் வந்து படகில் குதித்தான். மூழ்கிக்கொண்டு இருக்கும் கப்பலில் நின்று கொண்டு இருந்த அந்த பெண்மணி தன்னை விட்டுச் சென்றுகொண்டு இருக்கும் கணவனைப் பார்த்து உரத்த குரலில் ஒரு வாக்கியத்தைக் கூறினாள்.
மறந்து போன தமிழர் கலாச்சாரம்: வெற்றிலையிலும் ஆண் வெற்றிலை, பெண் வெற்றிலையா? புறக்கணிப்போம்
வெற்றிலையுடன் புகையிலை சேர்ந்து உண்ணும் பழக்கம் கணையம் மற்றும் உணவு குழாய் புற்று நோய்களை உருவாக வழி வருகிறது. புகையிலை உடன் கலக்கும் பொழுது வெற்றிலை பாக்கு மெல்லும் பழக்கத்தை கைவிடுவது மிக கடினமாகும். வெற்றிலை ஆகிய மருந்தை அளவாக உட்கொண்டு பயனை பெறுவதே உடலுக்கு மிகச் சிறந்தது. உடல் நலத்துக்கு பலனளிக்கும் மறந்து போன தமிழர்களின் வெற்றிலை கலாச்சாரத்தை மீட்டெடுப்போம். ரசாயன கலவைகளை கொண்ட “பான்” போன்ற அந்நிய கலாச்சாரத்தை புறக்கணிப்போம்.
மருத்துவம் என்ற பெயரிலான சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட சட்டத்தை அமல்படுத்த காலதாமதம் செய்வது ஏன்?
மருத்துவம் மற்றும் மருத்துவக் கல்வி என்ற பெயரில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி மக்களை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை அமல்படுத்துவது ஏன் காலதாமதம் செய்யப்படுகிறது? என தெரியவில்லை. இந்த சட்டத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.
பேய் இருக்கிறதா? இல்லையா? உள்ளிட்ட கருத்து மூட்டைகளுடன் வாக்காளர் சுவாமி
“சரி சாமி, பேய் இருக்கிறதா? இல்லையா?” என்று வாக்காளர் சாமியிடம் கேட்டபோது “இது குறித்து பல விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. பூங்கா இதழில் நீங்களும் ஒரு கட்டுரை வெளியிடுங்கள் என்பதற்கு இந்த செய்தியை கூறினேன் “ பேய் கருத்து முட்டையை கட்டி வைத்தார் வாக்காளர் சாமி. பேய் இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்த கருத்துக்களை வாசகர்களும் என்ற [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு வாரத்துக்குள் அனுப்பலாம். தகுதி வாய்ந்த கருத்துக்கள் விரைவில் வெளியாகும் பேய் குறித்த கட்டுரையில் இடம்பெறும். “இன்று பூங்கா இதழின் 30 பயிற்சி கட்டுரையாளர்களுக்கும் கூட்டம் நடைபெறுகிறது அல்லவா? முதலில் அவர்கள் சிலரிடம் பேய் இருக்கிறதா? இல்லையா? என்று கருத்து கேட்டு வெளியிடுங்கள்” என்று வாக்காளர் சாமி வேண்டுகோள் வைத்தார்.
பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் வேண்டும் சமத்துவம்- பல்கீஸ் பீவி. மு, சட்டக் கல்லூரி மாணவி
பல இடங்களில் ஆண்களுக்கு சட்டத்தில் சம உரிமை வழங்கப்படவில்லை . உதாரணமாக, தவறான அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளை ஆண்கள் மீது சுமத்துவது குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் மூலம் அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது. ஆண்களும் சில தருணங்களில் பெண்களால் அச்சுறுத்தி கற்பழிக்கப்படுகிறார்கள். இவ்வாறு பாதிக்கப்படும் ஆண்கள் புகார் செய்தால் சம்பந்தப்பட்ட பெண்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு சட்டத்தில் இன்றளவும் இடமில்லைஎன்பதும் சமத்துவமின்மையே. பெண்களுக்கு முன்னுரிமை என்ற பெயரில் ஆண்களுக்கு சமத்துவம் வழங்கப்படாத அநீதியும் சில நிகழ்வுகளில் தொடர்ந்து இருந்து வருவது மறுக்க முடியாத உண்மையாகும்.